jaga flash news

Tuesday 21 April 2020

குருவும் வாயுவும் இணைந்து செயல் புரிந்ததால்) அன்றிலிருந்து அவ்விடம் குருவாயூர்

  • மூல விக்கிரகம் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் படைத்தது. அந்த விக்கிரகத்தை அவர் சிவனிடமும் பிரம்மாவிடமும் அளித்தார் என்றும் ஐதீகங்களில் உள்ளன.அரசரான சுதபர் அவர் மனைவியுடன் ஒரு குழந்தையை வேண்டி பிரம்மாவிடம் வழிபட்டு வந்தனர். அவர்களுடைய பக்தியை மெச்சி, பிரம்ம தேவர் அவர்களுக்கு இந்த விக்ரஹத்தை அளித்து அதை வழிபட சொன்னதாகவும் கூறப்படுவதுண்டு.

அவர்களுடைய பக்தியை மெச்சி, மகா விஷ்ணு அவர்கள் முன் தோன்றி அந்த விக்ரஹத்துடன் அவரே அவர்களுடைய மகனாக மீண்டும் மூன்று தனிப்பட்ட நிகழ்வுகளின் மூலம் வெவ்வேறு உருவங்களில் அவர்களுடைய மூன்று மறுபிறப்புகளில் அவர்களுக்கு பிறப்பார் என்று அவர்களுக்கு வரம் அளித்தார்.இப்படியாக அவர்களுக்கு மூன்று மறுபிறப்புகளில் அதே விக்ரஹத்தை வழிபடும் ஓர் நல்ல வாய்ப்பும் கிடைத்தது.சத்திய யுகத்தில், பிரஜாபதி சுதபர் மற்றும் அவருடைய மனைவி ப்ர்ச்ணியின் மகன் ப்ர்ச்னிகர்பராக மஹா விஷ்ணு பிறந்தார். மேலும் அவர் உலகத்திற்கு பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைப்பிடிக்கும் முறைகளை கற்றுத் தந்தார். (திருமணம் புரியாமல் கடும் தவம் மேற்கொள்வது).த்ரேதா யுகத்தில் அவர்களுடைய அடுத்த பிறவியில் சுதபரும் அவருடைய மனைவியும், காஷ்யபர் மற்றும் அதிதியாகப் பிறந்தார்கள்.காஷ்யபர், அதிதி தம்பதியினருக்குக் குழந்தையாக வாமனர் அவதரித்தார்.த்வாபர யுகத்தில் மூன்றாவது பிறப்பில் அவர்கள் வசுதேவர் மற்றும் தேவகியாகப் பிறந்தார்கள்.அவர்களுடைய எட்டாவது மகனாக இறைவன் கிருஷ்ணராக அவதரித்தார்.இறைவனான கிருஷ்ணரே இந்த விக்ரஹத்தை துவாரகையில் பிரதிஷ்டை செய்து, அதை வழிபடத் தொடங்கினார்.


இறைவன் கிருஷ்ணரின் சுவர்க்க ஆரோஹணத்திற்கான நேரம் நெருங்க நெருங்க (வைகுண்டத்திற்கு செல்வது), அவரது முதன்மை பக்தரான உத்தவர்அவரை மனதில் நினைத்து உருகி மிகவும் வருத்தம் அடைந்தார். அப்பொழுது இறைவனும் அவரைப்பார்த்து இரங்கி உத்தவரிடம் இந்த விக்ரஹத்தை அளித்ததோடு மட்டும் அல்லாமல், தேவர்களின் குருவாகத் திகழ்ந்த பிரஹச்பதியிடம் இந்த விக்ரஹத்தை ஒரு நல்ல இடத்தில் பிரதிஷ்டை செய்யும் படி உத்தரவிட்டார். உத்தவர் அவருடைய மறைவிற்குப்பிறகு கலி யுகத்தில் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு ஏற்படப்போகும் கஷ்ட நஷ்டங்களை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அதற்கு இறைவன் அவரே இந்த விகரஹத்தில் உறையப்போவதாகவும், மேலும் அவரிடம் தஞ்சம் புகும் பக்தர்களுக்கு அவர் ஆசிகள் வழங்கி அனுக்கிரஹிக்கப் போவதாகவும் சொல்லி உத்தவரை சமாதானப்படுத்தினார்.

துவாரகையைத் தாக்கிய ஒரு பெரிய பிரளயத்தில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த விக்ரஹத்தை குரு அவருடைய முதன்மை சிஷ்யனான வாயுவின் உதவியுடன் மீட்டெடுத்தார். குரு மற்றும் வாயு ஒரு நல்ல இடத்தை தேடி உலகெங்கும் சுற்றி அலைந்தார்கள். இறுதியில் அவர்கள் பாலக்காட் சந்து வழியாக பாலக்காடை அடைந்தார்கள் மேலும் அங்கே அவர்கள் பரசுராமரை சந்தித்தார்கள், பரசுராமர் அவர்கள் கொண்டுவந்த விக்ரஹத்தை தேடிக்கொண்டு த்வாரகாவிற்கு செல்வதாக இருந்தார். பரசுராமர் குரு மற்றும் வாயு தேவர்களை மிகவும் அழகான பச்சைப்பசேல் என்று விளங்கும் இடத்திற்கு அழைத்து சென்றார், அங்கே காணப்பட்ட அழகான தாமரை தடாகத்தில் இறைவன் பரமசிவர் வசிப்பது போன்ற உள்ளுணர்வை அவர்கள் அடைந்தார்கள். அங்கே இறைவனான பரமசிவன் தனது மனைவி பார்வதியுடன் அவர்களுக்கு காட்சி அளித்தார் மேலும் அவர்களை வரவேற்று அந்த விக்ரஹத்தை ஸ்தாபனம் செய்வதற்கு அதுவே உகந்த இடமாகும் என்பதையும் தெரிவித்தார். பரமசிவர் குரு மற்றும் வாயு தேவர்களை அந்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்கான சடங்குகளை தொடங்கி நடத்த அனுமதி வழங்கினார் மேலும் அவர்கள் இருவரும் இணைந்து விக்ரஹத்தை நிறுவியதால் (அதாவது குருவும் வாயுவும் இணைந்து செயல் புரிந்ததால்) அன்றிலிருந்து அவ்விடம் குருவாயூர் என்ற வழங்கப்படும் என்று ஆசீர்வதித்தார். அதற்குப்பிறகு பரமசிவர் மற்றும் பார்வதி இருவரும் எதிர்க்கரையில் இருந்த மம்மியூருக்கு திரும்பி சென்று விட்டனர்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூறுவதற்காகவே, குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள மம்மியூர் சிவரையும் ஆராதித்தால் மட்டுமே அவர்களுடைய புனித யாத்திரையின் முழுவதுமான புண்ணிய பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். தேவர்களின் வரம் மற்றும் ஆசிகள் பெற்ற விஸ்வகர்மா என போற்றப்படும் கட்டிடக்கலை வினைஞர் இந்த கோவிலை கட்டியவராவார். அவர் இந்த கோவிலை கட்டிய விதம் என்ன என்றால், விஷு அன்று, (அதாவது இளவேனிற் சமஇரவு நாள் அன்று, அந்நாளின் முதல் சூரிய கிரணங்கள் நேராக இறைவனின் பாதங்களை அடையும் விதத்தில் அமைக்கப்பெற்று இருந்தது. இந்த விக்ரஹம் கும்ப மாதத்தில் (பெப்ரவரி - மார்ச்) நிறுவப்பட்டது மேலும் இந்த சடங்குகள் சார்ந்த நிகழ்ச்சிகள் பூசம் நட்சத்திரம் கொண்ட நாளில் துவங்கியது மற்றும் அனுசம் நட்சத்திர தினத்தில் முடிவடைந்தது

1 comment:

  1. Very nice அய்யா வெ.சாமி அவர்களே..!

    ReplyDelete