jaga flash news

Saturday 25 April 2015

தவறுகள்

மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்கிறார். அச்சமயம் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் தவிக்கிறது. எனென்றால் மனம் பாதிக்கப்பட்டு நரம்பின் கடத்தும் தன்மை உயராமல் தம் பிரச்னைகளுக்கு தீர்வுகளை அறிய முடியாமல் மயங்குகின்றனர்.
மனிதமனம் தெளிவற்று இருக்கும் போது மனதில் உயர்வான எண்ணங்களை வெளிப்படுத்தமுடியாது. மனம் வெறுப்படைந்த நிலையில் உயர் எண்ணங் கள் வராது. விழிப்பு நிலையில் மனதில் எண்ணங் களற்று இருக்க முடியாது.விழிப்பு நிலையில் கடலில் அலைகளைப்போல எஎண்ணங்கள் வரும் அமைதியின்றி இருக்கும் மனம் கஷ்டங்களை உணரும் போது மனிதன் செய்வதரியாது ஒருவித கையறு நிலையை உணர்கிறான்.
மனம் தியானத்தின் மூலம் உயர்கிற போது அமைதியான சலனமற்ற நிலையில் பலசிக்கல்க ளுக்கு தீர்வு காணமுடியும்.
தீய மனம் முதலில் தூய மனமானபின் தியானத் தில் உயர்வு பெறும் தகுதியில் மேலோங்கி மேலான ஒழுங்கில் லயமாகும் போது படிப்படியாக மனித வாழ்வு நலமாகிறது. மன வலிமை நல்ல பழக்கங் களை உண்டாக்க உதவுகிறது.வாழ்வில் நலங்களை உண்டாகிறது.

No comments:

Post a Comment