jaga flash news

Tuesday 22 March 2016

சர்ம கஷாயம் என்றால் என்ன?

சர்ம கஷாயம் என்றால் என்ன?
ஒரு முறை உழவாரப்பணி செய்ய காஞ்சி
சென்றிருந்தபோது, பெரியவாளையும் ஒரு
கார்த்திகை தரிசிக்கும் பேறு பெற்றேன் .
அப்போது சிதம்பரம் தீக்ஷிதர்கள் சிலர் வந்து
கும்பாபிஷேகப் பத்திரிக்கையைக் கொடுத்து
ஆசி கொரி நின்றார்கள்.
பெரியவா பத்திரிக்கையை படித்தார்கள். இறுதி
பாராவில் சர்ம கஷாயத்தால் திருமுழுக்கு செய்யப்படும்
என இருந்தது.
சர்ம கஷாயம் என்றால் என்ன என்று பொதுவாக ஒரு
கேள்வி கேட்டார்கள்.
தொண்டர் ஒருவர்'அது தமிழ்ச் சொல் 'என சொன்னார்.
'இங்கு தமிழ் படிச்சவா யாரும் இருக்காளா?'
நண்பர்கள் என்னை முன்னுக்குத் தள்ளி''
இதோ இருக்கா''என்றனர்.
'புலவரே..சர்ம கஷாயம் என்றால் என்ன?'
'அது வடமொழிச் சொல் நான் பொருள் அறியேன்'
பெரியவா சுற்றிலும் பார்த்து'ஒருத்தர் வட மொழிச்
சொல் என்கிறார்..இன்னொருத்தர் தமிழ்ச் சொல்
என்கிறார்!....
'அது சம்ஸ்க்ருதச் சொல்தான்...அந்தக் கஷாயம்
எப்படிச் செய்கிறார்கள்?..பால் துளிர்க்கும் மரங்களின்
பட்டைகளைச் சேகரித்து ,இடித்து, தண்ணீரில் ஊறவைத்து,
அந்தக் கஷாயத்தைக் கலசத்தில் நிரப்பி யாகத்தில்
வைத்து, ஒவ்வொரு கால வழிபாட்டிலும் பூஜிப்பார்கள்.
அந்த மரப் பட்டை கஷாயத்தைக் கொண்டு சில
மூர்த்திகளையும், கும்பங்களையும் அபிஷேகம்
செய்வார்கள்....'
ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடைவெளி விட்டு
சிறு பாலகனும் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகாக
விளக்கினார்கள்.
'பால் துளிர்க்கும் மரம் என்றால் என்ன தெரியுமோ,
அத்தி, பலா , மாஆலமரம், அரசமரம் இவைதான்' என மேலும்
விளக்கம் எங்களுக்கு!
பெரியவா ஒரு கலைக்களஞ்சியம் என்றால்
மிகையாகுமோ?
அனுபவம்..புலவர் வெங்கடேசன், வில்லியனூர்.
ஜய ஜய சங்கரா......

No comments:

Post a Comment