jaga flash news

Tuesday 17 February 2015

16 வகை அபிஷேகம் செய்ய16 வகை சம்பத்துகளையும் பெறலாம்.

ஸ்ரீ மகாவிஷ்ணு அலங்காரப்பிரியர். சிவன் அபிஷேகப் பிரியர் என்பது முன்னோர் வாக்கு. பால் பாவம் நீக்கும், தயிர் நோய் நீக்கும். தேன் இல்லத்திற்கு இனிமை சேர்க்கும்,
இளநீர் பகைமை நீக்கும், மஞ்சள் மங்கலம் சேர்க்கும், சந்தனம் குடும்ப ஒற்றுமை ஏற்படுத்தும். பழரசம் தொழில் மேன்மை தரும். கரும்புச் சாறு பித்ருக்கள் சாபம் நீக்கும், எலுமிச்சம் பழச்சாறு சத்ரு சம்ஹாரம், பஞ்சாமிர்தம் கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படுத்தும். நெய் சிவனருள் கிட்டும். அரிசி மாவு கடன் நீக்கும், நல்லெண்ணெய் புத்திரபேறு அளிக்கும்.
புனிதநதி தீர்த்தம் நாம், நம் முன்னோர்கள் அனைவரின் பாவம் நீங்கி இப்பிறவியிலேயே எல்லா நலனையும் அளிக்கும். தாழம்பூ இன்று ஒரு நாள் மட்டும் சிவகதி அளிக்கும்.
மேற்கண்ட 16 வகை பொருட்களை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய அல்லது சிவ ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய அளிக்க 16 வகை சம்பத்துகளையும் பெறலாம். இவையே 16 பேறு என்கிறது லிங்க புராணம்.

No comments:

Post a Comment