jaga flash news

Monday 11 February 2013

மிளகில் உள்ள சத்துக்கள்


மிளகு:
இந்து, இந்தியா, இந்தியர்கள் என்ற பெயர் வருவதற்கு முக்கிய காரணம் சிந்து நதி அல்லா, தமிழர்கள் தாம் அதற்கு முக்கிய காரணம் இந்த மிளகு, உண்மையில் மிளகு கருப்பு நிறம் கொண்டதல்ல அது கருமை பழுப்பு கொஞ்சம் நீல வண்ணமும் கலந்த ஒன்று, (இண்டிகோ என்ற வண்ணத்தில் இருந்து வந்தது தான், இந்து, இந்தியா, இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மிளகு கொண்டுவரும் வியாபாரிகளை இன்டிகஸ் என்று தான் அழைத்தனர், அலக்சாண்டருக்கு அவர் வென்ற சிந்து பகுதிக்கு கிழக்கே தான் அவரது முன்னோர்கள் வந்து சென்ற தமிழகம் இருக்கிறது என்று தெரியாது, அப்படி தெரிந்திருந்தால் இன்று இந்திய சரித்திரமே மாறி இருக்கும், முக்கியமாக தமிழக வரலாறு: வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கி மு 3000ங்களில் இருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

கி பி 5-ம் நூற்றாண்டிற்கு பிறகு வைதீக சனாதன மதங்களின் வரவால் அவற்றின் சாஸ்திர தடைகளான கடல் கடப்பது பாவம் என்ற காரணத்தால் மெல்ல மெல்ல சிர்குலைந்த பொருளாதாரம் இன்றுவரை தலை நிமிரவே இல்லை, சாதாரண மிளவு தமிழரின் வாழ்வை புரட்டி போட்டது என்றால் நம்ப முடிகிறதா?

மிளகில் உள்ள சத்துக்கள்

தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு

வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்


சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும் . அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும் . கொஞ்சம் மிளகு ,ஓமம் ,உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும் . கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும் .

பற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி , சொத்தை பல் ,ஈறுவலி ,ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும் ,பற்களும் வெண்மையாக இருக்கும் ,வாயில் துர்நாற்றத்தை போக்கும் .

தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி ,தலை பாரம் குணமாகும் .
மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலை வலி குணமாகும் .
மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.


இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை ,மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும் .

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது .
மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது .
மிளகு , சுக்கு ,திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது
மிளகு வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள்முழுவதும் மண்டியிடவைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

- Saravana.R

No comments:

Post a Comment