jaga flash news

Wednesday 18 February 2015

திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல்தமிழில்கண்திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறுகழித்தல் என்று கூறுவார்கள்

குழந்தை திருஷ்டி;
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான்அழகோஅழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுறதிருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டிபொட்டுஎளிமையான இது எல்லோராலும்செய்யக்கூடிய ஒன்று.நெற்றியிலும்கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டுகுழந்தையின் திருஷ்டியை போக்கும்.கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையைவைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்என்பது நம்பிக்கை!.

வாலிப திருஷ்டி;
ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு இளைஞனையோ/வாலிபபெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும்வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியிலபோட்டுடுங்கதண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சிபோய்விடும்.
பெரியவங்களுக்கு;
புதிய சட்டி ஒன்றுஊமத்தங்காய்படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டுபெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய்,படிகாரம்தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரைஇறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள்.கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள்இதனால்யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும்பின்னர் வீடு திரும்பி கைகால் கழுவி தலையில்சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் . பிள்ளையையும் அவ்வாறேசெய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.
மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒருதட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.
இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய்உப்பு சிறிது தெருமண்தலைமுடி இவற்றினைகையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணுஉறவு கண்ணு,நாய் கண்ணுநரிக் கண்ணுநோய்கண்ணுநொள்ள கண்ணு கண்டக்கண்ணுகள்ளக்கண்ணுஅந்த கண்ணுஇந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகுபோல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றிஅடுப்பில்போடுவார்கள்.
இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!
இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்துவந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்.

No comments:

Post a Comment