jaga flash news

Tuesday 29 March 2016

மஹாலட்சுமி வசிக்கிறாள்.

நெல்லி மரத்தில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
வில்வ மரத்தில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
பெண்களின் தலைமுடியின் முன் வகிட்டில் வசிக்கிறாள்.அதனால்தான் பெண்கள் வகிட்டில் குங்குமம் இடவேண்டும்.
...
துளசி மணி மாலையில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
பசுவின் பால்,தயிர்,நெய்,கோமியம்,சாணம், பசுவின் பின் புறம் இவற்றில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
மா,வாழை,எலுமிச்சை,வெற்றிலை,தாமரை,செவ்வந்தி இவற்றில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
கருந் துளசியில் விஷ்னுவும் மஹாலட்சுமியும் வசிக்கிறார்கள். இதனால்தான் வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குகிறோம்.
...
தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பு எண்ணெய் ஸ்நானம் செய்வது சிறப்பு.ஏனென்றால் அன்று மட்டுமே எண்ணெய்யில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
கஸ்தூரி மஞ்சள், சந்தணம்,இவற்றில் மஹாலட்சுமி வசிக்கிறாள். அதனால்தான் மஞ்சள், சந்தனம் இல்லாத சுப காரியங்களே இல்லை.
...
🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐝🐝🐝🐝🐝🐝
: நம் சந்ததியருக்கு
எதைச் சேர்த்து வைக்கவேண்டும் ..?
புண்ணியங்களையா ..?
பாவங்களையா ..........?
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...!
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்...!!
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!
நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !
நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.
நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.
நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லை
என்ற கற்பனையில் நீ உலாவ ..
உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்
காத்திருப்பான் காலத் திற்காக ..
தக்க தருணத்தில் வெளியிடுவான் ..
அதை நீ அனுபவிக்க ...
என்பதே மெய்ஞ்ஞானம்.
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.
ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...!
நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :
பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது ..........................................6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு
அந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.
நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!

1 comment: