jaga flash news

Saturday 5 March 2016

உடல் ஆரோக்கியம், குடல் ஆரோக்கியத்தில் இருக்கிறது ...................


எரிச்சல் இருக்கும். பசி நேரத்தில், பசி தாங்க முடியாமல் அகோரப்பசி போல் எரிச்சல் இருக்கும். 


சாப்பிடச் சாப்பிட வயிற்றைப் பிரட்டும். பசி அடங்கியதாக தோன்றாது. சாப்பிடும் போதே இடை 


இடையே ஏப்பம் வரும். உணவு மீதும், சமைத்தவர் மீதும் எரிச்சல் வரும். சாப்பிட்ட உடன் அசதியால் 

கொஞ்சம் படுத்துக்கொள்ளலாம் என எண்ணுவோம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து கல்லைப் 

போட்டது போல் இருக்கும். சோர்வும், பலகீனமும் இருக்கும். அன்பு நண்பர்களே!, பசித் தன்மைக்கும் 

அல்சர் புண் எரிச்சலுக்கும் வித்தியாசம் உணரத் தெரிந்தால் அல்சரை தொடக்க நிலையிலேயே 

குணப்படுத்தி விடலாம். ஆம் நண்பர்களே!, அல்சர் தன்மை அதிகமாகும் போது வாய்ப்புண்ணும்,


உதட்டுப்புண்ணும் தோன்றும், மலச்சிக்கல் தீவிரமாகும், மண்ணீரல் செரிமாணம் கெட்டிருந்தால் மலம் 

வெளுப்பாக இருக்கும். கல்லீரல் கெட்டிருந்தால் மலம் கருமை கூடும். இதில் பித்தம் அதிகமிருந்தால் 

மலம் கரு மஞ்சளாகவும், உஷ்ணம் அதிகமிருந்தால் மலம் சிவந்தும், கரும்பித்தம் அதிகமிருந்தால் 

மலம் கருப்பாகவும் , அல்சர் இரணம் அதிகமிருந்தால் மலம் கருஞ்சிவப்பாகவும் இருக்கும். அல்சரின் 

தீவிரம் அதிகமானால், மண்ணீரல் இரணத்தால் டைபாய்டும் (குடலம்மை), கல்லீரல் இரணத்தால் 


மஞ்சள் காமாலையும் ஏற்பட நேரிடும். அல்சரை குணமாக்க ஆங்கில மருத்துவம் இரண்டு தவறான 

செயல்களை செய்கிறது. 1. அல்சர் புண்ணுக்கான கிருமியைக் கொல்ல கிருமிநாசினி (Antibiotic) மற்றும் 

வலி நிவாரணி (Pain killer) கொடுக்கிறார்கள் (இது நரம்பை பதம் பார்க்கிறது. இதனால், மூளை அல்சரை 

குணப்படுத்த முணைவது குறைகிறது). 2. இவர்கள் கொடுக்கும் இரசாயண மருந்தின் அமிலத் தன்மை 

அல்சர் புண்ணைப் பதம் பார்க்காமல் இருக்க ஜெலுசில் (Aluminum Hydroxide) மாத்திரை அல்லது திரவம் 

(Antacid) கொடுக்கிறார்கள் (இது அல்சர் புண்ணைப் பூசி மொழுகுகிறது. இதனால், கண்டதையும் 

சாப்பிட்டு வயிறுப் புண் மேலும் இரணமாவது தெரியாது இருக்கும்). ஆக, வயிற்று அல்சர் மேலும் 

தீவிரம் அடைந்து பல காலம் கடந்து, இரைப்பை அல்லது குடல் புற்று நோய்க்கு இட்டுச் செல்கிறது. 

வேண்டாமே இந்த விபரீத மருந்து விளையாட்டு. அல்சரை குணமாக்கும் இரகசியம் தெரிய 

வேண்டுமா?. இந்த விளக்கத்தை சற்று கவனியுங்கள். உங்கள் வீட்டுச் சுவரின் ஒரு பகுதி உப்புத் 

தன்மையால் அரித்து செரித்து இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த வீணான சுவர்ப் பகுதியை 

இடித்து எடுத்து விட்டு, புது செங்கற்களைக் கொண்டு சரி செய்து, சிமெண்ட் பூசி, பெயிண்ட் அடிப்பதற்கு 

பதிலாக, ஒரு அழகான போஸ்ட்டரை கொண்டு வந்து அந்த செரித்துப் போன சுவற்றுப் பகுதியின் மீது 

ஒட்டி விடுவோமா? சுவர் வீணாவது தெரியாமல் இருந்தால் போதும், சுவர் எப்படி ஆனால் நமக்கு என்ன 

என்றா இருப்போம்? இது போலவே, நம் வயிற்றுச் சுவர் அல்சரால் அரித்திருந்தால், அதனை முற்றிலும் 

குணமாக்க வழி காண்போமா? அல்லது, ஆன்டாசிட் கூழ் கொண்டு அதாவது ஜெலுசில் (Aluminum 

Hydroxide) மாத்திரை கொண்டு அவ்வப்போது பூசி மழுப்புவோமா?. முடிவு உங்கள் கையில்!. 

சிறுகுடலும், 


பெருங்குடலும் ******************************************** நாம் உண்ட உணவு செரிக்கும் களமாக இரைப்பையும் 

(Stomach), செரிமானத்திற்கு வேண்டிய நொதிகள் மற்றும் ஆக்க சக்திக்கு உறுதுணையாக மண்ணீரல் 


(Spleen) மற்றும் கல்லீரல் (Liver) செயல் படுகின்றன. இதன் பயனாய், நான்கு மணி நேரம் உணவு 

செரித்து 

(Digestion), இரசமாகி (Juice), பின் 21 அடி சிறு குடலை அடைகிறது. இங்கு இந்த இரசம், சிறு குடலின் 


உறிஞ்சிகள் (Villi) மூலம் இரத்தத்தில் சேர்கிறது (Assimilation). பின்னர், இது பெருங் குடலைக் கடக்கும் 

போதும் மிச்ச மீதி உள்ள தாதுக்களை எடுத்துக் கொண்டபின், மலக்குடல் (Rectum) வழியாக நம் 

உடலிலிருந்து மலமாக வெளியேறுகிறது. அன்பு நண்பர்களே! நம் ஆரோக்கிய வாழ்வில் சிறுகுடல் 

மற்றும் பெருங்குடலின் பங்கு பற்றி இப்பொழுது பார்ப்போம். சிறுகுடல் --------------- --------------- எஞ்சிய 

கொழுப்பு மற்றும் புரதச் செரிமானம் நிகழ செரிமானத்தில் பங்கு கொள்கின்றது. முழுமையாக செரித்த 

சத்துக்களை சிறு குடலின் உறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேர்கிறது. சிறுகுடல் என்பது 

நெருப்புச் சக்தி: --------------------------------------------- ----- செரிக்காத உணவால் உடலுக்கு சக்தி குறைவதால், 

சிறுகுடலில் உணவு தேக்கமாகி, நொதிப்பதால் (Fermentation), உண்டாகும் எரிசாராய (Ethanol) அமிலம் 

சிறுகுடலை உஷ்ணமாக்கி விடுகிறது. இருதயம்: --------------- சிறுகுடல் போல் இருதயமும் நெருப்பு 

உறுப்பாகும். சிறுகுடலில் சேரும் வெப்பமானது இருதயத்தை இரணப்படுத்தி வேகப்படுத்தும். சிறுகுடல் 

உஷ்ணத்தை தனித்தால், இருதய நோய்ச் சிக்கல்கள் தீரும். சிறுகுடல் சக்தி குறைவால் ஏற்படும் 

நோய்கள் --------------------------------------------- ------------------------ இருதய நோய்கள், சிறுகுடல் அல்சரும் அது 

வளர்ந்து குடல் புற்றும், உடல் வெப்ப நோய்களான தொண்டை அழற்சி, நெஞ்செரிச்சல், குடலம்மை 

(Typhoid), சின்னம்மை (Chicken Pox), மஞ்சள் காமாலை (Jaundice) மற்றும் வேணல் கட்டிகள் (Skin 

inflammation) ஆகியவை உண்டாகின்றன. பெருங்குடல் ------------------- ------------------- நார்ச் சத்தின் 

உட்ப்பிரிவுகளில் (Cellulose, Pectin, Hemicelluloses, etc.,) உள்ள சில தாவரச் சத்துக்கள் (Phytofactors) 

செரிக்கப்படுகிறன. உடலுக்குத் தேவையான மிச்சம் மீதி உள்ள தாதுச் சத்துக்களை கிரகித்துக்கொள்ள 

பெருங்குடல் உதவுகிறது பெருங்குடல் என்பது காற்று சக்தி: --------------------------------------------- ----- 

செரிமானக் கோளாறால் சிறுகுடலில் நொதித்து உருவான எரிசாராய அமிலம், பெருங்குடலை வந்து 

சேரும்போது புளித்து, நுரைக்க ஆரம்பிக்கிறது. நுரை என்பது நீரும் காற்றும் சேர்ந்ததுதான். ஆக 

பெருங்குடலில் காற்று (வாய்வு) சேர்கிறது. நுரையீரல்: ----------------- பெருங்குடலில் உண்டாகும் 

வாய்வுக் 

காற்றானது, நுரையீரல் காற்றைக் கெடுக்கும். மூச்சுத் திணறல், சளி, இருமல், மூச்சிறைப்பு உள்ளிட்ட 

சுவாசப்பை கோளாறுகள் யாவைக்கும் பெருங்குடலின் வாய்வும் மலச்சிக்கல்தான் காரணம். 

பெருங்குடல் சக்தி குறைவால் ஏற்படும் நோய்கள் --------------------------------------------- ----------------------------- 

நுரையீரல் நோய்களான சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, ஒவ்வாமை; வாய்வு நோய்களான வாய்வுப் 

பிடிப்பு, முடக்கு வாதம் (Rheumatoid Arthritis), வாதம் (Paralysis), இழுப்பு (Epilepsies), மூளைப் பக்கவாதம் 

(Stroke) மூளைச் செயலிழப்பு (Coma) மற்றும் மலக்குடல் நோய்களான குடலிரக்கம் (Hernia) மற்றும் 

மூலம் (Piles) ஆகியன. அன்பு நண்பர்களே! உங்கள் உடல் ஆரோக்கியம், குடல் ஆரோக்கியத்தில் 

இருக்கிறது என்பது நன்கு புரிகின்றது அல்லவா?. செரிமான சக்தி (Digestion) நன்கு அமையப் 

பெற்றிருந்தும், செரித்த சத்து இரசத்தை உரிஞ்சிக் கொள்ளும் திறன் (Assimilation) என்பது, குடல் 

சுத்தத்தைச் சார்ந்து இருக்கிறது. குடல் சுத்தமானது, உணவில் சத்து போக, கழிவு மீதம் எவ்வளவு 

இருக்கிறது என்பதனால் முடிவு செய்யப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் சத்துப் பகுதி 

குறைவாகவும், கழிவுப் பகுதி மிகுதியாகவும் இருக்குமானால் உடலுக்கு சக்தி குறைவாக கிடைக்கும், 




ஆனால் வெளியேற்ற வேண்டிய கழிவுக்கு சக்தி அதிகம் தேவைப்படும். இதனால், கழிவு தேக்கம் 

ஏற்பட 

ஆரம்பிக்கிறது. இதன் பயனாய், மேலே குறிப்பிட்ட நோய்களுக்கு வழி ஏற்படுகிறது. நண்பர்களே! குடல் 

ஆரோக்கியத்தை காக்கும் இரகசியங்களை இனி பார்ப்போம். குடல் ஆரோக்கியத்திற்கு மலர் மருந்து: ----

----------------------------------------- -------------- குடல் வெப்பம் தணிய, குடல் புண் ஆற,அம்மை காய்ச்சல் மற்றும் 

மூலம் - செர்ரி பிளம் (Cherry Plum) மலச்சிக்கலால் தூக்கமின்மை, பாம்புக் கனவு - வைட் செஸ்நட் (White 

Chestnut) துர்வாடை அடிக்கும் வாய்வு, வாய் துர் நாற்றம் - கிராப் ஆப்பிள் (Crab Apple) வயிற்று (குடல்) 

உப்புசம், டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை - ராக் ரோஸ் (Rock Rose) வயிற்றுப் போக்கு, பேதி, 

மற்றும் சீத பேதி - ரெஸ்கியூ ரெமிடி(Rescue Remedy) குறிப்பு:- -------------- நண்பர்களே! இந்த மலர் 

மருந்துகளை அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் வாங்கலாம். தங்களது தேவைக்கு 

மருந்துகளை வாங்கும் பொழுது ஒரு சிறிய புட்டியில் சர்க்கரை உருண்டைகளில் ஊற்றி கொடுக்கும்படி 

கேட்டு வாங்குங்கள். அதாவது ஒன் டிராம் பில்ஸ் (One Dram Pills) என கேட்டு வாங்கி தினமும் ஒரு 

வேளை 5 உருண்டைகளாக இரவில் சாப்பிட்டுவரவும். சிறுகுடல் வெப்பத்தினை தணிப்போம்! இதய 

நோய் வராமல் தவிர்ப்போம்! பெருங்குடல் வாய்வு நீக்குவோம்! சுவாச நோயை அழிப்போம்!


1 comment:

  1. அய்யா இந்த மாதிரி எனக்கு உள்ளது மருந்து கூறுங்கள்

    ReplyDelete