jaga flash news

Wednesday 15 April 2020

இரவில் தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்து தூங்கினால்.. உடலில் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா?



இரவில் தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்து தூங்கினால்.. உடலில் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா?
 
 
 
 


பொதுவாகவே நம் உடல் சூடாகி விட்டது என்றால் நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக கருதப்படுவது தொப்புள் தான்.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இத்தனை பிரச்சனைகள் குணமாகுமா? என்ற ஆச்சர்யம் நம்மில் பல பேருக்கு இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதுதான் இந்த வைத்தியம்.

உடல் சூடு, கண் வறட்சி, மூட்டுவலி, சோம்பல், முழங்கால் வலி, சரும வறட்சி, தலைமுடி உதிர்தல், பாத வெடிப்பு, போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இந்த வைத்தியத்தை எந்த எண்ணெயில் செய்வது? எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

நல்லெண்ணெய்:
உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும் குறைந்துவிடும்.

கடுகு எண்ணெய்:
கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும். உடல் நடுக்கம் குறையும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

வேப்ப எண்ணெய்:
சரும பிரச்சனையான முகப்பரு, தேமல், சொறி, படை போன்ற பிரச்சனைக்கு வேப்ப எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்து வரவேண்டும். கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகளால் தோலில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் இந்த வேப்பெண்ணை சரிசெய்துவிடும்.

நெய்:
நெய்யை தொப்புளில் விட்டு தடவி வர முகத்தின் அழகு கூடும். உடல் வறட்சி தன்மை நீங்கும்.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்:
இந்த இரண்டு எண்ணையின் ஏதாவது ஒன்றை தொப்புளில் விட்டு தேய்த்துவர ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். குழந்தை இல்லாமல் தவித்து வரும் பெண்களுக்கு இது ஒரு நல்ல வைத்தியமாக இருக்கும். கூடிய விரைவிலேயே நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக கருச்சிதைவு இருக்கும் பெண்கள் தினம்தோறும் ஆலிவ் எண்ணையை தொப்புளை சுற்றி தடவிக்கொண்டு படுப்பது மிகவும் நல்லது. இதுதவிர, ஆலிவ் ஆயிலை தொப்புளில் தொடர்ந்து தேய்த்து வர, முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளக்கெண்ணை:
விளக்கெண்ணையை தொப்புளில் தடவி வர மூட்டுவலி குணமடையும். உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்துமே வலிமை பெறும்.

No comments:

Post a Comment