jaga flash news

Thursday 16 October 2014

அரிட்டம் என்பது என்ன?

அரிட்டம் என்பது எதுவரை?
அரிட்டம் என்று செந்தமிழில் சொன்னாலும், அரிஷ்டம் என்று வடமொழியில் அழுத்திச் சொன்னால்தான் நம்மில் பலருக்கும், “சட்டென்று” புரிபடும்.
முதலில் அரிட்டம் என்கிற சொல்லுக்கு அமங்களம், கேடுகள், பிறவித் துன்பம், பங்கம், மரணக்குழி, வலி முதலிய அர்த்தம்தான் கிடைத்தன. இந்த பிறவி அடையும் துன்பத்தை ஐந்துவகையாகப் பிரித்து வைத்துள்ளார்கள். அது என்னவெனில்,
1) ஒரு உயிர் பிறந்ததில் இருந்து 12 வயதுவரை அடையும் துன்பமே _பாலகத் துன்பமாகும்.
2) ஒரு உயிர் 13வயதில் இருந்து 20 வயதுவரை அடையும் துன்பமே _ குமார பருவத் துன்பாகும்.
3) ஒரு உயிர் 21 வயது முதல் 32 வயதுவரை அடையும் துன்பமே _ இளம்பருவத் துன்பமாகும்.
4) ஒரு உயிர் 33 வயது முதல் 70 வயதுவரை அடையும் துன்பமே _ முதிர்பருவத் துன்பமாகும்.
5) ஒரு உயிர் 71 வயது முதல் 120 வயதுவரை அடையும் துன்பமே _ நிறைபருவத் துன்பமாகும்.
.
இறப்பு என்பது மூன்று வகைப்படும்.
1) பிறப்பு முதல் 32 வயது வரை குறைவாயுள்.
2) 33 வயது முதல் 60 வயது வரை நடுத்தரஆயுள்.
61 வயது முதல் 120 வயது வரை நிறை ஆயுள்.
ஒன்று, எட்டு, பத்தாமதிபதிகள் அடைந்திருக்கும் பலத்தைப் பொறுத்தே ஒருவருக்கு ஆயுள்பலம் அமைகிறது.
இந்த பிறவிக் கடலை நீந்திக்கடக்க, ஏழுபிறவிகளைக் கொண்டுள்ளோம். இதற்காக நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாள் கணக்கு 360 வருடங்கள். இந்த 360 வருடத்தை ஏழுபிறவிகளுக்குள் பகிர்ந்து கொண்டுதான், கர்மக்கடன்களை முடிக்கப்போகிறோம். ஒருவர் பிறந்து சில வருடங்களில் இறக்கலாம். மற்றொருவர் 60 வயது வரை வாழலாம். இன்னொருவர் 80 வயதுவரை வாழலாம். இப்படி ஏழுபிறவிக்கும் 360 வருடங்களைப் பிரித்து வாழ்வோம். இந்த ஆயுளில் ஜோதிடர்களாகிய நாமும் சுத்த ஆத்மாவாக வாழ்ந்து, நம்மை நாடிவருகிற அப்பாவி மக்களையும், அவர்களின் ஜீவ ஒளியான ஆத்மாவையும் ஈடேற்றம் அடையச் செய்யவும் வழி காட்ட வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஏமாற்றி, பிற்போக்குத்தனமாக நடத்திச் சென்றால், நாம் ஜோதிடர்கள் என்று சொல்ல அருகதை அற்றவர்களாகப் போய்விடுவோம். நமக்குக் கிடைத்த இப்பிறவியில் நற்பணியாற்றுவோம்

No comments:

Post a Comment