jaga flash news

Saturday 4 October 2014

பூராடம் நட்சத்திரம் என்றால் என்ன நடக்கும் ?

பூராடம் நட்சத்திரத்தில் ஒரு பெண் பிறந்தால் "அவள் கழுத்தில் நூல் ஆடாது " ( தாலி கயிறு நிலைக்காது ) என்று பலரும் வழக்கத்தில் கூறுவதை நான் கண்டு இருக்கிறேன் .

உண்மையில் நான் ஆராய்ந்து பார்த்ததில் பலரின் வாழ்க்கை மிகவும் ஏற்றமாக இருப்பதை கண்டேன். சுகமாக வாழ்வதை கண்டேன்.

பூராடம் ஒன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தையால் தந்தைக்கும் 

பூராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்த குழந்தையினால் தாய்க்கும் 

பூராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தையினால் குழந்தைக்கும்

பூராடம் நாலாம் பாதத்தில் பிறந்த குழந்தையினால் தாய் மாமனுக்கும் 

தோஷம் ஏற்படுகிறது.

ஒரு பெண்ணுக்கு பூராடம் நட்சத்திரம் இருந்தால் அந்த பெண்ணை மணப்பதற்கு தயங்குகிறார்கள். இந்த காரணத்தினாலேயே அவளின் திருமணம் தள்ளி போகிறது. அதனால் தாமத திருமணம் நடக்கிறது.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அய்யா.. வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா பூராடம் நட்சத்திரத்தின் வட மொழிப் பெயர் : "பூர்வாஷாடா". அய்யா அடியேன் கற்றவரையில், ஒரு சிறு குறிப்பு : இந்த நட்சத்திரத்தின் எண்ணிக்கை : 4
    உருவ வட்டம் : அரைவட்ட சந்திரன். மண்டலம் : வாயு மண்டலம். கணம் : மணித கணம்.
    மிருகம் : ஆண் குரங்கு
    நட்சத்திரத்தின் பெயர் : *கெளதாரி.* மத்திய நாடி. வேதை : பூசம் . வேதை என்றால்.. ஒரு கிரகம் ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது, மற்றொரு கிரகம், இன்னொரு ராசியில் சஞ்சரிக்கும். அந்த சஞ்சாரத்தின் போது, ஒன்றின் செயல்பாட்டை மற்றொன்று நிறுத்தும். இதற்கு பெயர்தான் வேதை அய்யா. "நல்ல செயல்பாடு, தீய செயல்பாடு எதுவானாலும் தடுத்து நிறுத்தப்படும். அதாவது, சந்திரனுக்கு − புதனால் ; புதனுக்கு − சந்திரனால் வேதை இல்லை. அதுமாதிரி, சூரியனுக்கு − சனியால்; சனிக்கு − சூரியனால் வேதை இல்லை.
    வேதக தோஷம்" : சூரியனுக்கு 11−ம் வீட்டில் சுக்கிரன்; சந்திரனுக்கு 3−ம் வீட்டில் சூரியன்; குருவுக்கு 12−ம் வீட்டில் சூரியன்; புதனுக்கு 3−ம் வீட்டில் அங்காரகன்; சனிக்கு 7−ம் வீட்டில் அங்காரகன்; சுக்கிரனுக்கு 4−ம் வீட்டில் சனி; இவ்வாறு இருக்கும் போது வேதை உண்டாகும். நட்சத்திரத்தின் நிறம் : வெண்மை. பாலினம் : பெண். இருப்பிடம் : வெட்டவெளி. திருச்சிற்றம்பலம் அய்யா.

    ReplyDelete