jaga flash news

Saturday 12 March 2016

ஷ்யனின் குணங்களாக பதினைந்து குணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் ஸ்ரீ தேசிகர்.

சிஷ்யனின் குணங்களாக பதினைந்து குணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் ஸ்ரீ தேசிகர். அவையாவன:

 1. நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்
 2. பாகவதர்களோடு பழகும் மனப்பாங்கு இருக்க வேண்டும்
 3. சாஸ்த்திரங்களின் மீது விஸ்வாசமும், அவற்றில் இருக்கும் தனக்கான கர்மங்களை வழுவாதிருக்க வேண்டும்.  
 4. தத்துவம்-உபாயம்-பலன் ஆகிவற்றை அறிய விருப்பம் வேண்டும்.
 5. ஆசார்யனுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும்.
 6. அஹங்காரமற்றவனாக இருக்க வேண்டும்
 7. ஆசார்யனை வணங்க வேண்டும்
 8. தனக்கு வரும் சந்தேகங்களை ஆசார்யனிடம் கேட்டுத் தெளிவுபெற தகுந்த ஸமயத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டும்
 9. இந்திரியங்களை கட்டுப்படுத்தியவனாக இருக்க வேண்டும்.
10. மனத்தை தீயவழிகளில் செலுத்தாது இருக்க வேண்டும்
11. பிறரிடத்தில் பொறாமை கொள்ளாதிருத்தல் வேண்டும்
12. ஆசார்யன் திருவடிகளைப் பற்றவேண்டும்
13. ஆசார்யனது உபதேசங்களில் முழு நம்பிக்கை வேண்டும்
14. ஆசார்யன் தரும் பரிக்ஷைகளுக்கு உட்பட வேண்டும்
15. ஆசார்யனது உதவியை என்னாளும் மறக்கக் கூடாது. 

No comments:

Post a Comment