jaga flash news

Wednesday 26 August 2020

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய 10 வாஸ்து செடிகள்

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய 10 வாஸ்து செடிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1 - வாடாமல்லி :பொதுவாகவே வாடாமல்லி பூக்கள் வாடவே வாடாது.இந்த செடியை வீட்டில் வளர்த்தால் நேர்மறை எண்ணங்கள் வரும் என்று வாஸ்து ரீதியாக சொல்லப்படுகிறது.

2 - கோழிக்கொண்டை பூச்செடி :இந்த பூக்களும் வாடாத தன்மை கொண்டது.ஆகவே இதை மாலை தொடுக்க பயன்படுத்துவார்கள்.

3 - பொன் அரளி :மஞ்சள் நிற பூக்கள் கொண்டது.இந்த செடி வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும்.

4 - சங்கு பூ செடி :இதில் 2 வண்ணங்கள் உள்ளது.வெள்ளை மற்றும் நீலம்.வீட்டிற்கு அழகு சேர்க்கும்.விநாயகர்,சிவனுக்கு உகந்தது இந்த சங்கு பூ.                   துளசி செடி :ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய செடி.மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் செடி.

6 - Lucky Bamboo Plant :இந்த மூங்கில் செடியை வீட்டில் வளர்த்தால் நமக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும்.மேலும் வீட்டில் செல்வம் பெருகும்.

7 - கற்றாழை :கற்றாழை அதிக மருத்துவகுணம் கொண்டது.வீட்டில் வாஸ்து ரீதியான பிரச்சனைகளை போக்கும்.

8 - தொட்டாற்சிணுங்கி :இதில் முட்கள் உள்ளதால் சிலர் இதை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கூறுவார்கள்.ஆனால் இந்த செடி வீட்டில் இருந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

9 - செம்பருத்தி செடி :தலைமுடிக்கு உகந்தது.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த செடியை வீட்டில் வளர்க்க வேண்டும்.

10 - மணி பிளாண்ட் :வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்

No comments:

Post a Comment