jaga flash news

Saturday 21 November 2020

அஷ்ட சூரணம்

அஷ்ட சூரணம் :

சுக்கு - 50 கிராம் 
மிளகு  - 50 கிராம் 
திப்பிலி - 50 கிராம் 
ஓமம் - 50 கிராம் 
இந்துப்பு - 10 கிராம் 
சீரகம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம் 
பெருங்காயம் - 10 கிராம் 

சுத்தி முறை முக்கியம்:-

சுக்கு சுத்தி : நல்ல பால் சுக்கை வாங்கி சுண்ணாம்பு குழைத்து சுண்ணாம்பில் முக்கி எடுத்து காய வைத்து நன்றாக காய்ந்ததும் தோல் நீக்கி இடித்து சளித்து பத்திரபடுதவும்.

மிளகு சுத்தி : புளித்த மோரில் மிளகை ஊற வைத்து அதில் தாழ்ந்த மிளகை எடுத்து காயவைத்து பொடித்து வைக்கவும்.

திப்பிலி சுத்தி : திப்பிலியை கொடுவேலி சாற்றில் ஊறவைத்து காயவைத்து பொடித்து வைக்கவும்.

ஓமம் சுத்தி - சுண்ணநீரில் ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். பிறகு காடா துணியில் வைத்து தேய்க்க ஓமத்தில் மேலுள்ள சட்டை எல்லாம் கழண்டு வரும். இந்த ஓமம் காரமாக இருக்கும். 

இந்துப்பு சுத்தி : காடியில் ஊறவைத்து வறுத்து பொடித்துக் கொள்ளவும். 

சீரகம் சுத்தி - தூசு தும்பு நீக்கிய சுண்ணாம்பு தெளி நீரில் நனைத்து காயவைத்து கொள்ளவும். 

கருஞ்சீரகம் சுத்தி - தூசு தும்பு நீக்கி புடைத்து வறுத்து எடுத்து கொள்ளவும். 

பெருங்காயம் - சிறிது நெய் விட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். 

செய்முறை:
பெருங்காயம், சுக்கை தவிர்த்து மற்ற கடைசரக்குகளை தனித்தனியே இளம் வறுப்பாக வறுத்து இடித்து சலித்து ஒன்றாக கலந்து புட்டியில் அடைக்கவும். 

அளவு : 1 கிராம் முதல் 2 கிராம் வரை 

அனுபானம் : மோர், வெந்நீர், நெய் 

பயன்கள் : வாத குன்மம், அஜீரணம், ருசி இன்மை, வயிற்று வலி, பசியின்மை, நெஞ்செரிச்சல், வாயுவினால் நெஞ்சடைப்பு, வயிற்று போக்குடன் கூடிய அஜீரணம், செரியானம், தினம் உள்ளுக்கு சாப்பிட நல்ல தீபனத்தை உண்டு செய்யும், மேலும் பல பிரச்சனைகளை சரி செய்யும் ...

செரியாமை பிரச்சனை உள்ளவர்கள் : 1 தேக்கரண்டி அஷ்ட சூரணம் தினமும் சாப்பிடும் பொழுது நெய் விட்டு சாதத்துடன் பிசைந்து 2 அல்லது 3 கவளம் முதலில் சாப்பிட்டு பிறகு சாதம் சாப்பிட செரியாமை நீங்கும்.

இரவில் செரியாமையால் வரும் நெஞ்சடைபுக்கு மோரில் ஒரு தேக்கரண்டி அஷ்ட சூரணம் கலந்து குடிக்க உடனே ஏப்பம் வந்து பிரச்சனை நீங்கும்.

*குறிப்பு: எல்லாவற்றையும் ஒன்றாக அரைக்க கூடாது.

No comments:

Post a Comment