jaga flash news

Thursday 7 August 2014

சிவலிங்கத்தில் மூன்று தெய்வங்கள்

சிவலிங்கத்தில் மூன்று தெய்வங்கள்

சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் பாணம் இருக்கும். இதுவே சிவபாகமாகும். சிவன் நெருப்பு வடிவானவர். நெருப்பு எந்த நிலையிலும் மேல்நோக்கியே எரியும். நடுபாகமான ஆவுடையார் விஷ்ணு பாகம். விஷ்ணு தண்ணீருக்கு அதிபதி. பாணத்தில் அபிஷேகம் செய்யும் நீரை விஷ்ணு தாங்குகிறார். லிங்கத்தின் அடிப்பாகத்தை "பிரம்ம பகுதி' என்பர். பிரம்மா பூமிக்கு அதிபதி. எனவே அடிபாகம் பூமியில் புதைத்து வைக்கப்படுகிறது. ஆக, லிங்கத்தை வழிபட்டால் முப்பெரும் தெய்வங்களையும் வணங்கியதாக அர்த்தமாகிறது. நண்பர்களே, இன்று சிவராத்திரி தினம். சிவனை வழிபடுங்கள். பலனைப்பெறுங்கள்
வாழையடி வாழையாக எமது மரபு பேணப் பட வேண்டும் அல்சைமர் என்ற மறதி வியாதிக்கு மருந்தாக வாழைப்பழம் நல்லது என்பர் மருத்துவ நிபுணர் எனவே ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் .மீண்டும் மீண்டும் இறை வழிபாட்டில் ஈடுபடுத்தும் ஞாபகமும் வரும்

No comments:

Post a Comment