jaga flash news

Thursday 27 August 2020

ஆஸ்துமா குணமாக:-

ஆஸ்துமா குணமாக:-

இரைப்பு நோயில் காணப்படும் மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் போன்ற குறைகளுக்கு ஆவி பிடித்தல் மிகச்சிறந்த முறையாகும். இதனை அதிகாலையில் செய்யவேண்டும்.

தேவையான பொருட்கள் :
எருக்கு இலை - 10 எண்ணிக்கை
ஊமத்தம் இலை - 3 எண்ணிக்கை
ஓமம் - 25 கிராம்
செய்முறை :
இவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு மூடிவைத்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் பாத்திரத்தை இறக்கி, அதில் ஐந்து மி.லி. அளவில் நீலகிரி தைலம் சேர்த்து, உடம்பை முழுவதும் போர்வையால் மூடி ஆவி பிடிக்கவும். பத்து நிமிடங்கள் விடாது பிடிக்க உடம்பில் வியர்த்துக் கொட்டும்.

வியர்வையை நன்கு துடைத்துவிட்டு, கீழ்க்கண்ட கசாயத்தை உடனடியாகச் சாப்பிட வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, வால்மிளகு, சதகுப்பை, சித்தரத்தை, மல்லி (தனியா), ஜாதிக்காய், அக்ரகாரம் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்த ஒன்றாக்கி அரைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு பொடியை எடுத்து, பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கசாயமாக 42 நாட்கள் சாப்பிட, கடம் இளகி வெளிப்படும். ஆஸ்துமா குணப்படும்

No comments:

Post a Comment