jaga flash news

Monday 30 November 2020

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 948 to 2031

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி (948 - 2031) வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய்,மணித்தேர்க் கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல், கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல், சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே. 3.1.9 1157 மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை, தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து, மேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த, பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே. (2) 3.1.10 1158 ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து, தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர் கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய், தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. (2) 3.2.1 1159 காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் _கர்ந்து நெடுங்காலம், ஐந்து தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா திருமார்பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர், வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த, தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.2 1160 வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய் விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த, வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான் அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர், பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த, செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.3 1161 அருமா நிலமன் றளப்பான் குறளாய் அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த, பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம் பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர். கருமா கடலுள் கிடந்தா னுவந்து கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல், திருமால் திருமங் கையொடாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.4 1162 கோமங்க வங்கக் கடல்வைய முய்யக் குலமன்ன ரங்கம் மழுவில் துணிய, தாமங் கமருள் படைதொட்ட வென்றித் தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர், பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர் சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.5 1163 நெய்வா யழலம் புதுரந்து முந்நீர் துணியப் பணிகொண் டணியார்ந்து,இலங்கு மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம் மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர், அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான் அருமா மறையந் தணர்சிந் தைபுக, செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.6 1164 மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த, தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர் கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள், தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.7 1165 மாவாயி னங்கம் மதியாது கீறி மழைமா முதுகுன் றெடுத்து,ஆயர் தங்கள் கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன் குரைமா கழல்கூ டும்குறிப் புடையீர், மூவா யிரநான் மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி, தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.8 1166 செருநீல வேற்கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும், அருநீல பாவ மகலப் புகழ்சேர் அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர், பெருநீர் நிவாவுந்தி முத்தங்கொ ணர்ந்தெங்கும் வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள, திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.9 1167 சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத் திருசித்ர கூடத் துறைசெங்கண் மாலுக்கு, ஆராத வுள்ளத் தவர்க்கேட் டுவப்ப அலைநீ ருலகுக் கருளே புரியும், காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார், பாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப் பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே. (2) 3.2.10 1168 வாட மருதிடை போகி மல்லரைக் கொன்றொக்க லிட்டிட்டு, ஆடல்நல் மாவுடைத் தாயர் ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான், கூடிய மாமழை காத்த கூத்த னெனெவரு கின்றான், சேடுயர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே. (2) 3.3.1 1169 பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட பிள்ளை பரிசிது வென்றால், மாநில மாமகள் மாதர் கேள்வ னிவனென்றும், வண்டுண் பூமகள் நாயக னென்றும் புலங்கெழு கோவியர் பாடி, தேமலர் தூவ வருவான் சித்திர கூடத்துள் ளானே. 3.3.2 1170 பண்டிவன் வெண்ணெயுண் டானென் றாய்ச்சியர் கூடி யிழிப்ப எண்டிசை யோரும்வ ணங்க இணைமரு தூடு நடந்திட்டு, அண்டரும் வானத் தவரு மாயிர நாமங்க ளோடு, திண்டிறல் பாட வருவான் சித்திர கூடத்துள் ளானே. 3.3.3 1171 வளைக்கை நெடுங்கண் மடவா ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப, தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண்தடம் புக்கண்டர் காண, முளைத்த எயிற்றழல் நாகத் துச்சியில் நின்றது வாட, திலைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்துள் ளானே. 3.3.4 1172 பருவக் கருமுகி லொத்து முட்டுடை மாகட லொத்து, அருவித் திரள்திகழ் கின்ற வாயிரம் பொன்மலை யொத்து, உருவக் கருங்குழ லாய்ச்சி திறத்தின மால்விடை செற்று, தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள் ளானே. 3.3.5 1173 எய்யச் சிதைந்த திலங்கை மலங்க வருமழை காப்பான், உய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென் றேத்தி, வையத் தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே, தெய்வப்புள் ளேறி வருவான் சித்திர கூடத்துள் ளானே. (2) 3.3.6 1174 ஆவ ரிவைசெய் தறிவார்? அஞ்சன மாமலை போலே, மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து,அழ காய காவி மலர்நெடுங் கண்ணார் கைதிழ வீதி வருவான், தேவர் வணங்குதண் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே. 3.3.7 1175 பொங்கி யமரி லொருகால் பொன்பெய ரோனை வெருவ, அங்கவனாக மளைந்திட் டாயிரந் தோளெழுந் தாட, பைங்க ணிரண்டெரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ்வாய், சிங்க வுருவில் வருவான் சித்திர கூடத்துள் ளானே. 3.3.8 1176 கருமுகில் போல்வதோர் மேனி கையன வாழியும் சங்கும், பெருவிறல் வானவர் சூழ ஏழுல கும்தொழு தேத்த, ஒருமக ளாயர் மடந்தை யொருத்தி நிலமகள், மற்றைத் திருமக ளோடும் வருவான் சித்திர கூடத்துள் ளானே. 3.3.9 1177 தேனமர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூட மமர்ந்த, வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன்மரு வார்f, ஊனமர் வேல்கலி கன்றி யொண்டமி ழொன்பதோ டொன்றும், தானிவை கற்றுவல் லார்மேல் சாராதீவினைதானே. (2) 3.3.10 1178 ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி, ஒன்றும் தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர், தக்க கீர்த்தி அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும் அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும், தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே. (2) 3.4.1 1179 நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி, நக்கன் ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை ஒளிமலர்ச்கே வடியணைவீர், உழுசே யோடச் சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத் தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தி யங்க, தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.2 1180 வையணைந்த _திக்கோட்டு வராக மொன்றாய் மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து, நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோ ள் நேர்ந்தவந்தா ளணைகிற்பீர், நெய்த லோடு மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும் மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள், செய்யணைந்து களைகளையா தேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.3 1181 பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள் பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண் நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட நின்மலந்தா ளணைகிற்பீர், நீல மாலைத் தஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால், செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.4 1182 தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்தி செய்து, வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட விண்ணவர்க்கோன் தாளணைவீர், விகிர்த மாதர் அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல், செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.5 1183 பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப் படர்வனத்துக் கவந்தனொடும் படையார்த்திண்கை, வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த விண்ணவர்க்கோன் தாளணைவீர், வெற்புப்போலும் துங்கமுக மாளிகைமே லாயங் கூறும் துடியிடையார் முகக்கமல்ச் சோதி தன்னால், திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.6 1184 பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த, செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன் திருவடிசேர்ந் துய்கிற்பீர், திரைநீர்த் தெள்கி மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.7 1185 பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய் பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல், மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில் மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள்தாவ நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத் தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.8 1186 பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து, கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில் கலந்தவந்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித் துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத் தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி, சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.9 1187 செங்கமலத் தயனனைய மறையோர் காழிச் சீராம விண்ணகரென் செங்கண் மாலை அங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன் அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம் கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன் கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் தடங்கடல்சூ ழுலகுக்குத் தலைவர் தாமே. (2) 3.4.10 1188 வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,என் சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே, அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும் செந்தழல் புரையும் திருவாலி யம்மானே. (2) 3.5.1 1189 நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல், அரவணை வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய், சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து, எங்கும் ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே. 3.5.2 1190 நென்னல்போய் வருமென்றென் றெண்ணி யிராமையென் மனத்தே புகுந்தது, இம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில், செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார் முகத்தெழு வாளைபோய், கரும்பு அந்நற் காடணையும் அணியாலி யம்மானே. 3.5.3 1191 மின்னில் மன்னு _டங்கிடை மடவார்தம் சிந்தை மறந்து வந்து,நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால், புன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்தெங்கும், அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே. 3.5.4 1192 நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும், என்மனம் வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா, பாட லின்னொலி சங்கி நோசை பரந்து பல்பணை யால்மலிந்து, எங்கும் ஆட லோசையறா அணியாலி யம்மானே. 3.5.5 1193 கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர் சேவடி கைதொழுதெழும், புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன், சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித் தாதி யாய்வரும், அந்த ணாள ரறாவணியாலி யம்மானே. 3.5.6 1194 உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்துன் அடியேன் மனம்புகுந்த,அப் புலவ. புண்ணிய னே.புகுந் தாயைப் போகலொட்டேன், நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல் தண்டாமரை மலரின் மிசை,மலி அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே. 3.5.7 1195 சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய், அருள்புரிந்து இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ, கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய்,இளம்f தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே. 3.5.8 1196 ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி நின்னடைந் தேற்கு,ஒரு பொருள் வேதியா. அரையா.உரையாய் ஒருமாற்றமெந்தாய், நீதி யாகிய வேதமா முனியாளர் தோற்ற முரைத்து, மற்றவர்க் காதியாய் இருந்தாய். அணியாலி யம்மானே. 3.5.9 1197 புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை, கல்லின் மன்னு திண்டோ ள் கலிய னொலிசெய்த, நல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன் வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே. (2) 3.5.10 1198 தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே, பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே, தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி, ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே. (2) 3.6.1 1199 பிணியவிழு நறுநீல மலர்க்கிழியப் பெடையோடும், அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே, மணிகெழுநீர் மருங்கலரும் வயலாலி மணவாளன், பணியறியேன் நீசென்றென் பயலைநோ யுரையாயே. 3.6.2 1200 நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நெடுமால்,தன் தாராய நறுந்துளவம் பெருந்தகையெற் கருளானே, சீராரும் வளர்ப்பொழில்சூழ் திருவாலி வயல்வாழும், கூர்வாய சிறுகுருகே. குறிப்பறிந்து கூறாயே. 3.6.3 1201 தானாக நினையானேல் தன்னினைந்து நைவேற்கு,ஓர் மீனாய கொடிநெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ? தேன்வாய வரிவண்டே. திருவாலி நகராளும், ஆனாயற் கென்னுறுநோ யறியச்சென் றுரையாயே. 3.6.4 1202 வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப நாணாளும் நின்னினைந்து நைவேற்கு,ஓமண்ணளந்த தாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த தோளாளா, என்றனக்கோர் துணையாள னாகாயே. 3.6.5 1203 தாராய தண்டுளவ வண்டுழுத வரைமார்பன், போரானைக் கொம்பொசித்த புட்பாக னென்னம்மான், தேராரும் நெடுவீதித் திருவாலி நகராளும், காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ. 3.6.6 1204 கொண்டரவத் திரையுலவு குரைகடல்மேல் குலவரைபோல், பண்டரவி னணைக்கிடந்து பாரளந்த பண்பாளா, வண்டமரும் வளர்ப்பொழில்சூழ் வயலாலி மைந்தா,என் கண்டுயில்நீ கொண்டாய்க்கென் கனவளையும் கடவேனோ. 3.6.7 1205 குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி, துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ, முயலாலு மிளமதிக்கே வளையிழந்தேற்கு, இதுநடுவே வயலாலி மணவாளா. கொள்வாயோ மணிநிறமே. 3.6.8 1206 நிலையாளா நின்வணங்க வேண்டாயே யாகினும்,என் முலையாள வொருநாளுன் னகலத்தால் ஆளாயே, சிலையாளா மரமெய்த திறலாளா திருமெய்ய மலையாளா, நீயாள வளையாள மாட்டோ மே. 3.6.9 1207 மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி, நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை, கையிலங்கு வேல்கலியன் கண்டுரைத்த தமிழ்மாலை, ஐயிரண்டு மிவைவல்லார்க் கருவினைக ளடையாவே. (2) 3.6.10 1208 கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து, வள்ளிமருங் குலென்றன் மடமானினைப் போதவென்று, வெள்ளிவளைக் கைப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று, அள்ளலம் பூங்கழனி யணியாலி புகுவர்க்கொலோ. (2) 3.7.1 1209 பண்டிவ னாயன்நங்காய். படிறன்புகுந்து, என்மகள்தன் தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை யுகந்து,அவன்பின் கெண்டையொண் கண்மிளிரக் கிளிபோல்மிழற் றிநடந்து, வண்டமர் கானல்மல்கும் வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.2 1210 அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய். அரக்கர்க்குலப் பாவைதன்னை, வெஞ்சின மூக்கரிந்த விறலோந்திறங் கேட்கில்,மெய்யே பஞ்சியல் மெல்லடியெம் பணைத்தோளி பரக்கழிந்து, வஞ்சியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.3 1211 ஏதுஅவன் தொல்பிறப்பு இளைய வன்வளை யூதி,மன்னர் தூதுவ னாயவனூர் சொலுவீர்கள். சொலீரறியேன், மாதவன் தந்துணையா நடந்தாள்தடஞ் சூழ்புறவில், போதுவண் டாடுசெம்மல் புனலாலி புகுவர்க்கொலோ. 3.7.4 1212 தாயெனை யென்றிரங்காள் தடந்தோளி தனக்கமைந்த, மாயனை மாதவனை மதித்தென்னை யகன்றைவள், வேயன தோள்விசிறிப் பெடையன்ன மெனநடந்து, போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர்க்கொலோ. 3.7.5 1213 எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள், தன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள், வன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும், இந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ. (2) 3.7.6 1214 அன்னையு மத்தனுமென் றடியோமுக் கிரங்கிற்றிலள், பின்னைதன் காதலன்றன் பெருந்தோள்நலம் பேணினளால், மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கு மிடையாள்நடந்து, புன்னையும் அன்னமும்சூழ் புனலாலி புகுவர்க்கொலோ. 3.7.7 1215 முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற, சிற்றில்மென் பூவையும்விட் டகன்றசெழுங் கோதைதன்னை, பெற்றிலேன் முற்றிழையைப் பிறப்பிலிபின் னேநடந்து, மற்றெல்லாம் கைதொழப்போய் வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.8 1216 காவியங் கண்ணியெண்ணில் கடிமாமலர்ப் பாவையொப்பாள், பாவியேன் பெற்றமையால் பணைத்தோளி பரக்கழிந்து, தூவிசே ரன்னமன்ன நடையாள்நெடு மாலொடும்போய், வாவியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.9 1217 தாய்மனம் நின்றிரங்கத் தனியேநெடு மால்துணையா, போயின பூங்கொடியாள் புனலாலி புகுவரென்று, காய்சின வேல்கலிய னொலிசெய்தமிழ் மாலைபத்தும், மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே. (2) 3.7.10 1218 நந்தா விளக்கே அளத்தற் கரியாய். நரநா ரணனே கருமா முகில்போல் எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று இமையோர் பரவு மிடம்,எத் திசையும் கந்தா ரமந்தே னிசைபாடமாடே களிவண் டுமிழற் றநிழல் துதைந்து, மந்தா ரநின்று மணமல் குநாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. (2) 3.8.1 1219 முதலைத் தனிமா முரண்தீர வன்று முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய, விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி வினைதீர்த்த வம்மானிடம்,விண்ணணவும் பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப் பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம், மதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.2 1220 கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று கொடுமா முதலைக் கிடர்செய்து, கொங்கார் இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ டணைந்திட்ட வம்மானிடம்,ஆளரியால் அலைப்புண்ட யானை மருப்பு மகிலும் அணிமுத்தும் வெண்சா மரையோடு,பொன்னி மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.3 1221 சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று திசைநான்கும் நான்கு மிரிய, செருவில் கறையார் நெடுவே லரக்கர் மடியக் கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான், முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர் ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர், மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.4 1222 இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து, தழைவாட வந்தாள் குருந்த மொசித்துத் தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான், குழையாட வல்லிக் குலமாடமாடே குயில்கூவ நீடு கொடிமாட மல்கு, மழையாடு சோலை மயிலாலு நாங்கூர், மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.5 1223 பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக் கிரங்காது, அவள்தன் உண்ணா முலைமற் றவளாவி யோடும் உடனே சுவைத்தா நிடம்,ஓங்கு பைந்தாள் கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக் கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து, மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.6 1224 தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத் தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம், இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல் அடிவைத்த அம்மா னிடம்,மாமதியம் திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று,மூன்றில் வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.7 1225 துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம் துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும், முற்றா விளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம் விளைவித்த வம்மானிடம்,வேல் நெடுங்கண் முளைவாளெயிற்று மடவார் பயிற்று மொழிகேட் டிருந்து முதிராதவின்சொல், வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.8 1226 விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த விகிர்தா விளங்கு சுடராழி யென்னும், படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று இமையோர் பரவு மிடம்,பைந் தடத்துப் பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத் தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர், மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.9 1227 வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர் மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு,என்றும் தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன் கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார், கண்டார் வணங்கக் களியானை மீதே கடல்சூ ழுலகுக் கொருகா வலராய், விண்டோ ய் நெடுவெண் குடைநீழ லின்கீழ் விரிநீ ருலகாண் டுவிரும் புவரே. (2) 3.8.10 1228 சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு தடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை, நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான் நாடோ றும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே, வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (2) 3.9.1 1229 திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப,இரணியனை நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன் நாடோ றும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும் ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர், மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.2 1230 அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு திரியும், முண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும் முதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், எண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி இலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய வண்டுபல விசைபாட மயிலாலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.3 1231 கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக் காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி, தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம் செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம், மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.4 1232 மின்னனைய _ண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை வேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர தன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந் தெங்கும், மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.5 1233 பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு திண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும் தேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள் உதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா, பெரிய வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.6 1234 விளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய் உளங்குளிர அமுதுசெய்திவ் வுலகுண்ட காளை உகந்தினிது நாடோ றும் மருவியுறை கோயில், இளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல் ஈன்கரும்பு கண்வளரக் கால்தடவும் புனலால், வளங்கொண்ட பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.7 1235 ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும், கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர் குலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி மதுவெள்ள மொழுகவய லுழவர்மடை யடைப்ப, மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.8 1236 வங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி, எங்கள்தனி நாயகனே எமக்கருளாய் என்னும் ஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச் சேலுகளும் செழும்பணைசூழ் வீதிதொறும் மிடைந்து, மங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.9 1237 சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும் தாமரைக்கண் நெடியபிரான் தானமரும் கோயில், வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ், மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன, சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள் தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே. (2) 3.9.10 1238 திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும் அருள்நடந்து,இவ் வேழுலகத் தவர்ப்பணிய வானோர் அமர்ந்தேத்த இருந்தவிடம் பெரும்புகழ்வே தியர்வாழ் தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்க் கழுநீர் தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ, அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (2) 3.10.1 1239 வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும் விறலாழித் தடக்கையன் விண்ணவர்கட்கு, அன்று குன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும் குருமணியென் னாரமுதம் குலவியுறை கோயில், என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர் ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர், அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.2 1240 உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம் உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த, கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன் குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில்,மருங் கெங்கும் பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப் பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல், அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.3 1241 ஓடாத வாளரியி னுருவமது கொண்டு அன் றுலப்பில்மிகு பெருவரத்த விரணியனைப் பற்றி, வாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக் கருள்செய்தான் வாழுமிடம் மல்லிகைசெங் கழுநீர், சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே, ஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.4 1242 கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக் களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு, அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம் அளந்தபிரா னமருமிடம் வளங்கொள்பொழி லயலே, அண்டமுறு முழவொலியும் வண்டினங்க ளொலியும் அருமறையி னொலியும்மட வார்சிலம்பி னொலியும், அண்டமுறு மலைகடலி னொலிதிகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.5 1243 வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர, தாணெடுந்தின் சிலைவளைத்த தயரதன்சேய் என்தன் தனிச்சரண்வா னவர்க்கரசு கருதுமிடம், தடமார் சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை செந்நெலொடு மடுத்தரிய வுதிர்ந்தசெழு முத்தம், வாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.6 1244 தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனைத னாருயிரும் செகுத்தான், காமனைத்தான் பயந்தகரு மேனியுடை யம்மான் கருதுமிடம் பொருதுபுனல் துறைதுறைமுத் துந்தி, நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம் ஐந்து வேள்வியோ டாறங்கம் நவின்றுகலை பயின்று,அங் காமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.7 1245 கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில்வண்ணன் காலிகள்முன் காப்பான், குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம் கொடிமதிள்கள் மாளிகைகோ புரங்கள், துன்றுமணி மண்டபங்கள் சாலைகள்தூ மறையோர் தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை, அன்றலர்வாய் மதுவுண்டங் களிமுரலு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.8 1246 வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமு துண்டு,வலி மிக்க கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி, மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி, அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.9 1247 சென்றுசின விடையேழும் படவடர்த்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்துகந்த திருமால்தன் கோயில், அன்றயனு மரன்சேயு மனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகர மமர்ந்தசெழுங் குன்றை, கன்றிநெடு வேல்வலவன் மங்கையர்தம் கோமான் கலிகன்றி யொலிமாலை யைந்தினொடு மூன்றும், ஒன்றினொடு மொன்றுமிவை கற்றுவல்லார் உலகத் துத்தமர்கட் குத்தமரா யும்பருமா வர்களே. (2) 3.10.10 பெரிய திருமொழி நான்காம் பத்து 1248 போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள் தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல் மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே (4.1.1) 1249 யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம், மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை தேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே (4.1.2) 1250 வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம், ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள் தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே (4.1.3) 1251 இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும், எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே (4.1.4) 1252 அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும் உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம், தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல், திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே (4.1.5) 1253 ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம், சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல் சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே (4.1.6) 1254 ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம், ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள், சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே (4.1.7) 1255 வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான், காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம் ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள், சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே (4.1.8) 1256 கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவிழ கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம், வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள், செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே (4.1.9) 1257 காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம், சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல் கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார் எரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே (4.1.10) 1258 கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும் அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில் செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ் வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோ த்தமமே (4.2.1) 1259 பல்ல வந்fதிகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில், ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில், நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம், வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோ த்தமமே (4.2.2) 1260 அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம் உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில், கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட, வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோ த்தமமே (4.2.3) 1261 பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு, ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில், கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோ த்தமமே (4.2.4) 1262 சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும் ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில், ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும் மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோ த்தமமே (4.2.5) 1263 அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த, கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில், கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள், மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோ த்தமமே (4.2.6) 1264 உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில், இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்,கை வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோ த்தமமே (4.2.7) 1265 வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில் பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய் வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோ த்தமமே (4.2.8) 1266 இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும் உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில், குந்தி வாழையின் கொழுங்கனி _கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய், மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோ த்தமமே (4.2.9) 1267 மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோ த்தமத்துள், அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி, பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில் எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே (4.2.10) 1268 பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை, வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப, சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.1) 1269 பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப் பேதியா வின்பவெள் ளத்தை, இறப்பெதிர் காலக் கழிவுமா னானை ஏழிசை யின்சுவை தன்னை, சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.2) 1270 திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும், படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.3) 1271 வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை, அசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை, திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.4) 1272 தீமனத் தரக்கர் திறலழித் தவனே. என்றுசென் றடைந்தவர் தமக்கு, தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே, தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.5) 1273 மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை, கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை, செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே (4.3.6) 1274 வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை, கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக் கருமுகில் திருநிறத் தவனை, செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே (4.3.7) 1275 அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை, மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை, தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.8) 1276 களங்கனி வண்ணா. கண்ணணே. என்றன் கார்முகி லே என நினைந்திட்டு, உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை, தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.9) 1277 தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே, வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி, ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள், மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே (4.3.10) 1278 மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும், தந்தை கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர், நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின், சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே (4.4.1) 1279 பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவு கொண்ட பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி, பெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும் பேணாநஞ் சுண்டுகந்த பிள்ளை கண்டீர், நெல்fதொடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல் இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்க ணார்தம், சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே (4.4.2) 1280 படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப் பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும், அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்துழலு மையன் கண்டீர், மடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கல் வீழ மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி, திடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே (4.4.3) 1281 வாராரும் முலைமடவாள் பின்னைக் காகி வளைமருப்பிற்f கடுஞ்சினத்து வன்தா ளார்ந்த, காரார்திண் விடையடர்த்து வதுவை யாண்ட கருமுகில்போல் திருநிறத்தென் கண்ணர் கண்டீர், ஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி யெங்கும் எழில்மதியைக் கால்தொடா விளங்கு சோதி, சீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே (4.4.4) 1282 கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை கதி ர்முத்த வெண்ணகையாள் கருங்க ணாய்ச்சி, முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி கண்டீர், மலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி ஆடவரை மடமொழியார் முகத்து இரண்டு சிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே (4.4.5) 1283 தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள், கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர், மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு, தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே (4.4.6) 1284 பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன் மங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர், கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால், செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே (4.4.7) 1285 சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம் குலுங்க, நில மடந்தைதனை யிடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர், இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும் ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும், சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே (4.4.8) 1286 ஏழுலகும் தாழ்வரையு மெங்கு மூடி எண்டிசையு மண்டலமும் மண்டி, அண்டம் மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம் முன்னகட்டி லொடுக்கியவெம் மூர்த்தி கண்டீர், ஊழிதொறு மூழிதொறு முயர்ந்த செல்வத் தோங்கியநான் மறையனைத்தும் தாங்கு நாவர், சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே (4.4.9) 1287 சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலை, கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன் கொடிமாட மங்கையர்கோன் குறைய லாளி பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார், சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச் சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே (4.4.10) 1288 தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி, மன்னு காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை, பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட, எங்கும் தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே (4.5.1) 1289 கவ்வைவா ளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து,இ லங்கை வவ்விய இடும்பை தீரக் கடுங்கணை துரந்த எந்தை, கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த, தெய்வநீர் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே (4.5.2) 1290 மாத்தொழில் மடங்கக் செற்று மறுதிற நடந்து வன்தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை, நாத்தொழில் மறைவல் லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத் தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே (4.5.3) 1291 தாங்கருஞ் சினத்து வன்தாள் தடக்கைமா மருப்பு வாங்கி, பூங்குருந் தொசித்துப் புள்வாய் பிளந்தெரு தடர்த்த எந்தை, மாங்கனி நுகர்ந்த மந்தி வந்துவண் டிரிய வாழைத் தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே (4.5.4) 1292 கருமக ளிலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து தன்மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை, பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவி லாத, திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே (4.5.5) 1293 கெண்டையும் குறளும் புள்ளும் கேழலு மரியும் மாவும், அண்டமும் சுடரும் அல்ல ஆற்றலு மாய எந்தை, ஓண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங் கண்ட, திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே (4.5.6) 1294 குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு, நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை, மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும் தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே (4.5.7) 1295 சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும், பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை, பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய, செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே (4.5.8) 1296 பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை, மூவரி லெங்கள் மூர்த்தி இவன், என முனிவரோடு, தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே (4.5.9) 1297 திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை மங்கையர் தலைவன் வண்தார்க்f கலியன்வா யொலிகள் வல்லார், பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும் வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே (4.5.10) 1298 தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு, நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந்தீர்த்தாய், மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக், காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே (4.6.1) 1299 மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான், விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய் துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய, கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே (4.6.2) 1300 உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி, கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரசளித்தாய், பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக் கருத்தனே காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே (4.6.3) 1301 முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து, ஆங் கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே, சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக், கனைகழல் காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே (4.6.4) 1302 படவர வுச்சி தன்மேல் பாய்ந்துபன்னடங்கள் செய்து, மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே, தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய, கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே (4.6.5) 1303 மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று, பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய், நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய, கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே (4.6.6) 1304 மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி, மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய், பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக் காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களை கணீயே (4.6.7) 1305 ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று, காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய், பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக், காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே (4.6.8) 1306 சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி, அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய், மந்தமார் பொழில்க டோ றும் மடமயி லாலும் நாங்கை, கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே (4.6.9) 1307 மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன, பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி, கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே (4.6.10) 1308 கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய், நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர், திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள் அண்ணா, அடியே னிடரைக் களையாயே (4.7.1) 1309 கொந்தார் துளவ மலர்கொன் டணிவானே, நந்தா தபெரும் புகழ்வே தியர்நாங்கூர், செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள் எந்தாய், அடியே னிடரைக் களையாயே (4.7.2) 1310 குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே, நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர் சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள் நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே (4.7.3) 1311 கானார் கரிகொம் பதொசித்த களிறே, நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர், தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள் ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே (4.7.4) 1312 வேடார் திருவேங் கடம்மேய விளக்கே, நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர், சேடார் பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய், பாடா வருவேன் விணையா யினபாற்றே (4.7.5) 1313 கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய், நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச் செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே, எல்லா இடரும் கெடுமா றருளாயே (4.7.6) 1314 கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே, நாலா கியவே தியர்மன் னியநாங்கூர், சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள் மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே (4.7.7) 1315 வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய், நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர், சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள் ஆரா வமுதே, அடியேற் கருளாயே (4.7.8) 1316 பூவார் திருமா மகள்புல் லியமார்பா, நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த் தேவா திருவெள்ளக் குளத்துறை வானே, ஆவா அடியா னிவன், என் றருளாயே (4.7.9) 1317 நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச் செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை, கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை, வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே (4.7.10) 1318 கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும், காமருசீர்க் குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும், தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும், பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.1) 1319 கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும், வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும், செஞ்சொலாளர் நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.2) 1320 அண்டர்கோனென் னானையென்றும் ஆயர்மாதர் கொங்கைபுல்கு செண்டனென்றும், நான்மறைகள் தேடியோடும் செல்வனென்றும், வண்டுலவு பொழில்கொள்நாங்கை மன்னுமாய னென்றென்றோதி, பண்டுபோலன் றென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.3) 1321 கொல்லையானாள் பரிசழிந்தாள் கோல்வளையார் தம்முகப்பே, மல்லைமுன்னீர் தட்டிலங்கை கட்டழித்த மாயனென்றும், செல்வம்மல்கு மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி, பல்வளையா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.4) 1322 அரக்கராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற, குரக்கரச னென்றும்கோல வில்லியென்றும், மாமதியை நெருக்குமாட நீடுநாங்கை நின்மலன்தா னென்றென்றோதி, பரக்கழிந்தா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.5) 1323 ஞாலமுற்று முண்டுமிழிந்த நாதனென்றும், நானிலஞ்fசூழ் வேலையன்ன கோலமேனி வண்ணனென்றும், மேலெழுந்து சேலுகளும் வயல்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பாலின்நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.6) 1324 நாடியென்ற னுள்ளொங்கொண்ட நாதனென்றும், நான்மறைகள் தேடியென்றும் காணமாட்டாச் செல்வனென்றும், சிறைகொள்வண்டு சேடுலவு பொழில்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பாடகம்சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.7) 1325 உலகமேத்து மொருவனென்றும் ஒண்சுடரோ டும்பரெய்தா, நிலவுமாழிப் படையனென்றும் நேசனென்றும், தென்திசைக்குத் திலதமன்ன மறையோர்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பலருமேச வென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.8) 1326 கண்ணனென்றும் வானவர்கள் காதலித்து மலர்கள்தூவும், எண்ணனென்று மின்பனென்றும் ஏழுலுகுக் காதியென்றும், திண்ணமாட நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பண்ணினன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.9) 1327 பாருள்நல்ல மறையோர்நாங்கைப் பார்த்தன்பள்ளி செங்கண்மாலை, வார்கொள்நல்ல முலைமடவாள் பாடலைந்தாய் மொழிந்தமாற்றம், கூர்கொள்நல்ல வேல்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார், ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள் இன்பம்நாளு மெய்துவாரே (4.8.10) 1328 நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம், இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே, எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி, நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே? (4.9.1) 1329 சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய மைந்தா, அந்த ணாலி மாலே. சோலை மழகளிறே நந்தா விளக்கின் சுடரே. நறையூர் நின்ற நம்பீ, என் எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. (4.9.2) 1330 பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த, மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும் ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும் ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே. (4.9.3) 1331 ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத் தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு, காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான் வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே. (4.9.4) 1332 தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால், தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்- கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே. (4.9.5) 1333 சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார், எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை, நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில், எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே. (4.9.6) 1334 மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா விட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே, காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த, நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே (4.9.7) 1335 முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற, பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால், பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையுந் திருமேனி, இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. (4.9.8) 1336 எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும், வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால், சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி, இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே (4.9.9) 1337 ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை, காரார் புறவில் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த, சீரா ரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து, ஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே (4.9.10) 1338 ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்டொருகால் ஆலிலை வளர்ந்தவெம் பெருமான், பேய்ச்சியை முலயுண் டிணைமரு திறுத்துப் பெருநில மளந்தவன் கோயில், காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களி னடுவே, வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.1) 1339 ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டரக்கர் தம் சிரங்களை யுருட்டி, கார்நிறை மேகம் கலந்தோ ருருவக் கண்ணனார் கருதிய கோயில், பூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப் பொதும்பிடை வரிவண்டு மிண்டி, தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.2) 1340 கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன் படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன் கோயில், படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடகத் தொலிபோய், அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.3) 1341 கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன், பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில், துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால், செறிமணி மாடக் கொடிகதி ரணவும் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.4) 1342 பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து, ஒருகால் தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில், ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென்றெண்ணி, சீர்மலி பொய்கை சென்றணை கின்ற திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.5) 1343 காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை, கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன் கோயில், ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி, சேற்றிடைக் கயல்க ளுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.6) 1344 ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு, தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.7) 1345 முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர் தம்பெரு மானை,அன் றரியாய் மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில், படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபன் மணிகளி னொளியால், விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.8) 1346 குடிகுடி யாகக் கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த அடியவர்க் கருளி யரவணைத் துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில், கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய, வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யதுவே (4.10.9) 1347 பண்fடுமுன் ஏன மாகியன் றொருகால், பாரிடந் தெயிற்றினில் கொண்டு, தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை, வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள், கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே (4.10.10) பெரிய திருமொழி ஐந்தாம் பத்து 1348 அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான் குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம், நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட, பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே (5.1.1) 1349 கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து, பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம், பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய், புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே (5.1.2) 1350 மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம்துரந்து, மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம், காவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகிரியும், பூவார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே (5.1.3) 1351 வெற்பால் மாரி பழுதாக்கி விறல்வா ளரக்கர் தலைவன்றன், வற்பார் திரள்தோ ளைந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம், கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள், பொற்பார் மாட மெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே (5.1.4) 1352 மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர், நெய்யார் பாலோ டமுதுசெய்த நேமி யங்கை மாயனிடம், செய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும், பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே (5.1.5) 1353 மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா, மன்னு சினத்த மழவிடைகள் ஏழன் றடர்த்த மாலதிடம், மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட, புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே (5.1.6) 1354 குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதா நிரைகாத்து, சடையா னோட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம், குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும், புடையார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே (5.1.7) 1355 கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி, இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம், மறையால் மூத்தீ யவைவளர்க்கும் மன்னு புகழால் வண்மையால், பொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே (5.1.8) 1356 துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள், அன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம், மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும், பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே (5.1.9) 1357 கற்றா மறித்து காளியன்றன் சென்னி நடுங்க நடம்பயின்ற பொற்றாமரையாள் தன்கேள்வன் புள்ளம் பூதங்குடிதன்மேல் கற்றார் பரவும் மங்கையர்க்கோன் காரார் புயற்கைக் கலிகன்றி, சொல்தானீரைந் திவைபாடச் சோர நில்லா துயர்தாமே (5.1.10) 1358 தாம்தம் பெருமை யறியார், தூது வேந்தர்க் காய வேந்த ரூர்போல், காந்தள் விரல்மென் கலைநன் மடவார், கூந்தல் கமழும் கூட லூரே (5.2.1) 1359 செறும்திண் திமிலே றுடைய, பின்னை பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல், நறுந்தண் தீம் fதே னுண்ட வண்டு, குறிஞ்சி பாடும் கூட லூரே (5.2.2) 1360 பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன் உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல், கள்ள நாரை வயலுள், கயல்மீன் கொள்ளை கொள்ளும் கூட லூரே (5.2.3) 1361 கூற்றே ருருவின் குறளாய், நிலநீர் ஏற்றா னெந்தை பெருமா னூர்போல், சேற்றே ருழுவர் கோதைப் போதூண், கோல்தேன் முரலும் கூட லூரே (5.2.4) 1362 தொண்டர் பரவச் சுடர்சென் றணவ, அண்டத் தமரும் அடிக ளூர்போல், வண்ட லலையுள் கெண்டை மிளிர, கொண்ட லதிரும் கூட லூரே (5.2.5) 1363 தக்கன் வேள்வி தகர்த்த தலைவன், துக்கம் துடைத்த துணைவ ரூர்போல், எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும் கொக்கின் பழம்வீழ் கூட லூரே (5.2.6) 1364 கருந்தண் கடலும் மலையு முலகும், அருந்தும் அடிகள் அமரு மூர்போல், பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி, குருந்தம் தழுவும் கூட லூரே (5.2.7) 1365 கலைவாழ் பிணையோ டணையும், திருநீர் மலைவா ழெந்தை மருவு மூர்போல், இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூட லூரே (5.2.8) 1366 பெருகு காத லடியேன் உள்ளம், உருகப் புகுந்த வொருவ ரூர்போல், அருகு கைதை மலர, கெண்டை குருகென் றஞ்சும் கூட லூரே (5.2.9) 1367 காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன் மேவித் திகழும் கூட லூர்மேல், கோவைத் தமிழால் கலியன் சொன்ன, பாவைப் பாடப் பாவம் போமே (5.2.10) 1368 வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே, மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி, தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே (5.3.1) 1369 வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய், இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே, உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய், திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே (5.3.2) 1370 வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா, கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே, மையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள், தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே (5.3.3) 1371 வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த, காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின் காதலை யருளெனக்கு, மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த, தீம்ப லங்கனித் தேனது _கர்திரு வெள்ளறை நின்றானே (5.3.4) 1372 மான வேலொண்கண் மடவரல் மண்மகள் அழுங்கமுந் நீர்ப்பரப்பில், ஏன மாகியன் றிருநில மிடந்தவ னே எனக் கருள்புரியே, கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண் முறுவல்செய் தலர்கின்ற, தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு வெள்ளறை நின்றானே (5.3.5) 1373 பொங்கு நீண்fமுடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான், அங்கொ ராமைய தாகிய வாதி.நின் னடிமையை யருளெனக்கு, தங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழலணைவான், திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணை திரு வெள்ளறை நின்றானே (5.3.6) 1374 ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி அரக்கன்றன் சிரமெல்லாம், வேறு வேறுக வில்லது வளைத்தவ னே எனக் கருள்புரியே, மாறில் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர்வார்ந்த, தேறல் மாந்திவண் டின்னிசை முரல திரு வெள்ளறை நின்றானே (5.3.7) 1375 முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த, அன்ன மாகியன் றருமறை பயந்தவ னே.எனக் கருள்புரியே, மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள், தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே (5.3.8) 1376 ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட முழுதினையும், பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழு வேனெனக் கருள்புரியே, ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண் டுழிதர, மாவேறித் தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு வெள்ளறை நின்றானே (5.3.9) 1377 மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய, அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை, நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும், எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே (5.3.10) 1378 உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன் எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால், சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல்f காவிரி, அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே (5.4.1) 1379 வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி, பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால், தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை, செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2) 1380 பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர் கொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால், வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே (5.4.3) 1381 விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட, வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால், துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன் திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே (5.4.4) 1382 வம்புலாம் கூந்தல் மண்டோ தரி காதலன் வான்புக, அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால், உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும், நல் செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே (5.4.5) 1383 கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென, முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால், குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன் அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே (5.4.6) 1384 கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால், துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால், மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர் செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே (5.4.7) 1385 ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய், தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால், வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும்,நல் தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே (5.4.8) 1386 சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய,இம் மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால், வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி, ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே (5.4.9) 1387 அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை, கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல், நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன், வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே (5.4.10) 1388 வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே . வேங்கடமே . எங்கின் றாளால், மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள், வண்டார் கொண்டல் உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட திருவாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.1) 1389 கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான், விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ? என்னும், மெய்ய மலையாளன் வானவர்த்தம் தலையாளன் மராமரமே ழெய்த வென்றிச் சிலையாளன், என் மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.2) 1390 மானாய மென்னோக்கி வாநெடுங்கண் ணீர்மல்கும் வளையும் சோரும், தேனாய நறுந்துழா யலங்கலின் திறம்பேசி யுறங்காள் காண்மின், கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற ஆனாயன், என் மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே . (5.5.3) 1391 தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் தோடணையாள் தடமென் கொங்கை- யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும், பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட பெருவயிற்றன் பேசில் நங்காய், மாமாய னென்மகளைச் செய்தனகள் மங்கைமீர் . மதிக்கி லேனே . (5.5.4) 1392 பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள், ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும், நாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி, ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே . (5.5.5) 1393 தாதாடு வனமாலை தாரானோ வென்றென்றே தளர்ந்தாள் காண்மின், யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும், பூமேல் மாதாளன் குடமாடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற தூதாளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லு கேனே . (5.5.6) 1394 வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள், எண்ணில் பேராளன் பேரல்லால் பேசாள் இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான், தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே . (5.5.7) 1395 உறவாது மிலளென்றென் றொழியாது பலரேசும் அலரா யிற்றால், மறவாதே யெப்பொழுதும் மாயவனே. மாதவனே. என்கின் றளால், பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன், என்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே . (5.5.8) 1396 பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள், வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும், சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி, அந்தோ.வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே . (5.5.9) 1397 சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் தம்மானைச் சிந்தை செய்த, நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் தாய்மொழிந்த வதனை, நேரார் காலவேல் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார், மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் பொன்னுலகில் வாழ்வர் தாமே (5.5.10) 1398 கைம்மான மழகளிற்றைக் கடல்fகிடந்த கருமணியை, மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை, எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த வம்மானை, யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே (5.6.1) 1399 பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும், அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே (5.6.2) 1400 ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும், தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும் தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால் ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே (5.6.3) 1401 வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம், தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப் பிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள் அளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே (5.6.4) 1402 நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை, அன்றரக்கன் ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே, பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின், ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே (5.6.5) 1403 தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை, தரியாது கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை, வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த, அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே (5.6.6) 1404 சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது வந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார் கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த அந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே (5.6.7) 1405 துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லச் சமணர்க்கும், அவர்கட்கங் கருளில்லா அருளானை, தன்னடைந்த எமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும், அமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே (5.6.8) 1406 பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து, மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை, மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின், அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே (5.6.9) 1407 ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை, காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர் நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும், நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே (5.6.10) 1408 பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும், கொடல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும், அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே (5.7.1) 1409 இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற, தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப் பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம், அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே (5.7.2) 1410 மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவ ருலகும், துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லைநான் மறைகளும் மறைய, பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள் அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் அரங்கமா நகரமர்ந் தானே (5.7.3) 1411 மாயிருங் குன்ற மொன்றுமத் தாக மாசுண மதனொடும் அளவி, பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் படுதிரை விசும்பிடைப் படர, சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப, ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந் தானே (5.7.4) 1412 எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்குபூ ணகலம், பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து பொழிதரு மருவியொத் திழிய, வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது, அங்ஙனே யொக்க அரியுரு வானான் அரங்கமா நகரமர்ந் தானே (5.7.5) 1413 ஆயிரும் குன்றம் சென்றுதொக் கனைய அடல்புரை யெழில்திகழ் திரடோ ள், ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பணைய, ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச அறிதுயி லலைகடல் நடுவே, ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் அரங்கமா நகரமர்ந் தானே (5.7.6) 1414 சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன், எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி, வரிசிலை வளைய அடிசரம் துரந்து மறிகடல் நெறிபட, மலையால் அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே (5.7.7) 1415 ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடையதே ரொருவனாய் உலகில் சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை மலங்கவன் றடுசரந் துரந்து பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட, பகலே ஆழியா லன்றங் காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே (5.7.8) 1416 பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணிமுடி வானவர் தமக்குச் சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென் சிந்தையுள் வெந்துய ரறுக்கும், ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான் அரங்கமா நகரமர்ந் தானே (5.7.9) 1417 பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து, அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமா நகரமர்ந் தானை மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேற்f கலியன்வா யொலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே (5.7.10) 1418 ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து மாழை மான்மட நோக்கியுன் தோழி, உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து தோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட, ஆழி வண்ணநின்னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.1) 1419 வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும் ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.2) 1420 கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம், முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன் அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.3) 1421 நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணா நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக் கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுள,அதற் கடியேன் அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.4) 1422 மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும் மலர டிகண்ட மாமறை யாளன், தோகை மாமயி லன்னவ ரின்பம் துற்றி லாமையிலத்தவிங் கொழிந்து போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே போது வாய், என்ற பொன்னருள், எனக்கும் ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.5) 1423 மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றந் தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிந் தொழியா பின்னை யென்றும்நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும் அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.6) 1424 ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அந்தண னொருவன், காத லென்மகன் புகலிடங் காணேன், கண்டு நீதரு வாயெனக் கென்று, கோதில் வாய்மையி னானுனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய், ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.7) 1425 வேத வாய்மொழி யந்தண னொருவன் எந்தை நின்சர ணென்னுடை மனைவி, காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடிய தோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய், ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.8) 1426 துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுடனிருப்ப, வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந்து, உலகம் அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.9) 1427 மாடமாளிகை சூழ்திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும், ஆடல் மாவல் வன்கலி கன்றி அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை, நீடு தொல்புக ழாழிவல் லானை எந்தை யைநெடு மாலைநி னைந்த, பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர். பாட நும்மிடைப் பாவம்நில் லாவே (5.8.10) 1428 கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன், பொய்யிலன் மெய்யன் தந்தாள் அடைவரே லடிமை யாக்கும், செய்யலர் கமல மோங்கு செறிபொழில் தென்தி ருப்பேர் பையர வணையான் நாமம் பரவிநா னுய்ந்த வாறே (5.9.1) 1429 வங்கமார் கடல்க ளேழும் மலையும்வா னகமும் மற்றும், அங்கண்மா ஞால மெல்லாம் அமுதுசெய் துமிழ்ந்த எந்தை, திங்கள்மா முகில்அ ணவு செறிபொழில் தெந்தி ருப்பேர், எங்கள்மா லிறைவன் நாமம் ஏத்திநா னுய்ந்த வாறே (5.9.2) 1430 ஒருவனை யுந்திப் பூமேல் ஓங்குவித் தாகந் தன்னால், ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் , என்று விட்டான், பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவ ணைமேல் கருவரை வண்ணன் தென்பேர் கருதிநா னுய்ந்த வாறே (5.9.3) 1431 ஊனமர் தலையொன் றேந்தி உலகெலாம் திரியு மீசன் ஈனமர் சாபம் நீக்காய், என்னவொண் புனலை யீந்தான், தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறிவயல் தென்தி ருப்பேர், வானவர் தலைவன் நாமம் வாழ்த்திநா னுய்ந்த வாறே (5.9.4) 1432 வக்கரன் வாய்முன் கீண்ட மாயவனே என்று வானேர் புக்கு, அரண் தந்த ருள்வாய், என்னப்பொன் னாகத் தானை, நக்கரி யுருவ மாகி நகங்கிளர்ந் திடந்து கந்த, சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன்தா ளடைந்துய்ந் தேனே (5.9.5) 1433 விலங்கலால் கடல டைத்து விளங்கிழை பொருட்டு, வில்லால், இலங்கைமா நகர்க்கி றைவன் இருபது புயம்து ணித்தான், நலங்கொள்நான் மறைவல் லார்கள் ஒத்தொலி யேத்தக் கேட்டு மலங்குபாய் வயல்தி ருப்பேர் மருவிநான் வாழ்ந்த வாறே (5.9.6) 1434 வெண்ணெய்தா னமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி, கண்ணியர் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான், திண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள், வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந் துய்ந்த வாறே (5.9.7) 1435 அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள், கொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான், செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும், எம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே (5.9.8) 1436 நால்வகை வேத மைந்து வேள்வியா றங்கம் வல்லார், மேலைவா னவரின் மிக்க வேதிய ராதி காலம், சேலுகள் வயல்தி ருப்பேர்ச் செங்கண்மா லோடும் வாழ்வார், சீலமா தவத்தர் சிந்தை யாளியென் சிந்தை யானே (5.9.9) 1437 வண்டறை பொழில்தி ருப்பேர் வரியர வணையில் பள்ளி கொண்டுறை கின்ற மாலைக் கொடிமதிள் மாட மங்கை, திண்டிறல் தோள்க லியன் செஞ்சொலால் மொழிந்த மாலை, கொண்டிவை பாடி யாடக் கூடுவார் நீள்வி சும்பே (5.9.10) 1438 தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி சும்பு மவையாய், மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை யாய பெருமான், தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட மார்வர் தகைசேர், நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே (5.10.1) 1439 உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி யாமை முனநாள், மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன் மேவு நகர்தான், மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர் கிண்டி யதன்மேல், நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே (5.10.2) 1440 உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி யாமை முனநாள், தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட மார்வர் தகைசேர், வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ், நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே (5.10.3) 1441 பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென வந்த அசுரர் இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல நின்ற பெருமான், சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல அடிகொள் நெடுமா, நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே (5.10.4) 1442 மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென வந்த அசுரர், தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி யாம ளவெய்தான், வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை யங்கை யுடையான், நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே (5.10.5) 1443 தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை யாக முனநாள், வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது மேவு நகர்தான், கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி லார்பு றவுசேர், நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே (5.10.6) 1444 தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல் நந்தன் மதலை, எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ நின்ற நகர்தான், மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள் ஆடுபொழில்சூழ், நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே (5.10.7) 1445 எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி யாளர் திருவார், பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு கூட எழிலார், மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள் தாம லர்கள்தூய் நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே (5.10.8) 1446 வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக மிக்க பெருநீர், அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி யார றிதியேல், பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி யெங்கு முளதால், நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே (5.10.9) 1447 நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணி யுறையும், உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை யானை, ஒளிசேர் கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை யைந்து மைந்தும், முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள் முழுத கலுமே (5.10.10) 1448 வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு பண்டைநம் வினைகெட வென்று, அடிமேல் தொண்டரு மமரும் பணியநின்று அங்கண்டமொ டகலிட மளந்தவனே. ஆண்டாயுனைக் கான்பதோ ரருளெனக் கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே (6.1.1) 1449 அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள் கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே விண்ணவ ரமுதுண அமுதில்வரும் பெண்ணமு துண்டவெம் பெருமானே . ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே (6.1.2) 1450 குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட தழல்நிற வண்ணன் நண் ணார்நகரம் விழ, நனி மலைசிலை வளைவுசெய்துஅங் கழல்நிற அம்பது வானவனே. ஆண்டாயுன்னைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே (6.1.3) 1451 நிலவொடு வெயில்நில விருசுடரும் உலகமு முயிர்களு முண்டொருகால், கலைதரு குழவியி னுருவினையாய் அலைகட லாலிலை வளர்ந்தவனே. ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே (6.1.4) 1452 பாரெழு கடலெழு மலையெழுமாய்ச் சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம், ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்று அங் கோரெழுத் தோருரு வானவனே. ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே (6.1.5) 1453 கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர்கெழு முலகமு மாகி,முத லார்களு மறிவரு நிலையினையாய்ச் சீர்கெழு நான்மறை யானவனே. ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே (6.1.6) 1454 உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய், பெருக்கமொ டமரர்க ளமரநல்கும் இருக்கினி லின்னிசை யானவனே. ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே (6.1.7) 1455 காதல்செய் திளையவர் கலவிதரும் வேதனை வினையது வெருவுதலாம், ஆதலி னுனதடி யணுகுவன் நான். போதலார் நெடுமுடிப் புண்ணியனே. ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே (6.1.8) 1456 சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக் காதல்செய் யாதுன கழலடைந்தேன், ஓதல்செய் நான்மறை யாகியும்பர் ஆதல்செய் மூவுரு வானவனே., ஆண்டாய் உனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல் வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே. (6.1.9) 1457 பூமரு பொழிலணி விண்ணகர்மேல், காமரு சீர்க்கலி கன்றிசொன்ன, பாமரு தமிழிவை பாடவல்லார், வாமனன் அடியிணை மருவுவரே (6.1.10) 1458 பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு ளின்ப மெனவிரண்டும் இறுத்தேன், ஐம்புலன் கட்கட னாயின வாயிலொட்டி அறுத்தேன், ஆர்வச்செற் றமவை தன்னை மனத்தகற்றி வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.1) 1459 மறந்தே னுன்னைமுன்னம fமறந் தமதி யின்மனத்தால், இறந்தே னெத்த னையுமத னாலிடும் பைக்குழியில் பிறந்தே யெய்த்தொழிந் தேன்பெ ருமானே திருமார்பா சிறந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே (6.2.2) 1460 மானெய் நோக்கியர் தம்வயிற் றுக்குழி யிலுழைக்கும், ஊனேராக்கை தன்னை உ<த வாமை யுணர்ந்துணர்ந்து, வானே மானில மே வந்து வந்தென் மனத்திருந்த தேனே, நின்னடைந் தேன்திரு விண்ண்ணகர் மேயவனே (6.2.3) 1461 பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா தறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே (6.2.4) 1462 பாண்டேன் வண்டறை யும்குழ லார்கள்பல் லாண்டிசைப்ப, ஆண்டார் வையமெல் லாம் அர சாகி, முன்னாண்டவரே மாண்டா ரென்றுவந் தார்அந் தோமனை வாழ்க்கைதன்னை வேண்டேன், நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.5) 1463 கல்லா வைம்புலன் களவை கண்டவா செய்யகில்லேன், மல்லா, மல்லம ருள்மல் லர்மாள மல்லடர்த்த மல்லா, மல்லலம் சீர்மதிள் நீரிலங் கையழித்த வில்லா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.6) 1464 வேறா யானிரந் தேன்வெகு ளாது மனக்கொளந்தாய், ஆறா வெந்நர கத்தடி யேனை யிடக்கருதி, கூறா ஐவர்வந் துகுமைக் கக்குடி விட்டவரை, தேறா துன்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.7) 1465 தீவாய் வல்வினை யாருட னின்று சிறந்தவர்போல், மேவா வெந்நர கத்திட உற்று விரைந்துவந்தார், மூவா வானவர் தம்முதல் வா மதி கோள்விடுத்த தேவா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.8) 1466 போதார் தாமரை யாள்புல விக்குல வானவர்தம் கோதா, கோதில்செங் கோல்குடை மன்ன ரிடைநடந்த தூதா, தூமொழி யாய்.சுடர் போலென் மனத்திருந்த வேதா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே (6.2.9) 1467 தேனார் பூம்புற வில்திரு விண்ணகர் மேயவனை, வானா ரும்மதில் சூழ்வயல் மங்கையர் கோன், மருவார் ஊனார் வேல்கலி யனொலி செய்தமிழ் மாலைவல்லார், கோனாய் வானவர் தம்கொடி மாநகர் கூடுவரே (6.2.10) 1468 துறப்பேன் அல்லேனின் பம்துற வாது, நின்னுருவம் மறப்பே னல்லேனென் றும்மற வாது, யானுலகில் பிறப்பே னாகவெண் ணேன்பிற வாமை பெற்றது, நின் திறத்தே னாதன் மையால் திருவிண் ணகரானே (6.3.1) 1469 துறந்தே னார்வச் செற்றச்சுற் றம்து றந்தமையால், சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே, அறந்தா னாய்த்திரி வாய் உன் னையென் மனத்தகத்தே, திறம்பா மல்கொண் டேன்திரு விண்ணகரானே (6.3.2) 1470 மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும், ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன், கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த் தேனே, வருபுனல்சூழ் திருவிண் ணகரானே (6.3.3) 1471 சாந்தேந்து மென்முலை யார்தடந் தோள்புண ரின்பவெள்ளத் தாழ்ந்தேன், அருநகரத் தழுந்தும் பயன்படைத்தேன், போந்தேன், புண்ணியனே. உனையெய்தியென் தீவினைகள் தீர்ந்தேன், நின்னடைந்தேன் திருவிண் ணகரானே (6.3.4) 1472 மற்றோர் தெய்வமெண்ணே னுன்னையென் மனத்துவைத்துப் பெற்றேன், பெற்றதுவும் பிறவாமை யெம்பெருமான், வற்றா நீள்கடல்சூ ழிலங்கையி ராவணனைச் செற்றாய், கொற்றவனே. திருவிண் ணகரானே (6.3.5) 1473 மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும், செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை, நெஞ்சில் உய்யும் வகையுணர்ந்தே _ண்மையாலினி யாது மற்றோர் தெய்வம் பிறிதறியேன் திருவிண் ணகரானே (6.3.6) 1474 வேறே கூறுவதுண் டடியேன் விரித்துரைக்கு மாறே, நீபணியா தடைநின் திருமனத்து, கூறேன் நெஞ்சுதன்னால் குணங்கொண்டு மற் றோர்தெய்வம் தேறே னுன்னையல்லால் திருவிண் ணகரானே (6.3.7) 1475 முளிதீந்த வேங்கடத்து மூரிப்பெ ருங்களிற்றால், விளிதீந்த மாமரம்போல் வீழ்ந்தாரை நினையாதே அளிந்தோர்ந்த சிந்தைநின்பா, லடியேற்க்கு, வானுலகம் தெளிந்தேயென் றெய்துவது? திருவிண் ணகரானே (6.3.8) 1476 சொல்லாய் திருமார்வா உனக்காகித் தொண்டுபட்ட நல்லே னை வினைகள் நலியாமை நம்புநம்பீ, மல்லாகுடமாடி. மதுசூத னே உலகில் செல்லா நல்லிசையாய் திருவிண் ணகரானே (6.3.9) 1477 தாரார் மலர்க்கமலத் தடஞ்சூழ்ந்த தண்புறவில், சீரார் நெடுமறுகில் திருவிண் ணகரானை காரார் புயல்தடக்கைக் கலிய னொலிமாலை, ஆரா ரிவைவல்லார் அவர்க்கல்லல் நில்லாவே (6.3.10) 1478 கண்ணும் சுழன்று பீளையோ டீளைவந் தேங்கினால், பண்ணின் மொழியார் பைய நடமின் என் னாதமுன், விண்ணும் மலையும் வேதமும் வேள்வியு மாயினான், நண்ணு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.1) 1479 கொங்குண் குழலார் கூடி யிருந்து சிரித்து, நீர் இங்கென்னிருமி யெம்பால் வந்ததென் றிகழாதமுன், திங்க ளெரிகால் செஞ்சுட ராயவன் தேசுடை நங்கள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.2) 1480 கொங்கார் குழலார் கூடி யிருந்து, சிரித்து, எம்மை எங்கோலம் ஐயா என்னினிக் காண்பதென் னாதமுன் செங்கோல் வலவன் தான்பணிந் தேத்தித் திகழுமூர், நங்கோன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.3) 1481 கொம்பும் அரவமும் வல்லியும் வெண்றனுண் ணேரிடை, வம்புண் குழலார் வாச லடைத்திக ழாதமுன், செம்பொன் கமுகினந் தான்கனி யும்செழுஞ் சோலைசூழ் நம்பன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.4) 1482 விலங்கும் கயலும் வேலுமொண் காவியும் வெண்றகண் சலம்கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்திக ழாதமுன், மலங்கும் வராலும் வாளையும் பாய்வயல் சூழ்தரு, நலங்கொள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.5) 1483 மின்னே ரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து, என்னீ ரிருமியெம் பால்வந்த தென்றிக ழாதமுன், தொன்னீ ரிலங்கை மலங்க இலங்கெரி யூட்டினான், நன்னீர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.6) 1484 வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து, இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன்முன், சொல்லார் மறைநான் கோதி யுலகில் நிலாயவர், நல்லார் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.7) 1485 வாளொண்கண் ணல்லார் தாங்கள் மதனனென் றார்தம்மை, கேளுமின் களீலையோடு ஏங்கு கிழவன் என் னாதமுன், வேள்வும் விழவும் வீதியி லென்று மறாதவூர், நாளு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.8) 1486 கனிசேர்ந் திலங்குநல் வாயவர் காதன்மை விட்டிட, குனிசேர்ந் துடலம் கோலில் த்ளர்ந்திளை யாதமுன், பனிசேர் விசும்பில் பான்மதி கோள்விடுத் தானிடம், நனிசேர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே (6.4.9) 1487 பிறைசேர் நுதலார் பேனுதல் நம்மை யிலாதமுன், நறைசேர் பொழில்சூழ் நறையூர் தொழுனெஞ்ச மேயென்ற, கறையார் நெடுவேல் மங்கையர் கோன்கலி கன்றிசொல், மறவா துரைப்பவர் வானவர்க் கின்னர சாவாரே (6.4.10) 1488 கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு, இமையோர் துலங்கல் தீர நல்கு சோதிச் சுடராய, வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர், நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே (6.5.1) 1489 முனையார் சீய மாகி அவுணன் முரண்மார்வம், புனைவா ளுகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர் சினையார் தேமாம்f செந்தளிர் கோதிக் குயில்கூவும், நனையார் சோலை சூழ்ந்தழ காய நறையூரே (6.5.2) 1490 ஆனைப் புரவி தேரொடு காலா ளணிகொண்ட, சேனைத் தொகையைச் சாடி யிலங்கை செற்றானூர், மீனைத் தழுவி வீழ்ந்தெழும் மள்ளர்க் கலமந்து, நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே (6.5.3) 1491 உறியார் வெண்ணெ யுண்டு உர லோடும் கட்டுண்டு, வெறியார் கூந்தல் பின்னை பொருட்டுஆன் வென்றானூர், பொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட, நறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் நறையூரே (6.5.4) 1492 விடையேழ் வென்று மென்தோ ளாய்ச்சிக் கன்பனாய், நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர், பெடையோ டன்னம் பெய்வளை யார்தம் பின்சென்று நடையோ டியலி நாணி யொளிக்கும் நறையூரே (6.5.5) 1493 பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்தா ருயிருண்டு, புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர், நெகுவாய் நெய்தல் பூமது மாந்திக் கமலத்தின் நகுவாய் மலர்மே லன்ன முறங்கும் நறையூரே (6.5.6) 1494 முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த, அந்த ணாளன் பிள்ளையை அந்நான்றளித்தானூர், பொந்தில் வாழும் பிள்ளைக் காகிப் புள்ளோடி, நந்து வாரும் பைம்புனல் வாவி நறையூரே (6.5.7) 1495 வெள்ளைப் புரவைத் தேர்விச யற்காய் விறல்வியூகம் விள்ள, சிந்துக் கோன்விழ வூர்ந்த விமலனூர், கொள்ளைக் கொழுமீ னுண்குரு கோடிப் பெடையோடும், நள்ளக் கமலத் தேற லுகுக்கும் நறையூரே (6.5.8) 1496 பாரை யூரும் பாரந் தீரப் பார்த்தன்தன் தேரை யூரும் தேவ தேவன் சேருமூர், தாரை யூரும் தண்தளிர் வேலிபுடைசூழ, நாரை யூரும் நல்வயல் சூழ்ந்த நறையூரே (6.5.9) 1497 தாமத் துளப நீண்முடி மாயன் தான்நின்ற நாமத் திரள்மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல், காமக் கதிர்வேல் வல்லான் கலிய னொலிமாலை, சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே (6.5.10) 1498 அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்டகண்டன், கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி கூடினான் திருவடியே கூடிகிற்பீர், வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு, செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.1) 1499 கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத்தப்பால், எழுந்தினிது விளையாடு மீச னெந்தை இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும் உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள, செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.2) 1500 பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர் கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக் கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.3) 1501 பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம் அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர் வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.4) 1502 அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர் அரியுருவா யிரணியன தாகங்கீண்டு வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப் புலம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன் தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.5) 1503 தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய், தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த் தானாய னாயினான் சரணென்றுய்வீர் மின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.6) 1504 முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர் இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர் மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன் சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.7) 1505 முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச் செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடி_ம் சென்னிவைப்பீர் இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.8) 1506 தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் தனியாளன் முனியாள ரேத்தநின்ற பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர், பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.9) 1507 செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன் புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார்பாடி வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே (6.6.10) 1508 ஆளும் பணியு மடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை தோளும் தலையும் துணிவெய்தச் சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான் வேளும் சேயு மனையாரும் வேற்க ணாரும் பயில்வீதி நாளும் விழவி னொலியோவா நறையூர் நின்ற நம்பியே (6.7.1) 1509 முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்ன ருடல்துணிய தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான், வார்புறவில் பனிசேர் முல்லை பல்லரும்பப் பான லொருபால் கண்காட்ட நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே (6.7.2) 1510 தெள்ளார் கடல்வாய் விடவாய சினவா ளரவில் துயிலமர்ந்து துள்ளா வருமான் விழவாளி துரந்தா னிரந்தான் மாவலிமண் புள்ளார் புறவில் பூங்காவி புலங்கொள் மாதர் கண்காட்ட நள்ளார் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே (6.7.3) 1511 ஓளியா வெண்ணெ யுண்டானென் றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் மென்மலர்மேல் களியா வண்டு கள்ளுண்ணக் காமர் தென்றல் அலர்தூற்ற நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே (6.7.4) 1512 வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல் சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே (6.7.5) 1513 வள்ளி கொழுநன் முதலாய மக்க ளோடு முக்கண்ணான் வெள்கி யோட விறல்வாணன் வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான் பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா யலவன் முகம்நோக்கி நள்ளியூடும் வயல்சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே (6.7.6) 1514 மிடையா வந்த வேல்மன்னர் வீய விசயன் தேர்கடவி, குடையா வரையொன் றெடுத்தாயர் கோவாய் நின்றான் கூராழிப் படையான் வேதம் நான்கைந்து வேள்வி யங்க மாறிசையேழ் நடையா வல்ல அந்தணர்வாழ் நறையூர் நின்ற நம்பியே (6.7.7) 1515 பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான் செந்தா மரைமே லயனோடு சிவனு மனைய பெருமையோர் நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே (6.7.8) 1516 ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமே லணிந்து,உடலம் நீறும் பூசி யேறூரும் இறையோன் சென்று குறையிரப்ப மாறொன் றில்லா வாசநீர் வரைமார் வகலத் தளித்துகந்தான் நாறும் பொழில்சூழ்ந் தழகாய நறையூர் நின்ற நம்பியே (6.7.9) 1517 நன்மை யுடைய மறையோர்வாழ் நறையூர் நின்ற நம்பியை கன்னி மதில்சூழ் வயல்மங்கைக் கலிய னொலிசெய் தமிழ்மாலை பன்னி யுலகில் பாடுவார் பாடு சார பழவினைகள் மன்னி யுலகம் ஆண்டுபோய் வானோர் வணங்க வாழ்வாரே (6.7.10) 1518 மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண் தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (6.8.1) 1519 முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள் அந்நீரை மீனா யமைத்த பெருமானை தென்னாலி மேய திருமாலை யெம்மானை நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே (6.8.2) 1520 தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானை தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை நாவாயு ளானை நறையூரில் கண்டேனே (6.8.3) 1521 ஓடாவரியாய் இரணியனை யூனிடந்த சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை வாடா மலர்த்துழாய் மாலை முடியானை நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே (6.8.4) 1522 கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன் வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக நல்லனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.5) 1523 உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை நம்பனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.6) 1524 கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே (6.8.7) 1525 மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர் பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே (6.8.8) 1526 பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும் சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.9) 1527 மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார் கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார் பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே (6.8.10) 1528 பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம் மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர் முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன் இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே. (6.9.1) 1529 கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர் பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே. (6.9.2) 1530 சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின் திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர் வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே. (6.9.3) 1531 துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல் நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர் மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே. (6.9.4) 1532 அகிற்குறடுஞ்சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும் மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர் பகற்fகரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும் புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே. (6.9.5) 1533 பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும் மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர் மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில் மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே. (6.9.6) 1534 சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின் பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர் கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன் தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே. (6.9.7) 1535 குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும் தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர் மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே. (6.9.8) 1536 மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து, எங்கும் நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர் பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே. (6.9.9) 1537 திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன் பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார் விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே (6.9.10) 1538 கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை இடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரணழிய கடந்த நம்பி கடியா ரிலங்கை உலகை யீரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே (6.10.1) 1539 விடந்தா னுடைய அரவம் வெருவச் செருவில் முனநாள்,முன் தடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன் இடந்தான் வையம் கேழ லாகி உலகை யீரடியால் நடந்தா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே (6.10.2) 1540 பூணா தனலும் தறுகண் வேழம் மறுக வளைமருப்பைப் பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திருமார்வன் பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர்வெண்ணெய் நாணா துண்டான் நாமம் சொல்லில் நமோநா ராயணமே (6.10.3) 1541 கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள், எல்லா வுலகும் வணங்க விருந்த அம்மான், இலங்கைக்கோன் வல்லா ளாகம் வில்லால் முனிந்த எந்தை, விபீடணற்கு நல்லா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே (6.10.4) 1542 குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் மருவாத விடைதா னேழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா வுண்ணக் கண்டான் நாமம் நமோநா ராயணமே (6.10.5) 1543 கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர் மான மழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கென்றும் தேனும் பாலும் அமுது மாய திருமால் திருநாமம் நானும் சொன்னேன் நமரு முரைமின் நமோநா ராயணமே (6.10.6) 1544 நின்ற வரையும் கிடந்த கடலும் திசையு மிருநிலனும் ஒன்று மொழியா வண்ண மெண்ணி நின்ற அம்மானார் குன்று குடையா வெடுத்த அடிக ளுடைய திருநாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோநா ராயணமே (6.10.7) 1545 கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே யெமக்கென்று படுங்கால் நீயே சரணென் றாயர் அஞ்ச அஞ்சாமுன் நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோநா ராயணமே (6.10.8) 1546 பொங்கு புணரிக் கடல்சூ ழாடை நிலமா மகள்மலர்மா மங்கை பிரமன் சிவனிந் திரன்வா னவர்நா யகராய் எங்க ளடிக ளிமையோர் தலைவ ருடைய திருநாமம் நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோநா ராயணமே (6.10.9) 1547 வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலிய னொலிமாலை மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே (6.10.10) பெரிய தொருமொழி ஏழாம் பத்து 1548 கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல், மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன், நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி, பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே. (2) 7.1.1 1549 வற்றா முதுநீரொடு மால்வரை யேழும், துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே, அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன், பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே. 7.1.2 1550 தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய், ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன், காரேய் கடலே மலையே திருக்கோட்டி யூரே, உகந்தா யையுகந் தடியேனே 7.1.3 1551 புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க, உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா, கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே, வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே 7.1.4 1552 வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும், கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே, நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி, சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே 7.1.5 1553 பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே, முனியே திருமூழிக் களத்து விளக்கே, இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.6 1554 கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு, நிதியே. திருநீர் மலைநித் திலத்தொத்தே, பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக் கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.7 1555 அத்தா அரியே என்றுன் னையழைக்க, பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை, முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே. 7.1.8 1556 தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம், தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா, ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே 7.1.9 1557 வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும் தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை, தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட, உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே (2) 7.1.10 1558 புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால், உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால், நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. (2) 7.2.1 1559 ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன் மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா, பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு, நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. 7.2.2 1560 எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின், அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற, நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே 7.2.3 1561 சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல் உறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான் அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும் நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.4 1562 நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால், ஆண்டாயென் றாதரிக்கப் படுவாய்க்கு நானடிமை, பூண்டேன் என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன், நாணதா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.5 1563 எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன், அந்தோ.என் னாருயிரே. அரசே அருளெனக்கு நந்தாமல் தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.6 1564 மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா, என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர், வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன், நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.7 1565 எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள், கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய், இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.8 1566 ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால், யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால், நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.9 1567 நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன், சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில் நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே (2) 7.2.10 1568 சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச் செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம் மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும் மாமுனி யைமர மேழெய்த மைந்தனை, நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை, கனவில் கண்டே னின்றுகண் டமையாலென் கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே. (2) 7.3.1 1569 தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும் தன்னை யேநினைக் கச்செய்து,தானெனக் காய்நி னைந்தருள் செய்யு மப்பனை அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட வாய னை,மக ரக்குழைக் காதனை மைந்த னைமதிள் கோவ லிடைகழி யாயனை,அம ரர்க்கரி யேற்றையென் அன்ப னையன்றி யாதரி யேனே 7.3.2 1570 வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான் மற்றோர் நெஞ்சறி யான்,அடி யேனுடைச் சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச் சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன், கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக் கோவி னைக்குட மாடிய கூத்தனை, எந்தை யையெந்தை தந்தைதம் மானை எம்பி ரானையெத் தால்மறக் கேனே? 7.3.3 1571 உரங்க ளாலியன் றமன்னர் மாளப் பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று, இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும் எம்பி ரானைவம் பார்புனல் காவிரி, அரங்க மாளியென் னாளிவிண் ணாளி ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று, சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே 7.3.4 1572 ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து தாங்கு,தாமரை யன்னபொன் னாரடி எம்பி ரானை உம் பர்க்கணி யாய்நின்ற, வேங்கடத்தரி யைப்பரி கீறியை வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட தீங்க ரும்பினை, தேனைநன் பாலினை அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே 7.3.5 1573 எட்ட னைப்பொழு தாகிலு மென்றும் என்ம னத்தக லாதிருக் கும்புகழ், தட்ட லர்த்தபொன் னை அலர் கோங்கின் தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங் கட்டி யை,கரும் பீன்றவின் சாற்றைக் காத லால்மறை நான்குமுன் னோதிய பட்ட னை,பர வைத்துயி லேற்றையென் பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே 7.3.6 1574 பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற பாலை யாகி யிங்கே புகுந்து,என் கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான் கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள், விண்ணு ளார்பெரு மானையெம் மானை வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல் வண்ணன் மாமணி வண்ணனெம் மண்ணல் வண்ண மேயன்றி வாயுரை யாதே 7.3.7 1575 இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக் கிம்மை யேயருள் பெற்றமை யால்,அடும் துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர் தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும் முனியை வானவ ரால்வணங் கப்படும் முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர் 22 கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட கள்வ னையின்று கண்டுகொண் டேனே 7.3.8 1576 என்செய் கேனடி னேனுரை யீர் இதற் கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ், தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன் நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச் சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும், பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை அன்றி யென்மனம் போற்றியென் னாதே 7.3.9 1577 தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் தோன்றல் வாள்கலி யன்திரு வாலி நாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன் நல்ல மாமலர் சேவடி, சென்னியில் சூடி யும்தொழு துமெழுந் தாடியும் தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை, பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர். பாட நும்மிடைப் பாவம்நில் லாவே. (2) 7.3.10 1578 கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல்போல் கூந்த லாளை, மண்சேர முலையுண்ட மாமதலாய். வானவர்தம் கோவே. என்று, விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு மணிமாட மல்கு, செல்வத் தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார் காண்மினென் தலைமே லாரே. (2) 7.4.1 1579 அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை வரையகலத் தமர்ந்து, மல்லல் கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம், வம்பலரும் தண்சோலை வண்சேறை வானுந்து கோயில் மேய, எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும் என்மனத்தே யிருக்கின் றாரே 7.4.2 1580 மீதோடி வாளெயிறு மின்னிலக முன்விலகு முருவி னாளை காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த கைத்தலத்தா. என்று நின்று, தாதோடு வண்டலம்பும் தண்சேறை எம்பெருமான் தாளை யேத்தி, போதோடு புனல்தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின் றாரே 7.4.3 1581 தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ, போராளும் சிலையதனால் பொருகணைகள் போக்குவித்தாய் என்று, நாளும் தாராளும் வரைமார்பன் தண்சேறை எம்பெருமா னும்ப ராளும், பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகி லேனே 7.4.4 1582 வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின் வல்லமணர் தமக்கு மல்லேன், முந்திசென் றரியுருவா யிரணியனை முரணழித்த முதல்வர்க் கல்லால், சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை எம்பெருமான் தாளை, நாளும் சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக் கும்மே 7.4.5 1583 பண்டேன மாயுலகை யன்றிடந்த பண்பாளா. என்று நின்று, தொண்டானேன் திருவடியே துணையல்லால் துணையில்லேன் சொல்லு கின்றேன், வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை எம்பெருமா னடியார் தம்மை, கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம் கண்ணிணையும் களிக்கு மாறே 7.4.6 1584 பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா. என்றும், மைவிரியும் மணிவரைபோல் மாயவனே. என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம்பெருமான் திருவடியை சிந்தித் தேற்கு,என் ஐயறிவும் கொண்டானுக் காளானார்க் காளாமென் அன்பு தானே 7.4.7 1585 உண்ணாது வெங்கூற்றம் ஓவாது பாவங்கள் சேரா, மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும் மென்தளிர்போ லடியி னானை, பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் றன்னை, கண்ணாரக் கண்டுருகிக் கையாரத் தொழுவாரைக் கருதுங் காலே 7.4.8 1586 கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால் போதொருகால் கவலை யென்னும், வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள் கருநீலம் களைஞர் தாளால் தள்ளத்தேன் மணநாறும் தண்சேறை எம்பெருமான் தாளை, நாளும் உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர் என்னுள்ள முருகு மாறே 7.4.9 1587 பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து வயல்நின்ற பெடையோடு, அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும் தண்சேறை யம்மான் றன்னை, வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர், தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும் துணைக்கையால் தொழுது நின்றே. (2) 7.4.10 1588 தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும், முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர் அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே. (2) 7.5.1 1589 பாரித் தெழுந்த படைமன்னர் தம்மை யாள, பாரதத்துத் தேரில் பாக னாயூர்ந்த தேவ தேவ னூர்போலும், நீரில் பணைத்த நெடுவாளைக் கஞ்சிப் போன குருகினங்கள், ஆரல் கவுளோ டருகணையும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.2 1590 செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும், உம்பர் வாளிக் கிலக்காக உதிர்த்த வுரவோ னூர்போலும், கொம்பி லார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள், அம்ப ராவும் கண்மடவார் ஐம்பா லணையும் அழுந்தூரே 7.5.3 1591 வெள்ளத் துள்ளோ ராலிலைமேல் மேவி யடியேன் மனம்புகுந்து,என் உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற வூர்போலும், புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் போன காதல் பெடையோடும், அள்ளல் செறுவில் கயல்நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.4 1592 பகலு மிரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய், நிகரில் சுடரா யிருளாகி நின்றார் நின்ற வூர்போலும், துகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய், அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே 7.5.5 1593 ஏடி லங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி, மாடு வந்தென் மனம்புகுந்து நின்றார் நின்றா வூர்போலும், நீடு மாடத் தனிச்சூலம் போழக் கொண்டல் துளிதூவ, ஆட லரவத் தார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே 7.5.6 1594 மாலைப் புகுந்து மலரணைமேல் வைகி யடியேன் மனம்புகுந்து,என் நீலக் கண்கள் பனிமல்க நின்றார் நின்ற வூர்போலும் வேலைக் கடல்போல் நெடுவீதி விண்தோய் சுதைவெண் மணிமாடத்து, ஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே 7.5.7 1595 வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என் நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும், பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின் அஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே 7.5.8 1596 என்னைம் புலனு மெழிலுங்கொண் டிங்கே நெருந லெழுந்தருளி பொன்னங் கலைகள் மெலிவெய்தப் போன புனித ரூர்போலும், மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட அன்னம் பெடையோ டுடனாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.9 1597 நெல்லில் குவளை கண்காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட, அல்லிக் கமலம் முகங்காட்டும் கழனி யழுந்தூர் நின்றானை, வல்லிப் பொதும்பில் குயில்கூவும் மங்கை வேந்தன் பரகாலன், சொல்லில் பொலிந்த தமிழ்மாலை சொல்லப் பாவம் நில்லாவே. (2) 7.5.10 1598 சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த, சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை, செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற, அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே. (2) 7.6.1 1599 கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும், மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு, ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற, தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே 7.6.2 1600 உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை, விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை, அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர் உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே 7.6.3 1601 குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை, அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர் நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே 7.6.4 1602 கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை, வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை, செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே 7.6.5 1603 பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும், உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக் கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும் கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே 7.6.6 1604 திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா, உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை, அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே 7.6.7 1605 நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன் முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும், அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே 7.6.8 1606 பேரா னைக்குடந்தைப் பெருமானை, இலங்கொளிசேர் வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை, ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற, காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே. (2) 7.6.9 1607 திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார் கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும், முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே. (2) 7.6.10 1608 திருவுக் கும்திரு வாகிய செல்வா. தெய்வத் துக்கர சே.செய்ய கண்ணா, உருவச் செஞ்சுட ராழிவல் லானே. உலகுண் டவொரு வா.திரு மார்பா, ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. (2) 7.7.1 1609 பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி பாவை பூமகள் தன்னொடு முடனே வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய் மால்வண் ணா.மழை போலொளி வண்ணா, சந்தோ கா.பௌழி யா.தைத் திரியா. சாம வேதிய னே.நெடு மாலே, அந்தோ. நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.2 1610 நெய்யா ராழியும் சங்கமு மேந்தும் நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச் செய்யா தவுல கத்திடைச் செய்தாய் சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து, பொய்யா லைவரென் மெய்குடி யேறிப் போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன் ஐயா. நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.3 1611 பரனே. பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும் வரனே, மாதவ னே.மது சூதா. மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண் நரனே. நாரண னே.திரு நறையூர் நம்பீ. எம்பெரு மான்.உம்ப ராளும் அரனே, ஆதிவ ராகமுன் னானாய். அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.4 1612 விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து, பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும் பண்பா ளா.பர னே.பவித் திரனே, கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை கரும மாவது மென்றனக் கறிந்தேன், அண்டா. நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.5 1613 தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச் சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்ற தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும் தாடா ளா.தரை யோர்க்கும்விண் ணோர்க்கும் சேயாய், கிரேத திரேத துவாபர கலியு கமிவை நான்குமு னானாய், ஆயா. நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.6 1614 கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய். கார்வண் ணா.கடல் போல் ஒளி வண்ணா இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய் எந்தாய். அந்தர மேழுமு னானாய், பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப் போக மேநுகர் வான்புகுந்து, ஐவர் அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.7 1615 நெடியா னே.கடி ஆர்கலி நம்பீ. நின்னை யேநினைந் திங்கிருப் பேனை, கடியார் காளைய ரைவர் புகுந்து காவல் செய்தவக் காவலைப் பிழைத்து குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன் கூறை சோறிவை தந்தெனக் கருளி, அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய். அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.8 1616 கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக் கூறை சோறிவை தா என்று குமைத்துப் போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன் புனிதா. புட்கொடி யாய்.நெடு மாலே, தீவாய் நாகணை யில்துயில் வானே. திருமா லே.இனிச் செய்வதொன் றறியேன், ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.9 1617 அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை, கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன், சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை தூய மாலை யிவைபத்தும் வல்லார், மன்னி மன்னவ ராயுல காண்டு மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே. (2) 7.7.10 1618 செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியி னிணைவருட முனிவ ரேத்த, வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின், எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து வள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. (2) 7.8.1 1619 முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம் பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின், செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம் அவைமுரலச் செங்கமல மலரை யேறி, அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.2 1620 குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று, நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ. என்ன நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின், மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய, அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.3 1621 சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி, இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின், புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.4 1622 சினமேவும் அடலரியி னுருவ மாகித் திறல்மேவு மிரணியன் தாகம் கீண்டு, மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாளவுயிர் வவ்வியவெம் மாயோன் காண்மின், இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை ஏய்வாய மரகதம்போல் கிளியி னின்சொல், அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.5 1623 வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி, தானமர வேழுலகு மளந்த வென்றித் தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின், தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச் செழுமாட மாளிகைகள் கூடந் தோறும், ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.6 1624 பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப் பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன், அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின், செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க, அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.7 1625 கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு பறித்துமழ விடையடர்த்துக் குரவை கோத்து, வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின், செம்பவள மரகதநன் முத்தம் காட்டத் திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும், அம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.8 1626 ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற, நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின், சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித் திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும் ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.9 1627 பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை, அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை, கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன் கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல், ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார் ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே. (2) 7.8. 10 1628 கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர் வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும் தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத் துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே (2) 7.9.1 1629 தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி மருவி,பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர், திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து, உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே 7.9.2 1630 பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர். அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால் சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத் துறையும்,இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே 7.9.3 1631 வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால், தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம் தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத் தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே 7.9.4 1632 நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும் எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச் செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே 7.9.5 1633 முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி, கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும், செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம், தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே 7.9.6 1634 சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும் மாயா,எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ, தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத் தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே (2) 7.9.7 1635 மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு, உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார் செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து, ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே 7.9.8 1636 கருமாமுகி லுருவா.கன லுருவா.புன லுருவா, பெருமால்வரை யுருவா.பிற வுருவா.நின துருவா, திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து, அருமாகட லமுதே.உன தடியேசர ணாமே. (2) 7.9.9 1637 சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து, ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை, காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை, பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே (2) 7.9.10 1638 பெரும்பு றக்கட லையட லேற்றினைப் பெண்ணை யாணை,எண் ணில்முனி வர்க்கருள் தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப் பத்த ராவியை நித்திலத் தொத்தினை, அரும்பி னையல ரையடி யேன்மனத் தாசை யை அமு தம்பொதி யின்சுவைக் கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. (2) 7.10.1 1639 மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும் மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை, மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை, நென்ன லைப்பக லையிற்றை நாளினை நாளை யாய்வரும் திங்களை யாண்டினை, கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.2 1640 எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை வாச வார்குழ லாள்மலை மங்கைதன் பங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன்னைப் பான்மை யைப்பனி மாமதி யம்தவழ் மங்கு லைச்,சுட ரைவட மாமலை உச்சி யை,நச்சி நாம்வணங் கப்படும் கங்கு லை,பக லைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.3 1641 பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத் தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை, மாய னைமதிள் கோவலி டைகழி மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள் ஈச னை,இலங் கும்சுடர்ச் சோதியை எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை காசி னைமணி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.4 1642 ஏற்றி னையிம யத்துளெம் மீசனை இம்மை யைமறு மைக்கு மருந்தினை, ஆற்ற லை அண்டத் தப்புறத் துய்த்திடும் ஐய னைக்கையி லாழியொன் றேந்திய கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை, காற்றி னைப்புன லைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.5 1643 துப்ப னைத்துரங் கம்படச் சீறிய தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர் செப்பி னை,திரு மங்கைம ணாளனைத் தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி ஒப்ப னை,உல கேழினை யூழியை ஆழி யேந்திய கையனை அந்தணர் கற்பி னை,கழு நீர்மல ரும்வயல் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.6 1644 திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய விருத்த னை,விளங் கும்சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்த னை,அரி யைப்பரி கீறிய அப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற கருத்த னை,களி வண்டறை யும்பொழில் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.7 1645 வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக் கன்று வீசிய ஈசனை, பேய்மகள் துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய நஞ்சி னை,அமு தத்தினை நாதனை நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை, கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக், கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.8 1646 பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை வேள்வி யைவிளக் கினொளி தன்னை, மண்ணி னைமலை யையலை நீரினை மாலை மாமதி யைமறை யோர்தங்கள் கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.9 1647 கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன் என்று காத லால்கலி கன்றியு ரைசெய்த, வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ் விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர் மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில் கற்க லாம்கவி யின்பொருள் தானே. (2) 7.10.10 பெரிய திருமொழி எட்டாம் பத்து 1648 சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் டொண்சங்கம் என்கின் றாளால், மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக் கெற்றேகாண் என்கின் றாளால், முலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடி யிருக்கின் றாளால், கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.1 1649 செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின் றாளால், பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை என்கின் றாளால், ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் என்னப்பா என்கின் றாளால், கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.2 1650 துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் தோன்றுமால் என்கின் றாளால், மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின் றாளால், பொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால், கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.3 1651 தாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின் றாளால், போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால், ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின் றாளால், கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.4 1652 அடித்தலமும் தாமரையே அங்கையும் பங்கயமே என்கின் றாளால், முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் துள்ளகலா என்கின் றாளால், வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின் றாளால், கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.5 1653 பேரா யிரமுடைய பேராளன் பேராளன் என்கின் றாளால், ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின் றாளால், நீரார் மழைமுகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால், காரார் வயலமரும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.6 1654 செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால், அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால், மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால், கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.7 1655 கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின் றாளால், வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே ஒக்குமால் என்கின் றாளால், பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் உய்யோமோ என்கின் றாளால், கற்றநூல் மறையாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.8 1656 வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் மணநாறும் என்கின் றாளால், உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் பிரிகிலேன் என்கின் றாளால், பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாம் என்றே பயில்கின் றாளால், கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.9 1657 மாவளரு மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று, காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் தம்மானைக் கலியன் சொன்ன, பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் இவையைந்து மைந்தும் வல்லார், பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ்தக் கோரே. (2) 8.1.10 1658 தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே? (2) 8.2.1 1659 நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள், காணுமோ கண்ண புரமென்று காட்டினாள், பாணனார் திண்ண மிருக்க இனியிவள் நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே. 8.2.2 1660 அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய் வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள், பெருகுசீர்க் கண்ண புரம் என்று பேசினாள் உருகினாள், உள்மெலிந் தாள் இது வென்கொலோ. (2) 8.2.3 1661 உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை, பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான், கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல் வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ. 8.2.4 1662 கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை, பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள், வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள், வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே. 8.2.5 1663 வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம், இடவகை கொள்வது யாம் என்று பேசினாள், மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள் கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே. 8.2.6 1664 தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும், இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள் துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர் அரங்கமே என்ப திவள்தனக் காசையே. 8.2.7 1665 தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள் வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம் கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே? 8.2.8 1666 முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா, தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன், கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும் பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே? 8.2.9 1667 கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை, பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல், சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர், நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே. (2) 8.2.10 1668 கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும், திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும், விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே. (2) 8.3.1 1669 அரிவிரவு முகிற்fகணத்தா னகில்புகையால் வரையோடும் தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும், வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண், கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே. 8.3.2 1670 துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம் திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும் பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே. 8.3.3 1671 கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில், திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும், மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும் புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே. 8.3.4 1672 வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள் தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும் தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட, வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே. 8.3.5 1673 மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம், திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும், அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால், உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 8.3.6 1674 வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம், தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும், எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும், உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 8.3.7 1675 கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள் செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும், வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா, செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே. 8.3.8 1676 வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை, சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும், பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல் பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே. 8.3.9 1677 தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும் வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன், காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை, நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே. (2) 8.3.10 1678 விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன், மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர், கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல், வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.1 1679 வேத முதல்வன் விளங்கு புரிநூலன், பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி, காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான், தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.2 1680 விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி, அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும், கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான் வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. 8.4.3 1681 நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய், சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி, கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான், தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.4 1682 ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி, பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள், காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான், தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.5 1683 மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன், பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி, காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல், தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.6 1684 வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார்மன்னு தாச ரதியாய தடமார்வன், காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான், தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.7 1685 நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில், சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர் காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல், கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.8 1686 நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன், அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான், கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல், கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.9 1687 வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன், கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை, கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை, தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.10 1688 தந்தை காலில் விலங்கறவந்து தோன்றிய தோன்றல்பின், தமியேன்றன் சிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெறுமள விருந்தேனை, அந்தி காவலனமுதுறு பசுங்கதி ரவைசுட அதனோடும், மந்த மாருதம் வனமுலை தடவந்து வலிசெய்வ தொழியாதே. (2) 8.5.1 1689 மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன் வரைபுரை திருமார்பில், தாரி னாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன், ஊரும் துஞ்சிற்றுலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும், தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன் றறியேனே. 8.5.2 1690 ஆயன் மாயமே யன்றிமற் றென்கையில் வளைகளும் இறைநில்லா, பேயின் ஆருயி ருண்டிடும் பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ, தூய மாமதிக் கதிர்ச்சுடத் துணையில்லை இணைமுலை வேகின்றதால், ஆயன் வேயினுக் கழிகின்ற துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே. 8.5.3 1691 கயங்கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில், மயஙகவெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர் தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல், இயங்கு மாருதம் விலங்கிலென் ஆவியை எனக்கெனப் பெறலாமே. 8.5.4 1692 ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த ஆழி யான்,நமக் கருளிய அருளொடும் பகலெல்லை கழிகின்றதால், தோழி. நாமிதற் கென்செய்தும் துணையில்லை சுடர்படு முதுநீரில், ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர் அந்திவந் தடைகின்றதே. 8.5.5 1693 முரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின், வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன், எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா, கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமா றறியேனே. 8.5.6 1694 கலங்க மாக்கடல் கடைந்தடைத் திலங்கையர் கோனது வரையாகம், மலங்க வெஞ்சமத் தடுசரம் துரந்தவெம் மடிகளும் வாரானால், இலங்கு வெங்கதி ரிளமதி யதனொடும் விடைமணி யடும்,ஆயன் விலங்கல் வேயின தோசையு மாயினி விளைவதொன் றறியேனே. 8.5.7 1695 முழுதிவ் வையகம் முறைகெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி, மழுவி னால்மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால், ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை யடங்கவஞ் சிறைகோலி, தழுவு நள்ளிருள் தனிமையிற் கடியதோர் கொடுவினை யறியேனே. 8.5.8 1696 கனஞ்செய் மாமதிள் கணபுரத் தவனொடும் கனவினி லவன்தந்த, மனஞ்செ யின்பம்வந் துள்புக வெள்கியென் வளைநெக இருந்தேனை, சினஞ்செய் மால்விடைச் சிறுமணி ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும், அனந்த லன்றிலின் அரிகுரல் பாவியே னாவியை யடுகின்றதே. 8.5.9 1697 வார்கொள் மென்முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து, ஆர்வத் தாலவர் புலம்பிய புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த, கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி யொலிவல்லார், ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கிமை யவரொடும் கூடுவரே. (2) 8.5.10 1698 தொண்டீர். உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் திண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன், வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம் கண்டாள், கண்டு கொண்டுகந்த கண்ண புரம்நாம் தொழுதுமே. (2) 8.6.1 1699 பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து, பெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை, இருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப, கருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.2 1700 வல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை, அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான், வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை, கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.3 1701 மல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ் சிலைகால் வளைவித்து, கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று, தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ, கல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.4 1702 ஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம் ஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி சேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன் காமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.5 1703 வருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா முன் திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள், பெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி முன் கருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.6 1704 இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு, கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான், அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி,முன் கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.7 1705 மாலாய் மனமேயருந்துயரில் வருந்தா திருநீ வலிமிக்க காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும், மாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து, காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.8 1706 குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக, வன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன், சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற்f சகடம் சினமழித்து, கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.9 1707 கருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை, திருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன், மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார் இருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. (2) 8.6.10 1708 வியமுடை விடையினம் உடைதர மடமகள், குயமிடை தடவரை யகலம துடையவர், நயமுடை நடையனம் இளையவர் நடைபயில், கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே. (2) 8.7.1 1709 இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து துணைமலி முலையவள் மணமிகு கலவியுள், மணமலி விழவினொ டடியவர் அளவிய, கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.2 1710 புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை, மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர், முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல், கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.3 1711 ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய் போதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர் கோதிய மதுகரம் குலவிய மலர்மகள் காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.4 1712 தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.5 1713 மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில், தழுவிய உருவினர் திருமகள் மருவிய கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண் எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.6 1714 பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம் எரிதியொ டெனவின இயல்வினர் செலவினர் சுருதியொ டருமறை முறைசொலு மடியவர் கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.7 1715 படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு கொடிபுல்கு தடவரை அகலம துடையவர் முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர் கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.8 1716 புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும் வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.9 1717 மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர் கலியன தமிழிவை விழுமிய இசையினொடு ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே. (2) 8.7.10 1718 வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில் மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன், ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள், கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. (2) 8.8.1 1719 மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய், விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை, கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.2 1720 பாரார் அளவும் முதுமுந்நீர் பரந்த காலம், வளைமருப்பில் ஏரார் உருவத் தேனமாய் எடுத்த ஆற்ற லம்மானை, கூரார் ஆரல் இரைகருதிக் குருகு பாயக் கயலிரியும், காரார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.3 1721 உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து, விளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோன் அகலம் வெஞ்சமத்து, பிளந்து வளைந்த வுகிரானைப் பெருந்தண் செந்நெற் குலைதடிந்து, களஞ்செய் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.4 1722 தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால், முழுநீர் வையம் முன்கொண்ட மூவா வுருவி னம்மானை உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும் கழுநீர் மலரும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.5 1723 வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழுகால், படியார் அரசு களைகட்ட பாழி யானை யம்மானை, குடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும், கடியார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.6 1724 வைய மெல்லா முடன்வணங்க வணங்கா மன்ன னாய்த்தோன்றி, வெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண் டோட வெஞ்சமத்து, செய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும், கைதை வேலிக் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.7 1725 ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத் தான்தோன்றி, வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பாற்f செல்ல வெஞ்சமத்து, செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் மில்லிருப்ப, கற்ற மறையோர் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.8 1726 துவரிக் கனிவாய் நிலமங்கை துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள், இவரித் தரசர் தடுமாற இருள்நாள் பிறந்த அம்மானை, உவரி யோதம் முத்துந்த ஒருபா லொருபா லொண்செந்நெல், கவரி வீசும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.9 1727 மீனோ டாமை கேழலரி குறளாய் முன்னு மிராமனாய்த் தானாய் பின்னு மிராமனாய்த் தாமோ தரனாய்க் கற்கியும் ஆனான் றன்னை கண்ணபுரத் தடியேன் கலிய னொலிசெய்த தேனா ரின்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே. (2) 8.8.10 1728 கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை, எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள் அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.1 1729 தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார், வருமானம் தவிர்க்கும் மணியையணியுருவில், திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த பெருமானை அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே. 8.9.2 1730 விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி, மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன் றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ? (2) 8.9.3 1731 மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.4 1732 வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை, எந்தாய். போயறியாய் இதுவே யமையாதோ கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே. 8.9.5 1733 எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு, அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை, நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய், மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே. 8.9.6 1734 பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு, உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை, முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை எத்தால் யான்மறக்கேன் இதுசொல்லெனனேழைநெஞ்சே. 8.9.7 1735 கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே. 8.9.8 1736 கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ. (2) 8.9.9 1737 செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன் கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர், வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே. (2) 8.9.10 1738 வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம் உண்டானே உன்னை யுகந்துகந் துன்றனக்கே தொண்டானேற்கு என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம் கண்டானே கண்ண புறத்துறை யம்மானே. (2) 8.10.1 1739 பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும் ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால் வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும் கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.2 1740 மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ டுற்றிலேன் உற்றது முன்னடி யார்க்கடிமை மற்றெல்லம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே. (2) 8.10.3 1741 பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல் உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான் மண்ணாளா. வாள்நெடுங் கண்ணி மதுமலராள் கண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே. 8.10.4 1742 பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான் மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன் உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய் கற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.5 1743 ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை, பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.6 1744 வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர் கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.7 1745 மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன் பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும் காணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.8 1746 நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.9 1747 கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும் அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே. (2) 8.10.10 51 பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து 1748 வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளர வினணை மேவி சங்கமா ரங்கைத் தடமல ருந்திச் சாமமா மேனியென் தலைவன் அங்கமா றைந்து வேள்விநால் வேதம் அருங்கலை பயின்று எரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள்நின் றானே. (2) 9.1.1 1749 கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக் கராம்கொளக் கலங்கியுள் நினைந்து துவளமேல் வந்து தோன்றிவன் முதலை துணிபடச் சுடுபடை துரந்தோன் குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தலொண் கழனி திவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.2 1750 வாதைவந் தடர வானமும் நிலனும் மலைகளும் அலைகடல் குளிப்ப மீதுகொண் டுகளும் மீனுரு வாகி விரிபுனல் வரியகட் டொளித்தோன் போதலர் புன்னை மல்லிகை மௌவல் புதுவிரை மதுமல ரணைந்து சீதவொண் தென்றல் திசைதொறும் கமழும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.3 1751 வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண் பன்றியாய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் ஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத் து உயர்கொடி யொளிவளர் மதியம், சென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.4 1752 மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு பின்னுமே ழுலகும் ஈரடி யாகப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன் அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத் தலைபுன லிலைக்குடை நீழல் செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.5 1753 மழுவினால் அவனி அரசைமூ வெழுகால் மணிமுடி பொடிபடுத்து உதிரக் குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம் தவிர்ந்தவன் , குலைமலி கதலிக் குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும் குளிர்தரு சூதம்மா தவியும் செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.6 1754 வானுளா ரவரை வலிமையால் நலியும் மலிகடல் இலங்கையார் கோனை பானுசேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிரவில் வளைத்தோன் கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக் கணமுகில் முரசநின் றதிர தேனுலா வரிவண் டின்னிசை முரலும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.7 1755 அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை அஞ்சிடா தேயிட, அதற்குப் பெரியமா மேனி யண்டமூ டுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன் வரையின்மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும் திரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும் திருக்கண்ணங் குடியுள் நின் றானே. 9.1.8 1756 பன்னிய பாரம் பார்மகட் கொழியப் பாரத மாபெரும் போரில் மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர் மைத்துனர்க் குய்த்தமா மாயன் துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய் தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.9 1757 கலையுலாவல்குல் காரிகை திறத்துக் கடல்பெரும் படையொடும் சென்று சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற திருக்கண்ணங் குடியுள்நின் றானை மலைகுலா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள் உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும் வல்லவர்க் கில்லைநல் குரவே. (2) 9.1.10 1758 பொன்னிவர் மேனி மரக தத்தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின் இவர் வாயில்நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர்தோழீ, என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா. (2) 9.2.1 1759 தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் செஞ்சுட ராழியும் சங்குமேந்தி பாடக மெல்லடி யார்வ ணங்கப் பன்மணி முத்தொடி லங்குசோதி ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.2 1760 வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம் தாயின நாயக ராவர் தோழீ. தாமரைக் கண்கள் இருந்தவாறு, சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்விய வாகி மலர்ந்தசோதி ஆயிரம் தோளொ டிலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.3 1761 வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி, நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார் நாகரி கர்பெரி துமிளையர் செம்பவ ளமிவர் வாயின் வண்ணம் தேவ ரிவர துருவம்சொல்லில் அம்பவ ளத்திர ளேயு மொப்பர் அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.4 1762 கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவல ரேயொப்பர் குன்றமன்ன பாழியும் தோளுமோர் நான்கு டையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில் மாகடல் போன்றுளர் கையில்வெய்ய, ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா. 9.2.5 1763 வெஞ்சின வேழம் மருப்பொ சித்த வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை தஞ்சுடை யாளர்கொல் யான றியேன் தாமரைக் கண்க ளிருந்தவாறு கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த காளையா ரவர்கண் டார்வணங்கும் அஞ்சன மாமலை யேயு மொப்பர் அச்சோவொருவரழகியவா. 9.2.6 1764 பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும் பேரரு ளாளர்கொல்? யானறியேன், பணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழீ. பண்டிவர் தம்மையும் கண்டறியோம் அணிகெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கய மேனிவானத்து, அணிகெழு மாமுகி லேயு மொப்பர் அச்சோவொருவரழகியவா. 9.2.7 1765 மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலைம ணாளர்வந்து என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்? மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த மாமுகில் போன்றுளர் வந்துகாணீர் அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார் அச்சோவொருவரழகியவா. 9.2.8 1766 எண்டிசை யுமெறி நீர்க்க டலும் ஏழுல குமுட னேவிழுங்கி மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும் மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன் கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும் அண்டத் தமரர் பணிய நின்றார் அச்சோவொருவரழகியவா. 9.2.9 1767 அன்னமும் கேழலும் மீனு மாய ஆதியை நாகை யழகியாரை கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க்கலி கன்றி குன்றா இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார், மன்னவ ராயுல காண்டு மீண்டும் வானவ ராய்மகிழ் வெய்துவரே. (2) 9.2.10 1768 தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன் தொழுதுமெழு பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மணிநீழல்வாய் என்னைநை வித்தெழல் கொண்டகன் றபெரு மானிடம், புன்னைமுத் தம்பொழில் சூழ்ந்தழ காய புல்லாணியே. (2) 9.3.1 1769 உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள், பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம் பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே. 9.3.2 1770 ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதுமெழு தாது மல்கு தடஞ்சூழ் பொழில்தாழ்வர் தொடர்ந்து பின் பேதை நினைப் பிரியே னினியென் றகன்றானிடம் போது நாளுங் கமழும் பொழில்சூழ்ந்த புல்லாணியே. 9.3.3 1771 கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் நங்க ளீசன் நமக்கே பணித்த மொழிசெய்திலன் மங்கை நல்லாய் தொழுது மெழுபோ யவன் மன்னுமூர் பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே. 9.3.4 1772 உணரி லுள்ளம் சுடுமால் வினையேன் தொழுதுமெழு துணரி நாழல் நறும்போது நம்சூழ் குழல்பெய்து பின் தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம், புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே. 9.3.5 1773 எள்கி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு வள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம் கள்ள விழும்மலர்க் காவியும் தூமடற்கைதையும், புள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே. 9.3.6 1774 பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய் இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்? விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு வெண்திரை புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே. 9.3.7 1775 அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய், சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு, உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே. 9.3.8 1776 ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளிமாமலர்ப் பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் ஆது தாரா னெனிலும் தரும் அன்றியுமன்பராய்ப் போதும் மாதே தொழுதும் அவன்மன்னு புல்லாணியே. 9.3.9 1777 இலங்கு முத்தும் பவளக் கொழுந்து மெழில்தாமரை புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல் கலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை வலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே. (2) 9.3.10 1778 காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும் ஏவாயி னூடியங்கும் எ·கில் கொடிதாலோ பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன் பாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே. (2) 9.4.1 1779 முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன் பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே. 9.4.2 1780 வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம் செவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள் பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன் தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே. 9.4.3 1781 பரிய இரணியன் தாகம் அணியுகிரால் அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன் அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே. 9.4.4 1782 வில்லால் இலங்கை மலங்கச் சரந்fதுரந்த வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும், எல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும், புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே. 9.4.5 1783 சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான் அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால் செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன் இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே. 9.4.6 1784 கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல் தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ புனையார் மணிமாடப் புல்லாணி கைதொழுதேன் வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே. 9.4.7 1785 தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன் தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே. 9.4.8 1786 வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும், ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு, போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன், ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே. 9.4.9 1787 பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார் மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே. (2) 9.4.10 1788 தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித் துவள என் னெஞ்சகம் சோரவீரும் சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன் இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார் என்னல மைந்துமுன் கொண்டுபோன குவளை மலர்நிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின். (2) 9.5.1 1789 தாதவிழ் மல்லிகை புல்லிவந்த தண்மதி யினிள வாடையின்னே ஊதை திரிதந் துழறியுண்ண ஓரிர வுமுறங் கேன் உறங்கும் பேதையர் பேதைமை யாலிருந்து பேசிலும் பேசுக பெய்வளையார் கோதை நறுமலர் மங்கைமார்வன் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின். 9.5.2 1790 காலையும் மாலையொத் துண்டுகங்குல் நாழிகை யூழியின்f நீண்டுலாவும், போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும் பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி மாலவன் மாமணி வண்ணன்மாயம் மற்று முளவவை வந்திடாமுன் கோல மயில்பயி லும்புறவில் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின். 9.5.3 1791 கருமணி பூண்டுவெண் ணாகணைந்து காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும் ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள ஓரிர வுமுறங் காதிருப்பேன் பெருமணி வானவ ருச்சிவைத்த பேரரு ளாளன் பெருமைபேசி குருமணி நீர்கொழிக் கும்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.4 1792 திண்டிமி லேற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற கோல இளம்பிறை யோடுகூடி பண்டையவல்லவிவைநமக்குப் பாவியே னாவியை வாட்டஞ்செய்யும் கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு குறுங்யுஉடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.5 1793 எல்லியும் நன்பக லுமிருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார் நல்லர் அவர்திறம் நாமறியோம் நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை வல்லன சொல்லி மகிழ்வரேனும் மாமணி வண்ணரை நாம்மறவோம் கொல்லை வளரிள முல்லைபுல்கு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.6 1794 செங்க ணெடிய கரியமேனித் தேவ ரொருவரிங் கேபுகுந்து என் அங்கம் மெலிய வளைகழல ஆதுகொ லோ என்று சொன்னபின்னை ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ டாடு மதனை யறியமாட்டேன் கொங்கலர் தண்பணை சூழ்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.7 1795 கேவல மன்று கடலினோசை கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து என் ஆவி யளவும் அணைந்துநிற்கும் அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு ஏவலங் காட்டி இவனொருவன் இப்படி யேபுகுந் தெய்திடாமுன் கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.8 1796 சோத்தென நின்று தொழவிரங்கான் தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும் போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான் போயின வூரறி யேன் என்கொங்கை மூத்திடு கின்றன மற்றவன்றன் மொய்யக லம் அணை யாதுவாளா கூத்த னிமையவர் கோன்விரும்பும் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.9 1797 செற்றவன் தென்னிலங் கைமலங்கத் தேவர்பி ரான்திரு மாமகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரரு ளாளன் பெருமைபேசக் கற்றவன் காமரு சீர்க்கலியன் கண்ணகத் தும்மனத் துமகலாக் கொற்றவன் முற்றுல காளிநின்ற குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். (2) 9.5.10 1798 அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர், பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும் தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே. (2) 9.6.1 1799 துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள், பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும், செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும், கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே. 9.6.2 1800 வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள், கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர், ஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி, கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே. 9.6.3 1801 சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று, அரக்கன் உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும், இரவும் பகலும் ஈன்தேன் முரல, மன்றெல்லாம் குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே. 9.6.4 1802 கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர் ஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும், மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான், கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்யுஉடியே. 9.6.5 1803 தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி, தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள், மாநீர் வண்ணன் மருவி யுறையும் இடம் வானில் கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே. 9.6.6 1804 வல்லிச் சிறு_ண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற, அல்லல் சிந்தை தவிர அடைமினடியீர்காள் சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான், கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே. 9.6.7 1805 நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள், ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள், தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும் கூர்வாய் நாரை பேடையொ டாடும் குறுங்குடியே. 9.6.8 1806 நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி, சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள், என்றும் மிரவும் பகலும் வரிவண் டிசைபாட, குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே. 9.6.9 1807 சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம், கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல், கலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே. (2) 9.6.10 1808 தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல் அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. (2) 9.7.1 1809 மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்ற_ண் ணிடைநுடங்கும், அன்னமென் னடையினார் கலவியை அருவருத் தஞ்சி னாயேல், துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் காகிமுன் தூது சென்ற மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.2 1810 பூணுலா மென்முலைப் பாவைமார் பொய்யினை மெய்யி தெ ன்று, பேணுவார் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல் நீணிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண்ணி ரந்த மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.3 1811 பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் பணைமுலை அணைதும் நாம் என்று, எண்ணுவார் எண்ணம தொழித்துநீ பிழைத்துய்யக் கருதி னாயேல், விண்ணுளார் விண்ணின்மீ தியன்றவேங் கடத்துளார் வளங்கொள் முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.4 1812 மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ துயரெனக் கருதி னாயேல் நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் வைத்தவள் நாளை யுண்ட மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.5 1813 உருவினார் பிறவிசேர் ஊன்பொதி நரம்புதோல் குரம்பை யுள்புக்கு அருவிநோய் செய்துநின் றைவர்தாம் வாழ்வதற் கஞ்சி னாயேல் திருவினார் வேதநான் கைந்துதீ வேள்வியோ டங்க மாறும் மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.6 1814 நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல், தீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.7 1815 மஞ்சுசேர் வானெரி நீர்நிலம் காலிவை மயங்கி நின்ற அஞ்சுசேராக்கையை அரணமன் றென்றுய்யக் கருதி னாயேல், சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் பாவையும் தாமும் நாளும் வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.8 1816 வெள்ளியார் பிண்டியார் போதியார் என்றிவர் ஓது கின்ற கள்ளநூல் தன்னையும் கருமமன் றென்றுய்யக் கருதி னாயேல், தெள்ளியார் கைதொழும் தேவனார் மாமுநீர் அமுது தந்த, வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.9 1817 மறைவலார் குறைவிலார் உறையுமூர் வல்லவாழடிகள் தம்மை, சிறைகுலா வண்டறை சோலைசூழ் கோலநீள் ஆலி நாடன் கறையுலா வேல்வல்ல கலியன்வாய் ஒலியிவை கற்று வல்லார் இறைவராய் இருநிலம் காவல்பூண் டின்பநன் கெய்து வாரே. (2) 9.7.10 1818 முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார் கலவியை விடுதடு மாறல் அந்தர மேழும் அலைகட லேழும் ஆயவெம் மடிகள்தம் கோயில், சந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவிவந் தருவிகள் நிரந்து, வந்திழி சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே. (2) 9.8.1 1819 இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர்முடிக் கடவுள்தம் கோயில் விண்டலர் தூளி வேய்வளர் புறவில் விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.2 1820 பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப் பெருநிலம் அருளின்முன் அருளி அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்தவெம் மடிகள்தம் கோயில் கணிவளர் வேங்கை நெடுநில மதனில் குறவர்தம் கவணிடைத் துரந்த மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.3 1821 சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச் சுடுசரம் அடுசிலைத் துரந்து நீர்மையி லாத தாடகை மாள நினைந்தவர் மனம்கொண்ட கோயில் கார்மலி வேங்கை கோங்கலர் புறவில் கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன் வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.4 1822 வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய மணிமுடி ஒருபதும் புரள அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட அமர்ச்செய்த அடிகள்தம் கோயில் பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப் பிரசம்வந் திழிதர பெருந்தேன் மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.5 1823 விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று விளங்கனிக் கிளங்கன்று விசிறி, குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த கூத்தவெம் மடிகள்தம் கோயில் தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறென்று முனிந்து மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.6 1824 தேனுகன் ஆவி போயுக அங்கோர் செழுந்திரள் பனங்கனி யுதிர தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில், வானகச் சோலை மரகதச் சாயல் மாமணிக் கல்லதர் நிறைந்து, மானுகர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.7 1825 புதமிகு விசும்பில் புணரிசென் றணவப் பொருகடல் அரவணைத் துயின்று, பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனிமுகில் வண்ணர்தம் கோயில், கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள்வழிக் களிவண்டு பருக, மதமிகு சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.8 1826 புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு, எந்தைபெம் மானார் இமையவர் தலைவர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில், சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும், மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.9 1827 வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை மாமணி வண்ணரை வணங்கும், தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல் சூழ்வயல் ஆலிநன் னாடன் கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன் கலியன்வா யொலிசெய்த பனுவல், கொண்டிவை பாடும் தவமுடை யார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே. (2) 9.8.10 1828 மூவரில் முன்முதல் வன்முழங் கார்கட லுள்கிடந்து, பூவுல ருந்திதன் னுள்புவ னம்படைத் துண்டுமிழ்ந்த, தேவர்கள் நாயக னைத்திரு மாலிருஞ் சோலைநின்ற, கோவலர் கோவிந் தனைக்கொடி யேரிடை கூடுங்கொலோ. (2) 9.9.1 1829 புனைவளர் பூம்பொழி லார்பொன்னி சூழரங் கநகருள் முனைவனை, மூவுல கும்படைத் தமுதல் மூர்த்திதன்னை, சினைவளர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்றான் கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே. (2) 9.9.2 1830 உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல், கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை, திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற, அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே. 9.9.3 1831 சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த, பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை, திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற, நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே. 9.9.4 1832 தானவன் வேள்விதன் னில்தனி யேகுற ளாய்நிமிர்ந்து, வானமும் மண்ணக மும் அளந் ததிரி விக்கிரமன், தேனமர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற, வானவர் கோனையின் றுவணங் கித்தொழ வல்லள் கொலோ. 9.9.5 1833 நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான், வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான், தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற, கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ. (2) 9.9.6 1834 புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து, கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை, தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற, வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ. 9.9.7 1835 பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று, காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை, தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற, மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே. (2) 9.9.8 1836 வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை, புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை, சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற, நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே. (2) 9.9.9 1837 தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற, ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று, மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே. (2) 9.9.10 1838 எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்கு நாயகன், ஏத் தடியவர் தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான், பொங்குதண் ணருவி புதம்செய்யப் பொன்களே சிதறு மிலங்கொளி, செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே. (2) 9.10.1 1839 எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய், நிலமகள் செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான், மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து, மாருதம் தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே. 9.10.2 1840 வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை, எமக்கு ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான், துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றைச் சந்தன முந்தி வந்தசை, தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே. 9.10.3 1841 ஏறு மேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து, உடம்பிலோர் கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான், நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு, நன்னறுந் தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே. 9.10.4 1842 வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன் விண்ணவர் கோன்ம துமலர்த் தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான், மங்குல் தோய்மணி மாட வெண்கொடி மாக மீதுயர்ந் தேறி, வானுயர் திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே. 9.10.5 1843 காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து, மற்றவன் ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான், நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென, தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே. 9.10.6 1844 கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று, மாமழை நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான், குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து,இளந் தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே. 9.10.7 1845 பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து, அடியேனை யாளுகந்து ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான், தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே. 9.10.8 1846 கோவை யின்தமிழ் பாடு வார்குடம் ஆடு வார்தட மாமலர்மிசை, மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர், மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும், தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே. 9.10.9 1847 ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணிபொழில் சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை, நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமி ழால்நி னைந்த,இந் நாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே. (2) 9.10.10 68 பெரிய திருமொழி பத்தாம் பத்து கலி விருத்தம் 1848 ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள் வருநல் தொல்கதி யாகிய மைந்தனை நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய் கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே (2) 10.1.1 1849 பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர் மின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய் என்னை யாளுடை யீசனை யெம்பிரான் றன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே 10.1.2 1850 வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே 10.1.3 1851 துளக்க மில்சுட ரை,அவு ணனுடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய் அளப்பி லாரமு தையம ரர்க்கருள் விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4 1852 சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர் நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என் உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண் விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே 10.1.5 1853 வானை ஆரமு தம்தந்த வள்ளலை தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய் ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம் கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே 10.1.6 1854 கூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய் மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய் பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய வேந்த னைச்சென்று காண்டும்வெ· காவுளே 10.1.7 1855 பத்த ராவியைப் பான்மதி யை,அணித் தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய் முத்தி னைமணி யைமணி மாணிக்க வித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே 10.1.8 1856 கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர் கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய் நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே 10.1.9 1857 பெற்றம் ஆளியை பேரில் மணாளனை கற்ற _ல்கலி கன்றி யுரைசெய்த சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே 10.1.10 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1858 இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை இம்மை யேயெமக் கெய்திற்றுக் காணீர் பரக்க யாமின் றுரைத்தென் இரவணன் பட்ட னனினி யவர்க்கு ரைக்கோம் குரக்கு நாயகர் காள்.இளங் கோவே கோல வல்வி லிராம பிரானே அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள் அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.1 1859 பத்து நீள்முடி யுமவற் றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம், சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான் செய்வ தொன்றறி யாவடி யோங்கள் ஒத்த தோளிரண் டுமொரு முடியும் ஒருவர் தம்திறத் தோமன்றி வாழ்ந்தோம் அத்த. எம்பெரு மான்.எம்மைக் கொல்லேல் அஞ்சி னேம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.2 1860 தண்ட காரணி யம்புகுந் தன்று தைய லைத்தக விலியெங் கோமான் கொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர் குற்ற மில்லைகொல் லேல்குல வேந்தே பெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப் பேசு கின்றதென்? தாசர தீ,உன் அண்ட வணர் உகப்பதே செய்தாய் அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.3 1861 எஞ்ச லில்இல்ங் கைக்கிறை யெங்கோன் றன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே நஞ்சு தானரக் கர்குடிக் கென்று நங்கை யையவன் தம்பியே சொன்னான் விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார்பொழில் மாமயி லன்ன அஞ்சி லோதியைக் கொண்டு நடமின் அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.4 1862 செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன் சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து வம்பு லாம்கடி காவில் சிறையா வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர் கும்ப னோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.5 1863 ஓத மாகட லைக்கடந் தேறி உயர்க்கொள் மாக்கடி காவை யிறுத்து காதல் மக்களும் சுற்றமுங் கொன்று கடியி லங்கை மலங்க எரித்துத் தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே ஆதர் நின்று படுகின்ற தந்தோ. அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.6 1864 தழ மின்றிமுந் நீரையஞ் ஞான்று தகைந்த தேகண்டு வஞ்சி_ண் மருங்குல் மாழை மான்மட நோக்கியை விட்டு வாழ்கி லாமதி யில்மனத் தானை ஏழை யையிலங் கைக்கிறை தன்னை எங்க ளையொழி யக்கொலை யவனை சூழ மாநினை மாமணி வண்ணா. சொல்லி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.7 1865 மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா அங்க யற்கண்ணி னார்கள் இருப்ப தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து தஞ்ச மேசில தாபத ரென்று புனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த புன்மை யாளன் நெஞ் சில்புக எய்த அனங்க னன்னதிண் டோளெம்மி ராமற் கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.8 1866 புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில் பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின் சரங்க ளேகொடி தாயடு கின்ற சாம்ப வானுடன் நிற்கத் தொழுதோம் இரங்கு நீயெமக் கெந்தைபி ரானே. இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா குரங்கு கட்கர சே.எம்மைக் கொல்லேல். கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.9 1867 அங்கவ் வானவர்க் காகுலம் தீர அணியி லங்கை அழித்தவன் றன்னை பொங்கு மாவல வன்கலி கன்றி புகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில் எங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர். இம்மை யேயிட ரில்லை, இறந்தால் தங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின் சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ. 10.2.10 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1868 ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம் சோத்தம் நம்பீ. சுக்கி ரீவா. உம்மைத் தொழுகின்றோம் வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே கூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி தூரமே 10.3.1 1869 எம்பி ரானே. என்னை யாள்வாய் என்றென் றலற்றாதே அம்பின் வாய்ப்பட் டாற்ற கில்லா திந்திர சித்தழிந்தான் நம்பி அனுமா. சுக்கி ரீவ. அங்கத னே.நளனே கும்ப கர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே 10.3.2 1870 ஞால மாளு முங்கள் கோமான் எங்கள் இரவணற்குக் கால னாகி வந்த வாகண் டஞ்சிக் கருமுகில்போல் நீலன் வாழ்கசு டேணன் வாழ்க அங்கதன் வாழ்கவென்று கோல மாக ஆடு கின்றோம் குழமணி தூரமே 10.3.3 1871 மணங்கள் நாறும் வார்குழ லார்கள் மாதர்க ளாதரத்தை புணர்ந்த சிந்தைப் புன்மை யாளன் பொன்ற வரிசிலையால் கணங்க ளுண்ண வாளி யாண்ட காவல னுக்கிளையோன் குணங்கள் பாடி யாடு கின்றோம் குழமணி தூரமே 10.3.4 1872 வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக இன்று தம்மி னெங்கள் வாணாள் எம்பெரு மான்தமர்காள் நின்று காணீர் கண்க ளார நீரெமைக் கொல்லாதே குன்று போல ஆடு கின்றோம் குழமணி தூரமே 10.3.5 1873 கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து,இலங்கை அல்லல் செய்தா னுங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து வெல்ல கில்லா தஞ்சி னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா, கொல்ல வேண்டா ஆடு கின்றோம் குழமணி தூரமே 10.3.6 1874 மாற்ற மாவ தித்த னையே வம்மின் அரக்கருளீர் சீற்றம் _ம்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல்பி றப்பில் அனுமனை வாழ்கவென்று கூற்ற மன்னார் காண ஆடீர் குழமணி தூரமே 10.3.7 1875 கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம் துவள, வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே தவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன் குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே 10.3.8 1876 ஏடொத் தேந்தும் நீளி லைவேல் எங்கள் இரவணனார் ஓடிப் போனார், நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோம னாணை தொடரேன்மின் கூடி கூடி யாடு கின்றோம் குழமணி தூரமே 10.3.9 1877 வென்ற தொல்சீர்த் தென்னி லங்கை வெஞ்சமத்து அன்றரக்கர் குன்ற மன்னா ராடி உய்ந்த குழமணி தூரத்தை கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் படிநின் றாடுமினே 10.3.10 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1878 சந்த மலர்க்குழல் தாழத் தானுகந் தோடித் தனியே வந்து,என் முலைத்தடந் தன்னை வாங்கிநின் வாயில் மடுத்து, நந்தன் பெறப்பெற்ற நம்பீ. நானுகந் துண்ணும் அமுதே, எந்தை பெருமனே. உண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே 10.4.1 1879 வங்க மறிகடல் வண்ணா.மாமுகி லேயொக்கும் நம்பீ செங்க ணெடிய திருவே செங்கம லம்புரை வாயா, கொங்கை சுரந்திட வுன்னைக் கூவியும் காணாதி ருந்தேன் எங்கிருந் தாயர்க ளோடும் என்விளை யாடுகின் றாயே 10.4.2 1880 திருவில் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைக ளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு, உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடு கின்ற, மருவிக் குடங்கா லிருந்து வாய்முலை யுண்ணநீ வாராய் 10.4.3 1881 மக்கள் பெறுதவம் போலும் வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர்கண்ணுக் கொக்கும் முதல்வா மதக்களி றன்னாய் செக்கர் இளம்பிறை தன்னை வாங்கிநின் கையில் தருவன் ஒக்கலை மேலிருந் தம்மம் உகந்தினி துண்ணநீ வாராய் 10.4.4 1882 மைத்த கருங்குஞ்சி மைந்தா.மாமரு தூடு நடந்தாய், வித்தக னேவிரை யாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா, இத்தனை போதன்றி யென்றன் கொங்கை சுரந்திருக்க கில்லா, உத்தம னே.அம்மம் உண்ணாய் உலகளந் தாய்.அம்மம் உண்ணாய் 10.4.5 1883 பிள்ளய்கள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை கள்ளம் மனத்தி லுடையை காணவே தீமைகள் செய்தி உள்ள முருகியென் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடு கின்ற பள்ளிக் குறிப்புச்செய் யாதே பாலமு துண்ணநீ வாராய் 10.4.6 1884 தன்மக னாகவன் பேய்ச்சி தான்முலை யுண்ணக் கொடுக்க வன்மக னாயவள் ஆவி வாங்கி முலையுண்ட நம்பி நன்மகள் ஆய்மக ளோடு நானில மங்கை மணாளா என்மக னே.அம்ம முண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே 10.4.7 1885 உந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால் நொந்திட மோதவுங் கில்லேன்_ங்கள்தம் ஆநிரை யெல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போதங்கு நில்லேல்ஆழியங் கையனே. வாராய் 10.4.8 1886 பெற்றத் தலைவனெங் கோமான் பேரரு ளாளன் மதலாய், சுற்றக் குழாத்திளங் கோவே. தோன்றிய தொல்புக ழாளா, கற்றினந் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே எற்றுக்கென் அம்மமுண் ணாதே எம்பெரு மானிருந் தாயே 10.4.9 1887 இம்மை யிடர்க்கெட வேண்டி ஏந்தெழில் தோள்கலி கன்றி செம்மைப் பனுவல்_ல் கொண்டு செங்க ணெடியவன் றன்னை அம்மமுண் என்றுரைக் கின்ற பாட லிவையைந்து மைந்தும் மெய்ம்மை மனத்துவைத் தேத்த வினவ ராகலு மாமே 10.4.10 கலித்தாழிசை 1888 பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண, ஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கோத வண்ணனே. சப்பாணி ஒளிமணி வண்ணனே. சப்பாணி (2). 10.5.1 1889 தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண் டேயெம் பிராக்கள் இருநிலத் தெங்கள்தம் ஆயர் அழக அடிகள் அரவிந்த வாயவ னே. கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.2 1890 தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால் தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த தாமோ தரா. கொட்டாய் சப்பாணி தமரைக் கண்ணனே. சப்பாணி 10.5.3 1891 பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து உற்றா ரொருவரு மின்றி யுலகினில், மற்றரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட கற்றாய னே.கொட்டாய் சப்பாணி கார்வண்ண னே.கொட்டாய் சப்பாணி 10.5.4 1892 சோத்தென நின்னைத் தொழுவன் வரந்தர, பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய், பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச் சாற்றியோ ராயிரம் சப்பாணி தடங்கைக ளால்கொட்டாய் சப்பாணி 10.5.5 1893 கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு நானவல் அப்பம் தருவன் கருவிளைப் பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே, கோவல னே. கொட்டாய் சப்பாணி குடமா டீ.கொட்டாய் சப்பாணி. 10.5.6 1894 புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து, துள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை, அள்ளிய கையா லடியேன் முலைநெருடும் பிள்ளைப்பி ரான். கொட்டாய் சப்பாணி பேய்முலை யுண்டானே. சப்பாணி. 10.5.7 1895 யாயும் பிறரும் அறியாத யாமத்து, மாய வலவைப்பெண் வந்து முலைதர, பேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட, வாயவ னே.கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.8 1896 கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை தள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை, மெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட, வள்ளலே. கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.9 1897 காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன், பேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட சீராளா, செந்தா மரைக்கண்ணா. தண்டுழாய்த் தாராளா, கொட்டாய் சப்பாணி தடமார்வா கொட்டாய் சப்பாணி. 10.5.10 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1898 எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே? நரநா ரணனா யுலகத் தற_ல் சிங்கா மைவிரித் தவனெம் பெருமான் அதுவன் றியும்செஞ் சுடரும் நிலனும், பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகபொன் மிடறத் தனைபோது, அங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே (2) 10.6.1 1899 குன்றொன்று மத்தா அரவம் அளவிக் குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால் நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர நினைத்த பெருமான் அதுவன் றியும்முன், நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ் மலையே ழுலகே ழொழியா மைநம்பி, அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே 10.6.2 1900 உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள் உலப்பில் வலியால் அவர்பால், வயிரம் விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ அவர்நா ளொழித்த பெருமான் முனநாள், வளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று மலைபோ லவுண னுடல்வள் ளுகிரால், அளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.3 1901 தளர்ந்திட் டிமையோர் சரண்தா வெனத்தான் சரணாய் முரணா யவனை உகிரால் பியள்ந்திட் டமரர்க் கருள்செய் துகந்த பெருமான் திருமால் விரிநீ ருலகை, வளர்ந்திட்ட தொல்சீர் விறல்மா வலியை மண்கொள்ள வஞ்சித் தொருமாண் குறளாய் அளந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே 10.6.4 1902 நீண்டான் குறளாய் நெடுவா னளவும் அடியார் படுமாழ் துயராய வெல்லாம், தீண்டா மைநினைந் திமையோ ரளவும் செலவைத் தபிரான் அதுவன் றியும்முன், வேண்டா மைநமன் றமரென் தமரை வினவப் பெறுவார் அலர்,என்று, உலகேழ் ஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.5 1903 பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப் பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம், ஒழித்திட் டவரைத் தனக்காக்க வல்ல பெருமான் திருமா லதுவன் றியும்முன், தெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன் சினத்தோள் அவையா யிரமும் மழுவால் அழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.6 1904 படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள் பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம், துடைத்திட் டவரைத் தனக்காக்க வென்னத் தெளியா அரக்கர் திறலபோய் அவிய, மிடைத்திட் டெழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம, கடலை அடைத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.7 1905 நெறித்திட்ட மென்கூழை நன்னே ரிழையோ டுடனாய வில்லென்ன வல்லே யதனை, இறுத்திட் டவளின்ப மன்போ டணைந்திட டிளங்கொற் றவனாய்த் துளங்காத முந்நீர், செறித்திட் டிலங்கை மலங்க அரக்கன் செழுநீண் முடிதோ ளொடுதாள் துணிய, அறுத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.8 1906 சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத் தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா திரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய் இருகூறு செய்த பெருமான் முனநாள் வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து மலைபோ லுருவத் தொரிராக் கதிமூக்கு, அரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.9 1907 நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய், அன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ டாப்புண் டிருந்த பெருமான் அடிமேல், நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன் கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார், என்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி இமையோர்க்கு மப்பால் செலவெய் துவாரே 10.6.10 எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1908 மான முடைத்துங்க ளாயர் குலமத னால்பிறர் மக்கள் தம்மை ஊன முடையன செய்யப் பெறாயென் றிரப்ப னுரப்ப கில்லேன் நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள். நானென் செய்கேன்? தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர்கடை கின்றான் போலும். 10.7.1 1909 காலை யெழுந்து கடைந்தவிம் மோர்விற்கப் போகின்றேன் கண்டே போனேன், மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால் மற்றுவந் தாரு மில்லை, மேலை யகத்துநங் காய். வந்து காண்மின்கள் வெண்ணெ யேயன்று, இருந்த பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன் என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.2 1910 தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள். உறி மேலைத் தடாநி றைந்த, வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை வாரி விழுங்கி யிட்டு, கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள் கையெல் லாம்நெய், வயிறு பிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும் பேதையேன் என்செய் கேனோ. 10.7.3 1911 மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற வளைவண்ண நன்மா மேனி, தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது அவனி வைசெய் தறியான் பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்ற வாதவழ்ந் திட்டு, இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.4 1912 தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன் தோழிமா ராரு மில்லை, சந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை யாடு மிடம்கு றுகி, பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும், நந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய். என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.5 1913 மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை, அண்ணல் இலைக்குழ லூதிநம் சேரிக்கே அல்லிற் றான்வந்த பின்னை, கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக் கமலச் செவ்வாய்வெ ளுப்ப, என்மகள் வண்ண மிருக்கின்ற வாநங்காய். என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.6 1914 ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென் றாயர் விழவெ டுப்ப, பாசனம் நல்லன பண்டிக ளால்புகப் பெய்த அதனை யெல்லாம், போயிருந் தங்கொரு பூத வடிவுகொண் டுன்மக னின்று நங்காய், மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி வளைத்துண் டிருந்தான் போலும். 10.7.7 1915 தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர் ஓர்க்குடன் துற்றிடு மென்று, ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற் கெள்கி யிவனை நங்காய் சோத்தம் பிரான். இவை செய்யப் பெறாய். என் றிரப்பன் உரப்ப கில்லேன், பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப் பேசுவ தஞ்சு வேனே. 10.7.8 1916 ஈடும் வலியும் உடையவிந் நம்பி பிறந்த ஏழு திங்களில், ஆடலர் கண்ணியி னானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன், சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடி யால்,மலை போல ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவ தஞ்சு வேனே. 10.7.9 1917 அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள். ஆயிர நாழி நெய்யைப், பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற பாகந் தான்வை யார்களே, கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை, நெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ . என்செய்கே னென்செய் கேனோ . 10.7.10 1918 அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ. ஆயர் மடமக் களைப், பங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள் பின்னே சென்றொளித் திருந்து, அங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர வேரி டையா ரிரப்ப, மங்கைநல் லீர்.வந்து கொண்மின் என்றுமரம் ஏறி யிருந்தாய் போலும் 10.7.11 1919 அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக் காண்மை யும்சே வகமும், உச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக் குரைத்திலன் தானின் றுபோய், பச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டு பாய்ந்து புக்கு,ஆ யிரவாய் நச்சழல் பொய்கையில் நாகத்தி னோடு பிணங்கிநீ வந்தாய் போலும். 10.7.12 1920 தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனி யேநின்று தாம்செய் வாரோ?, எம்பெரு மான். உன்னைப் பெற்ற வயிறுடை யேனினி யானென் செய்கேன்?, அம்பர மேழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்க ணுடை, வம்பவிழ் கானத்து மால்விடை யோடு பிணங்கிநீ வந்தாய் போலும். 10.7.13 1921 அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித் 80 தஞ்ச அருவரை போல, மன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய மைந்தனை மாக டல்சூழு, கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க்கலி கன்றி இன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க் கேது மிடரில் லையே. (2) 10.7.14 கலிவிருத்தம் 1922 காதில் கடிப்பிடுக் கலிங்க முடுத்து, தாதுநல் லதண்ணந் துழாய்கொ டணிந்து, போது மறுத்துப் புறமேவந் துநின்றீர், ஏதுக்கிது என்னிது என்னிது என்னோ. (2) 10.8.1 1923 துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி, கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி, சுவரார் கதவின் புறமேவந்து நின்றீர், இவரா ரிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.2 1924 கருளக் கொடியொன் றுடையீர். தனிப்பாகீர், உருளச் சகடம துறக்கில் நிமிர்த்தீர், மருளைக் கொடுபாடி வந்தில்லம் புகுந்தீர், இருளத் திதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.3 1925 நாமம் பலவு முடைநா ரணநம்பீ, தாமத் துளவம் மிகநா றிடுகின்றீர், காம னெனப்பாடி வெந்தில்லம் புகுந்தீர், ஏமத் திது வென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.4 1926 சுற்றும் குழல்தாழச் சுரிகை யணைத்து, மற்றும் பலமாமணி பொன்கொ டணிந்து, முற்றம் புகுந்து முறுவல்செய்து நின்றீர், எற்றுக் கிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.5 1927 ஆனா யரும்ஆ னிரையுமங் கொழியக், கூனாய தோர்கொற்ற வில்லொன்று கையேந்திப், போனா ரிருந்தா ரையும்பார்த்துப் புகுதீர், ஏனோர்கள் முன்னென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.6 1928 மல்லே பொருத திரள்தோல் மணவாளீர், அல்லே யறிந்தோம்_ம் மனத்தின் கருத்தை, சொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரீர் எல்லே யிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.7 1929 புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர், இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம், தக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர், எக்கே. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.8 1930 ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க் கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய், தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப, ஏடி. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.9 1931 அல்லிக் கமலக் கண்ணனை அங்கொராய்ச்சி எல்லிப் பொழுதூ டியவூடல் திறத்தை, கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை, சொல்லித் துதிப்பா ரவர்துக்க மிலரே (2) 10.8.10 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1932 புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த பூதனை மாள, இலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்க மதனை நினைந்தோ, கள்ளவிழ் கோதை காதலு மெங்கள் காரிகை மாதர் கருத்தும், பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப் பேசுவ தெந்தை பிரானே. (2) 10.9.1 1933 மன்றில் மலிந்து கூத்துவந் தாடி மால்விடை யேழும டர்த்து, ஆயர் அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மைகொ லோவறி யேன் நான், நின்ற பிரானே. நீள்கடல் வண்ணா. நீயிவள் தன்னை நின் கோயில், முன்றி லெழுந்த முருங்கையில் தேனா முன்கை வளைகவர்ந் தாயே. 10.9.2 1934 ஆர்மலி யாழி சங்கொடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்துக், கார்முகில் வண்ணா. கன்சனை முன்னம் கடந்தநின் கடுந்திறல் தானோ, நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை, ஆரெழில் வண்ணா. அங்கையில் வட்டாம் இவளெனக் கருதுகின் றாயே. 10.9.3 1935 மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம், நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ? அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய், சொல்லியென் நம்பீ. இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே 10.9.4 1936 செருவழி யாத மன்னர்கள் மாளத் தேர்வலங் கொண்டவர் செல்லும், அருவழி வானம் அதர்படக் கண்ட ஆண்மைகொ லோவறி யேன்நான், திருமொழி யெங்கள் தேமலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ, பெருவழி நாவற் கனியினு மெளியள் இவளெனப் பேசுகின் றாயே 10.9.5 1937 அரக்கிய ராகம் புல்லென வில்லால் அணிமதி ளிலங்கையர் கோனை, செருக்கழித் தமரர் பணியமுன் னின்ற சேவக மோசெய்த தின்று முருக்கிதழ் வாய்ச்சி முன்கைவெண் சங்கம் கொண்டுமுன் னேநின்று போகாய், எருக்கிலைக் காக எறிமழு வோச்சல் என்செய்வ தெந்தை பிரானே. 10.9.6 1938 ஆழியந் திண்டேர் அரசர்வந் திறைஞ்ச அலைகடல் உலகம்முன் ஆண்ட, பாழியந் தோளோ ராயிரம் வீழப் படைமழுப் பற்றிய வலியோ? மாழைமென் னோக்கி மணிநிறங் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய், கோழிவெண் முட்டைக் கென்செய்வ தெந்தாய். குறுந்தடி நெடுங்கடல் வண்ணா. 10.9.7 1939 பொருந்தலன் ஆகம் புள்ளுவந் தேற வள்ளுகி ரால்பிளந்து, அன்று பெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்த பெருமைகொ லோசெய்த தின்று, பெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில், கருங்கடல் வண்ணா. கவுள்கொண்ட நீராம் இவளெனக் கருதுகின் றாயே 10.9.8 1940 நீரழல் வானாய் நெடுநிலங் காலாய் நின்றநின் நீர்மையை நினைந்தோ? சீர்க்கெழு கோதை யென்னல திலளென் றன்னதோர் தேற்றன்மை தானோ? பார்க்கெழு பவ்வத் தாரமு தனைய பாவையைப் பாவம்செய் தேனுக்கு, ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட மாகநின் மனத்துவைத் தாயே 10.9.9 1941 வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மைநின் றெம்பெரு மானை, வாட்டிறல் தானை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள், தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப் பழமொழி யால்பணிந் துரைத்த, பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே (2) 10.9.10 வெண்டுறை 1942 திருத்தாய் செம்போத்தே, திருமாமகள் தன்கணவன், மருத்தார் தொல்புகழ் மாதவ னைவரத் திருத்தாய் செம்போத்தே. 10.10.1 1943 கரையாய் காக்கைப்பிள்ளாய், கருமாமுகில் போல்நிறத்தன், உரையார் தொல்புக ழுத்தம னைவரக், கரையாய் காக்கைப்பிள்ளாய். 10.10.2 1944 கூவாய் பூங்குயிலே, குளிர்மாரி தடுத்துகந்த, மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக், கூவாய் பூங்குயிலே. 10.10.3 1945 கொட்டாய் பல்லிக்குட்டி, குடமாடி யுலகளந்த, மட்டார் பூங்குழல் மாதவ னைவரக், கொட்டாய் பல்லிக்குட்டி. 10.10.4 1946 சொல்லாய் பைங்கிளியே, சுடராழி வலனுயர்த்த, மல்லார் தோள்வட வேங்கட வன்வர, சொல்லாய் பைங்கிளியே. 10.10.5 1947 கோழி கூவென்னுமால், தோழி. நானென்செய்கேன், ஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று கோழி கூவென்னுமால். 10.10.6 1948 காமற் கென்கடவேன், கருமாமுகில் வண்ணற்கல்லால், பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக், காமற் கென்கடவேன். 10.10.7 1949 இங்கே போதுங்கொலோ, இனவேல்நெடுங் கண்களிப்ப, கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால், இங்கே போதுங்கொலோ. 10.10.8 1950 இன்னா ரென்றறியேன், அன்னே. ஆழியொடும், பொன்னார் சார்ங்க முடைய அடிகளை, இன்னா ரென்றறியேன். 10.10.9 1951 தொண்டீர். பாடுமினோ, சுரும்பார்ப்பொழில் மங்கையர்கோன், ஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள், தொண்டீர். பாடுமினோ (2) 10.10.10 85 பெரிய திருமொழி பதினோராம் பத்து கலி விருத்தம் 1952 குன்ற மொன்றெடுத் தேந்தி, மாமழை அன்று காத்தவம் மான்,அ ரக்கரை வென்ற வில்லியார் வீர மேகொலோ, தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன். (2) 11.1.1 1953 காரும் வார்பனிக் கடலும் அன்னவன், தாரு மார்வமும் கண்ட தண்டமோ, சோரு மாமுகில் துளியி னூடுவந்து ஈர வாடைதான் ஈரு மென்னையே. 11.1.2 1954 சங்கு மாமையும் தளரு மேனிமேல், திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன், பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார், கொங்க லார்ந்ததார் கூவு மென்னையே. 11.1.3 1955 அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று, அங்கொர் தாயுரு வாகி வந்தவள், கொங்கை நன்சுண்ட கோயின் மைகொலோ, திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே 11.1.4 1956 அங்கொ ராளரி யாய்,அ வுணனைப் பங்க மாவிரு கூறு செய்தவன், மங்குல் மாமதி வாங்க வேகொலோ பொங்கு மாகடல் புலம்பு கின்றதே. 11.1.5 1957 சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை, வென்ற வில்லியார் வீர மேகொலோ, முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து, அன்றி லின்குரல் அடரு மென்னையே. 11.1.6 1958 பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர, மேவி நின்றுநான் கண்ட தண்டமோ, வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து, ஆவி யேயிலக் காக எய்வதே. 11.1.7 1959 மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம், மாலின் அந்துழாய் வந்தென் னுள்புக, கோல வாடையும் கொண்டு வந்தது,ஓர் ஆலி வந்ததால் அரிது காவலே. 11.1.8 1960 கொண்டை யொண்கணும் துயிலும், என்நிறம் பண்டு பண்டுபோ லொக்கும், மிக்கசீர்த் தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே, வண்டு கொண்டுவந் தூது மாகிலே 11.1.9 1961 அன்று பாரதத் தைவர் தூதனாய், சென்ற மாயனைச் செங்கண் மாலினை, மன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி கன்றி, சொல்வல்லார்க் கல்ல லில்லையே (2) 11.1.10 கலி நிலைத்துறை 1962 குன்ற மெடுத்து மழைத டுத்துஇளை யாரொடும் மன்றில் குரவை யிணைந்த மாலென்னை மால்செய்தான், முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்கிடந் தீர்கின்ற அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவ ரார்கொலோ. (2) 11.2.1 1963 பூங்கு ருந்தொசித்து ஆனை காய்ந்தரி மாச்செகுத்து, ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டுவன் பேய்முலை வாங்கி யுண்ட,அவ் வாயன் நிற்கஇவ் வாயன்வாய், ஏங்கு வேய்ங்குழல் என்னோ டாடும் இளமையே. 11.2.2 1964 மல்லோடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன், அல்லி மலர்த்தண் டுழாய்நி னைந்திருந் தேனையே, எல்லி யின்மா ருதம்வந் தடுமது வன்றியும், கொல்லைவல் லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே. 11.2.3 1965 பொருந்து மாமர மேழு செய்த புனிதனார் திருந்து சேவடி யென்ம னத்து நினைதொறும், கருந்தண் மாகடல் மங்கு லார்க்கும் அதுவன்றியும், வருந்த வாடை வருமி தற்கினி யென்செய்கேன். 11.2.4 1966 அன்னை முனிவதும் அன்றி லின் குர லீர்வதும், மன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும், பொன்னங் கலையல்கு லன்ன மென்னடைப் பூங்குழல், பின்னை மணாளர் திறத்த வாயின பின்னையே 11.2.5 1967 ஆழியும் சங்கு முடைய நங்கள் அடிகள்தாம், பாழிமை யான கனவில் நம்மைப் பகர்வித்தார், தோழியும் நானு மொழிய வையம் துயின்றது, கோழியும் கூகின்ற தில்லைக் கூரிரு ளாயிற்றே. 11.2.6 1968 காமன் றனக்கு முரையல் லேன்கடல் வண்ணனார், மாமண வாள ரெனக்குத் தானும் மகன்சொல்லில், யாமங்கள் தோறெரி வீசு மென்னிளங் கொங்கைகள், மாமணி வண்ணர் திறத்த வாய்வளர் கின்றவே. 11.2.7 1969 மன்சுறு மாலிருஞ் சோலை நின்ற மணாளனார், நெஞ்சம் நிறைகொண்டு போயி னார்நினை கின்றிலர், வெஞ்சுடர் போய்விடி யாமல் எவ்விடம் புக்கதோ, நஞ்சு உடலம் துயின்றால் நமக்கினி நல்லதே. 11.2.8 1970 காமன் கணைக்கோ ரிலக்க மாய்நலத் தில்மிகு, பூமரு கோலநம் பெண்மை சிந்தித்தி ராதுபோய் தூமலர் நீர்கொடு தோழி. நாம்தொழு தேத்தினால் கார்முகில் வண்ணரைக் கண்க ளால்காண லாங்கொலோ. 11.2.9 1971 வென்றி விடையுட னேழ டர்த்த அடிகளை, மன்றில் மலிபுகழ் மங்கை மன்கலி கன்றிசொல், ஒன்று நின்றவொன் பதுமு ரைப்பவர் தங்கள்மேல் என்றும் நில்லாவினை யொன்றும் சொல்லி லுலகிலே (2) 11.2.10 தரவு கொச்சகக் கலிப்பா 1972 மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப் பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ் தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர் என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே. (2) 11.3.1 1973 இருந்தானெ னுள்ளத் திறைவன், கறைசேர் பருந்தாள் களிற்றுக் கருள்செய்த, செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட வருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே. 11.3.2 1974 அன்னே. இவரை யறிவன், மறைநான்கும் முன்னே யுரைத்த முனிவ ரிவர்வந்து பொன்னேய் வளைகவர்ந்து போகார் மனம்புகுந்து என்னே யிவரெண்ணும் எண்ணம் அறியோமே. 11.3.3 1975 அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு, வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி, சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே? 11.3.4 1976 தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு, தம்மையே யொக்க அருள்செய்வ ராதலால், தம்மையே நாளும் வணங்கித் தொழுதிறைஞ்சி, தம்மையே பற்றா மனத்தென்றும் வைத்தோமே. 11.3.5 1977 வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து, இன்பம் உற்றா ரொளிவிசும்பி லோரடிவைத்து, ஓரடிக்கும் எய்த்தாது மண்ணென் றிமையோர் தொழுதிறைஞ்சி, கைத்தா மரைகுவிக்கும் கண்ணனென் கண்ணனையே 11.3.6 1978 கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள் என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்? பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய, அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே. 11.3.7 1979 பாடோமே யெந்தை பெருமானை? பாடிநின்று ஆடோமே யாயிரம் பேரானை? பேர்நினைந்து சூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம் கூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே. 11.3.8 1980 நன்னெஞ்சே. நம்பெருமான் நாளும் இனிதமரும், அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது, முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன், பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே. 11.3.9 1981 பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப் பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை, கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க லுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே (2) 11.3.10 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1982 நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர் தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை என்ன அரணாவ னென்னு மருளால் அலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட ஒடி யகல்வா னுரிஞ்ச, முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவா திறைஞ்சென் மனனே. (2) 11.4.1 1983 செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய, பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும், அருவரை யன்ன தன்மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே. 11.4.2. 1984 தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர் உம்ப ருலகேழி னோடு முடனே, மாதிர மண்சு மந்து வடகுன்று நின்ற மலையாறும் ஏழு கடலும் பாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட லத்தி னொருபா லொடுங்க வளர்சேர், ஆதிமுன் ஏன மாகி அரணாய மூர்த்தி அதுனம்மை யாளு மரசே. 11.4.3. 1985 தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரிகான் றிரண்டு தறுகண், அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்க ளவிழ, வளையுகி ராளி மொய்ம்பில் மறவோன தாகம் மதியாது சென்றொ ருகிரால் பிளவெழ விட்ட குட்ட மதுவைய மூடு பெருநீரில் மும்மை பெரிதே. 11.4.4. 1986 வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை யுணர செந்தொழில் வேத நாவின் முனியாகி வைய முடிமூன் றிரந்து பெறினும், மந்திர மீது போகி மதிநின்றி றைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர், அந்தர மேழி னூடு செலவுய்த்த பாதம் அதுநம்மை யாளு மரசே. 11.4.5. 1987 இருநில மன்னர் தம்மை யிருநாலும் எட்டு மொருநாலு மொன்று முடனே, செரு_த லூடு போகி யவராவி மங்க மழுவாளில் வென்ற திறலோன், பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர், பெருநில முண்டு மிழ்ந்த பெருவாய ராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே. 11.4.6. 1988 இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம் என்ன இனமாய மான்பின் எழில்சேர் அலைமலி வேல்க ணாளை யகல்விப்ப தற்கொ ருருவாய மானை யாமையா, கொலைமலி யெய்து வித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள், சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமால் நமக்கொ ரரணே. 11.4.7. 1989 முன்னுல கங்க ளேழும் இருள்மண்டி யுண்ண முதலோடு வீடு மறியாது, என்னிது வந்த தென்ன இமையோர் திகைப்ப எழில்வேத மின்றி மறைய, பின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும் நல்கி யிருள்தீர்ந்திவ் வைய மகிழ, அன்னம தாயி ருந்தங் கற_ல் உரைத்த அதுநம்மை யாளு மரசே. 11.4.8. 1990 துணைநிலை மற்றெ மக்கொ ருளதென் றிராது தொழுமின்கள் தொண்டர் தொலைய உணமுலை முங்கொடுத்த வுரவோள தாவி யுகவுண்டு வெண்ணெய் மருவி, பணமுலை யாயர் மாத ருரலோடு கட்ட அதனோடு மோடி அடல்சேர், இணைமரு திற்று வீழ நடைகற்ற தெற்றல் வினைபற்ற றுக்கும் விதியே. 11.4.9. 1991 கொலைகெழு செம்மு கத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமாலை, வேலை புடைசூழ் கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல், ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்ட ரவராள்வ ரும்ப ருலகே. 11.4.10 தரவு கொச்சக் கலிப்பா 1992 மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா, கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள், வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே (2) 11.5.1 1993 தந்தை தளைகழல்த் தோன்றிப்போய், ஆய்ப்பாடி நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ, நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத் தந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே 11.5.2 1994 ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித் தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ, தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ் வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே 11.5.3 1995 அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு, எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே 11.5.4 1996 வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு, கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ, கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும், எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே 11.5.5 1997 கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப, மன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ, மன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும், என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே 11.5.6 1998 கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான், தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ, தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும், ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே 11.5.7 1999 பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து, தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ, தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும், தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே 11.5.8 2000 கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய், வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ, வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும் விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே (2) 11.5.9 2001 கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான், வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ, வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும், கலிகன்றி உள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே (2) 11.5.10 கலி நிலைத்துறை 2002 மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி வானவரும் யாமுமெல்லாம், நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர், எந்நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்? செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள். அண்டனையே ஏத்தீர்களே (2) 11.6.1 2003 நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்தகாலம், மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட மகப்படுத்த காலத்து, அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில்தேவர், அல்லாதார் தாமுளரே? அவனருளே உலகாவ தறியீர்களே? 11.6.2 2004 நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய், ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும், வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட, கொற்றப்போ ராழியான் குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியவாறே. 11.6.3 2005 பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் நெடுங்கடலே யானகாலம், இனிக்களைகண் இவர்க்கில்லை என்றுலகம் ஏழினையும் ஊழில்வாங்கி முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில் வைத்தும்மை உய்யக்கொண்ட கனிகளவத் திருவுருவத் தொருவனையே கழல்தொழுமா கல்லீர்களே 11.6.4 2006 பாராரும் காணாமே பரவைமா நெடுங்கடலே யானகாலம், ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்தது,உள்ளத் தோராத வுணர்விலீர். உணருதிரேல் உலகளந்த வும்பர்கோமான், பேராளன் பேரான பேர்களா யிரங்களுமே பேசீர்களே 11.6.5 2007 பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம், தாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன் வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான், போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர், பெற்ற தாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே. 11.6.6 2008 மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட, கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல்சூடி, அவனையுள்ளத் தெண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்லா மினியவாறே 11.6.7 2009 மறம்கிளர்ந்து கருங்கடல்நீ ருரம்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால், புறம்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில்வாங்கி, அறம்கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட, நிறம்கிளர்ந்த கருஞ்சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே. 11.6.8 2010 அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த் திரைததும்ப ஆவவென்று, தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தானருளி, உலகமேழும் உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட, கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை நகர்ப்பாடி யாடீர்களே 11.6.9 2011 தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும், யாவரையு மொழியாமே யெம்பெருமான் உண்டுமிழ்ந்த தறிந்துசொன்ன, காவளரும் பொழில்மங்கைக் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார், பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே (2) 11.6.10 தரவு கொச்சக் கலிப்பா 2012 நீணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப் பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை, பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை, காணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே (2) 11.7.1 2013 நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண், தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை, தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை, கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே 11.7.2 2014 தூயானைத் தூய மறையானை, தென்னாலி மேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட வாயானை, மாலை வணங்கி யவன்பெருமை, பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே 11.7.3 2015 கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த, ஓடா அடலரியை உம்பரார் கோமனை, தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால் பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே 11.7.4 2016 மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும், கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானை, கைதொழா கையல்ல கண்டாமே 11.7.5 2017 கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால், புள்ளாயோர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று, உள்ளாதா ருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே 11.7.6 2018 கனையார் கடலும் கருவிளையும் காயாவும் அனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும் சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று, நினையாதார் நெஞ்சென்றும் செஞ்சல்ல கண்டாமே 11.7.7 2019 வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த உறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட சிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித் தறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே 11.7.8 2020 தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை, தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய், ஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார், மானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே (2) 11.7.9 2021 மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக் கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி, கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை, ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே (2) 11.7.10 கலிவிருத்தம் 2022 மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள் தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம், ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன், நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ. (2) 11.8.1 2023 சீற்றமுள வாகிலும் செப்புவன், மக்கள் தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றஞ்சி, காற்றத் திடைப்பட்ட கலவர் மனம்போல, ஆற்றத் துளங்கா நிற்பனா ழிவலவா. 11.8.2 2024 தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து, வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி, பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல், தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா. 11.8.3 2025 உருவார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து, திரிவாயென்று சிந்தித்தி யென்றதற் கஞ்சி, இருபா டெரிகொள் ளியினுள் எறும்பேபோல், உருகாநிற்கு மென்னுள்ளம் ஊழி முதல்வா. 11.8.4 2026 கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில், தள்ளி புகப்பெய்தி கொல்லென் றதற்கஞ்சி, வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே, உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா. 11.8.5 2027 படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம் மடைநின் றலரும் வயலாலி மணாளா, இடையன் எறிந்த மரமேயொத் திராமே, அடைய அருளா யெனக்குன்ற னருளே 11.8.6 2028 வேம்பின்புழு வேம்பின்றி யுண்ணாது, அடியேன் நான்பின்னு முன்சே வடியன்றி நயவேன், தேம்பலிளந் திங்கள் சிறைவிடுத்து, ஐவாய்ப் பாம்பின் அணைப்பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ. (2) 11.8.7 2029 அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா, துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு, மணியே. மணிமா ணிக்கமே. மதுசூதா, பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ. (2) 11.8.8 2030 நந்தா நரகத் தழுந்தா வகை,நாளும் எந்தாய். தொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய், சந்தோகா. தலைவனே. தாமரைக் கண்ணா, அந்தோ. அடியேற் கருளாயுன் னருளே (2) 11.8.9 2031 குன்ற மெடுத்தா நிரைகாத் தவன்றன்னை, மன்றில் புகழ்மங்கை மன்கலி கன்றிசொல், ஒன்று நின்றவொன் பதும்வல் லவர்த்தம்மேல், என்றும் வினையாயின சாரகில் லாவே (2) 11.8.10 திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment