jaga flash news

Wednesday 18 February 2015

காயத்ரீ மந்திரம் - உலகம் உணரும் அருமை !

தினமும் காலை 7 மணி முதல் 15 நிமிட நேரத்திற்கு Republic of Suriname நாட்டில் ரேடியோ பரமரிபோவில் காயத்ரீ மந்திரம் ஒளிபரப்ப படுகின்றது. கடந்த இரு வருடங்களாக இது நடை பெற்று வருகின்றது.

இதுபோலவே ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டர் டேம் நகரலிருந்து கடந்த 6 மாதமாக காயத்ரீ மந்திரம் ரேடியோவில் ஒளிபரப்பி கொண்டு வருகின்றது.
இது தவிர டாக்டர். ஹோவார்டு ஸ்டீம் கிரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி உலகத்தில் உள்ள எல்லா மதங்களின் மந்திரங்களையும் சேகரித்தார். ஹிந்துக்களின் வேத மந்திரமான காயத்ரீ மந்திரம் தான் மிக சிறந்த பலன் கிடைகிறது என்பது இவர் ஆராய்ச்சி முடிவு. ஒரு வினாடிக்கு 1,10,000 ஒலி அலைகளை காயத்ரீ மந்திரம் எழுப்புகின்றது: இது தான் உலகிலேயே மிகச் சக்தி வாய்ந்த மந்திரம் என்று இவர் கூறுகின்றார்.

காயத்ரீ மந்திரம் உடலுக்கும் மனதுக்கும் தரும் நன்மைகளை ஹாம்பர்க் பல்கலை கலக்கம் ஆராய்ச்சி ,மூலம் கண்டறிந்து வருகிறது .

அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார்.
வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது
ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத்
தூய்மைப்படுத்துகிறது!

க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி.
மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.

No comments:

Post a Comment