jaga flash news

Monday 10 November 2014

" ப்ரம்மஹத்தி தோஷம் "

" ப்ரம்மஹத்தி தோஷம் "



. " ப்ரம்மஹத்தி தோஷம் ",பற்றி ஒரு உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பரிமாறிக்கொள்ளும் பதிவு இது. [பாரம்பரிய முறை ]. உதாரண ஜாதகம் தந்து உதவிய திருவிஸ்வம்பரிஅவர்களுக்கு நன்றி

1. ப்ரம்ம ஹத்தி தோஷம்

தோஷங்களிலேயே இது மிகக்கொடியதாக கருதப்படுவதுதிருக்கோவில்ஸ்தலபுராணங்களில் அதிகமாகவும்இதிகாசபுராணங்களில் பரவலாகவும்இதைப்பற்றி எடுத்து சொல்லப்பட்டுஇதன் தாக்கத்தை பற்றி எச்சரிக்கைஅளிக்கப்பட்டுள்ளதுபழந்தமிழ் நூல்களில் அறம் என்று சொல்லக்கூடியதருமநெறி தவறி செய்யக்கூடிய செயல்களுக்கு தண்டனை தரக்கூடியது. 'பொய்மை ' என்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்று. ' பொய்மையும்வாய்மையிடத்த..............', என்ற வகையில் அது மன்னிக்க்ப்படலாம்என்றாலும்எள்ளளவும்எதற்காகவும்மன்னிக்க இயலாத பாதகச்செயலகளை போனபிறவியில் செய்தோமானால்இப்பிறவியில் உறுதியாக துயரை தந்துவாட்டக்கூடியது.

2. ப்ரம்ம ஹத்தி தோஷ கிரக நிலை

பொதுவாக குரு + சனி சேர்ந்தாலோசமசப்தமபாரவை பெற்றாலோ அல்லது சாரபரிவர்த்தனை அடைந்தாலோ ' ப்ரம்மஹத்தி தோஷம்', என்ற கணிப்பு உள்ளது.இந்த கணிப்பு ஜோதிட சம்பந்த சாஸ்திரப்படி இயற்றப்பட்ட பழம்பாடல் எதுவும்எனக்கு தெரிந்த வரையில் இல்லைஅவ்வாறு ஏதேனும் பாடல் உள்ளதெனில்நமது ஜோதிட நண்பர்கள் தெரிவித்தால் அது அனைவருக்கும் பயனுள்ளதாகஇருக்கும்எனவே என்னைபொறுத்தவரையில் இந்த கணிப்பு பிற்காலத்தில்யாராலோ உருவாக்கபப்ட்டிருக்க வேண்டும்ஆகையால் 'எப்பொருள்யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு', எனும்திருக்குறளுக்கேற்ப இக்கணிப்பை ஆராய்வதில் தவறில்லை என கருதலாம்.

3. கணிப்பு ஆய்வு;

குரு + சனி சேர்ந்தால் ப்ரம்மஹத்தி;

இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லைஎவ்வாறெனில்குரு + சனி கூடினால்குருசண்டாள யோகம் [தோஷம்என கூறப்பட்டுள்ளதுஆதாரம் லிப்கோவெளியிட்டுள்ள குடும்பஜாதகம் நூல்இருவகையான தோஷங்களுக்க் ஒரேவிதிமுறை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்லமேலும் இன்னொரு வகையில்இக்கணிப்பையும் கவனிக்கலாம்குருவும் சனியும் சேர்ந்து ஒரு ராசியில் அதிகபட்சம் ஓராண்டு வரை இருக்கும்எனவே அந்த ஆண்டு முழுவதிலும் பிறந்தஅனைவரும் ப்ரம்மஹத்திதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களாஎன சந்தேகிக்கவேண்டியுள்ளது.

குரு + சனி சமசப்தம பார்வை பெறுவது;

ராசிப்படி பார்த்தால் இதுவும் ஒரு வருஷம் நிகழ்க்கூடியதுஎனவே நக்ஷத்திரசாரப்படி பார்க்கலாம்சனியை விட குரு வேகமாக நகரக்கூடியவர். 9 பாதங்களைகடக்க 12 மாதங்கள் என்றால் 1 பாதம் கடக்கும் குருவின் காலம் சராசரியாக 1மாதம் 10 நாட்களாகும்இதில் குருவின் வக்கிர காலங்கள் கணிக்கப்படவில்லை.கணித்தால் நாட்களின் எண்ணிக்கை கூடும்ஆக இந்த 1 மாதம் 10 நாட்களில்பிறக்கும் அனைவருமே பிரம்மஹத்திதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா?

இனி சாரபரிவர்த்தனை கணிப்பு;

குரு ராசிக்கட்டத்தை 12 ஆண்டுகளில் சுற்றி வரும் போதுசனி ஏறக்குறைய 5ராசிக்கட்டங்களை கடக்கிறார்சரியாக சொல்லவேண்டுமெனில் 43 நக்ஷத்திரபாதங்களை கடக்கிறார்இதில் குறைந்த பட்சம் 4 பாதங்களையும்அதிகபட்சம் 9பாதங்களையும் கடக்கும் போது குருவும் சனியும் சாரபரிவர்த்தனை பெறமுடியும்குறைந்தபட்சம் 4 பாதங்களை கடக்கும் காலம் 1 வருஷம் 3 நாட்கள். 9பாதங்களை கடக்கும் காலம் 2 வருஷம் 6 மாதங்கள்ஆக 12 ஆண்டுகளுக்குஒருமுறை இக்காலகட்டங்களில் பிறப்பவர்கள் அனைவரும் பிறப்பார்கள் என்பதுநம்பவியலவில்லைஎனவே ப்ரம்மஹத்திதோஷ ஜாதகங்களை தீர்மானிக்கும்கிரகனிலைகளை இன்னும் நுட்பமாக கணித்துப்பார்க்கலாம் எனத்தோன்றுகிறது.

4. இனி உதாரண ஜாதகத்துடன் இதை கணித்துபார்க்கலாம்.

ஜாதகத்தில் குரு + சனி இணைவுஆனால் சனி நீசம்அதேனேரம் சனி நீசபங்கம்பெறவில்லைஅத்துடன் வக்கிர நிலையிலும் இல்லைசனி நீசம் பெறுவது 27வருஷம் 6 மாதங்களுக்கு ஒரு முறை 2 வருஷம் 6 மாதகாலம்ஆகஇக்கிரகனிலையை ஏற்றுக்கொள்வோமானால் ப்ரம்மஹத்திதோஷத்துடன்பிறப்பவர்கள் 27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒருமுறை பிறக்கிறார்கள்இதிலும்சில விதி விலக்குகள் இடம் பெறுகின்றனசந்திரனும்செவ்வாயும் இடமாற்றம்மேற்கொள்ளும்போது சனி நீசபங்கம் அடைந்து நல்ல யோகம் தருவார் என்பதால்அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் இருக்காதுஎனக்கொள்ளலாம்மேலும் சனியின் வக்கிரகாலம் ஏறத்தாழ 3 மாத காலம்.இக்காலகட்டத்தில் நீசசனி கெடுபலனை விலக்கிக்கொள்வார் என்பதாலும்அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம் இருக்காது எனவும்கொள்ளலாம்நீசசனி வக்கிரம் பெற்றால் கெடுபலன் விலகும் என்பது பலரதுகருத்தாகவும்என் சொந்த அனுபவமாகவும் உள்ளதுமேலும் சனி அஸ்தங்கம்ஏற்படுவதுண்டுஇக்காலகட்டத்தில் சூரியனின் ஆளுமையாலும் அவரதுபூர்வபுண்ணியஸ்தானாதிபதிய தன்மையாலும் சனியின் கெடுபலனைமாற்றிவிடுவார்இக்காலத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம்இருக்காது என்றும் கொள்ளலாம்ஆக ப்ரம்மஹத்திதோஷம் இவ்வளவுவிதிகளையும் கடந்து ஜாதகரை அடைய வேண்டியுள்ளது

உதாரண ஜாதம் இவ்வகையான விதிவிலக்குகளுக்கு உட்படவில்லைமேலும்தர்மகர்மாதிபதிகள் இணைந்தால் நல்லயோகம் என்ற விதியும்பார்க்கவேண்டியுள்ளதுஇதன்படி இருவரில் ஒருவர் கூட கெடக்கூடாதுஅப்படிகெட்டால் நல்லயோகம் அடிபட்டுவிடும்ஜாதகத்தில் இருவர் இணைந்து சனியின்கிரக நிலையால் நல்லயோகம் இல்லாமல் போய்விட்டதுஎனவே ஜாதகருக்குப்ரம்மஹத்திதோஷம் உறுதியாகிறதுஆக 27 வருஷம் 6 மாதங்களுக்குஒருமுறை ஒரு வருஷ கால கட்டத்திற்குள் பிறப்பவர்களுக்குத்தான் மிகவும்கடுமையானது என கருதப்படும் ப்ரம்மஹத்திதோஷம் ஏற்படுகிறது எனகொள்வது சரியானதாகும் என்பது என் கருத்து.

5. இனி உதாரண ஜாதகத்தை கொண்டு தோஷனிவர்த்தி கிரக நிலைகளைபார்க்கலாம்.

இறைவன் கருணையே வடிவானவன்எனவே ஜாதகத்தில் தோஷனிவர்த்தி தரும்கிரகனிலையோடு பிறக்கவும் வைக்கிறான்உதாரண ஜாதகத்தில்பூர்வபுண்ணியஸ்தானத்துக்கு குருவின் பார்வை கிடைக்கிறதுஇதனால் சந்திரன்,புதன் கிரகங்களில் பாபபார்வை இருந்தாலும்ஸ்தானம் புனிதப்பட்டுவிடுகிறது.அதே நேரம் பூர்வபுண்ணியாதிபதியும் சுபகரமாக இருக்கவேண்டியதுஅவசியமாகும்ஜாதகத்தில் அதிபதி பகைஸ்தானத்தில் இருப்புஅவர் கேதுவுடன்கூடினாலும் கிரக பாத சாரப்படி சூரியனுக்கு பாதிப்பு கேதுவால் இல்லைஎன்றாலும் பகை என்பதால்அவர் தோஷத்திற்கு ஆட்பட்டவர் என்பது புரிகிறது.குருவின் பார்வையால் கிடைத்துள்ள சுப அனுகூலத்தின் துணை கொண்டு தோஷநிவர்த்தி பெறலாம்இதற்காக பூர்வபுண்ணியஸ்தானத்தின் புண்ணியபலனைஇப்பிறவியில் பெற்று தரும் ஸ்தானத்தின் அனுகூலமும் தேவைப்படுகிறது.இதற்காக நாம் ஒன்பதாம் ஸ்தானத்தின் சுபத்தன்மையும் பார்க்க வேண்டியுள்ளது.ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்திற்கு குருபார்வைஅத்துடன் ஸ்தானாதிபதி குருலக்னத்தில் இருப்புஆனால் நீசசனியுடன் இணைவாக உள்ளாரேஎன்ற கேள்விஎழலாம்இத்தகைய சனியுடன் சேர்ந்ததால் தானே ஜாதகம் தோஷ ஜாதகமாகஅமைகிறதுஎனவே இவ்விஷயத்தில் குருவின் இருப்பைவிடதோஷனிவர்த்திக்கான கிரக நிலைக்கே முதலிடம் தர வேண்டும் என்பது எனதுகருத்துஇவ்வகையில் ஜாதகர் இறைவன் கருணையால் தோஷனிவர்த்தி பெறும்வாய்ப்பு கிடைக்கிறதுஇவ்வகை கிரகனிலை அமையாத ஜாதகங்களைபெற்றவர்கள்இறைவனால் கூட மன்னிக்க இயலாத படுபாதகர்கள் என நாம்இனம் கண்டு கொள்ளலாம்.

6. தீர்வு.

ப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசைசனிபுக்திகாலத்தையும்சனிதசைகுருபுக்தி காலமாக கொள்ளலாம்அக்காலகட்டத்தில்கோசரத்தில் 5ம் இடம் மற்றும் 9ம் இடம் பாதிப்பு இல்லாத காலகட்டம் பார்த்துபரிகாரவழிபாடுகளை மேற்கொண்டால் நிச்சயம் தோஷம் விலகும்தோஷம்விலகவேண்டும் அவ்வளவுதானே என அப்போதைக்கென்னஇப்போதேசெய்துவிடலாம் என கொண்டு ஜாதகதோஷ பரிகாரவழிபாடுகளை நம்விருப்பத்திற்கு வளைத்துக்கொள்வது மிகத்தவறாகும்பரிகாரவழிபாடுகளின்தத்துவமே செய்த பாவங்களுக்கு மனம் திருந்தி மன்னிப்பை இறைவனிடம்கோருவது என்பதாகும்இதை நாம் உணராமல் போனோமானால் இந்து தர்மவழிபாடுகளை வகுத்து தந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.எனவே ஜாதகர் காலமறிந்து தோஷபரிகாரம் மேற்கொள்வது சிறந்த வழியாகும்.ஜாதகருக்கு தற்பொழுது பாலவயதுதோஷகாலகட்டத்தில் அவருக்குவயதுக்கேற்றால் போல் தோஷ தாக்கம் ஏற்படும்பரிகாரத்திற்குண்டான வழியும்பிறக்கும்ஜாதகம் மேஷ லக்னமாக அமைந்திருப்பதும் இறைவன் அருளாகும்.

7. வேண்டுகோள்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதுஅறிவு என்ற திருக்குறள் கருத்து எனது இப்பதிவுக்கும் பொருந்தக்கூடியதே.எனவே தயவுசெய்து என் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதை விட இன்னும்ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளுதல் நன்றாகும்தவறு இருப்பின் தள்ளுபடிசெய்வதுடன்உங்கள் கருத்தையும் கூறவேண்டுமாய் பணிவன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment