jaga flash news

Wednesday 22 April 2020

நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்க

நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்க:

  • சுட வைத்த நீரை குடிக்க வேண்டும்.
  • தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு மூச்சு பயற்சி, யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும்.
  • சமையலில் மஞ்சள், சீரகம், மல்லி மற்றும் பூண்டு ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆயுர்வேத முறையில் நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பது எப்படி?

  • சியாவன்பிராஷ் லேகியத்தை தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சக்கரையற்ற சியாவன்பிராஷை மட்டும் ஒரு தேக்கரண்டி உட்கொள்ள வேண்டும்.
  • தேன், நெய், பழங்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே ஆயுர்வேதத்தில் சியாவன்பிராஷ் எனப்படும்.
  • மூலிகை தேநீர் அல்லது துளசி, பட்டை, மிளகு, சுக்கு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை கொண்டு செய்த கசாயத்தை ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம். தேவைப்பட்டால் வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறை அதனுடன் சேர்த்து கொள்ளலாம்.
  • அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து 150 மில்லிலிட்டர் சூடான பாலை நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.

எளிய ஆயூர்வேத நடைமுறைகள்

  • நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை மூக்கின் இரு நாசிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் தடவ வேண்டும்.
  • ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து 2 அல்லது 3 நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். பிறகு சூடான நீரை வைத்து வாயை சுத்தம் செய்து கொள்ளலாம். இது ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.

No comments:

Post a Comment