jaga flash news

Wednesday 26 August 2020

அஸ்வகந்தா

மாத்திரை வேண்டாம் டாக்டர்கள் வேண்டாம் இயற்கை முறையே படுக்கையறையில் 
 சிறப்பாக செயல்பட 

படுக்கையறையில் சிறப்பாக செயல்பட இயற்கை நமக்கு பல மூலிகைகளை அளித்துள்ளது. ஆனால் நாம்தான் மருத்துவரையும், மாத்திரைகளையும் தேடி ஓடுகிறோம்.   
 
ஆண்களின் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்க இயற்கை நமக்கு அளித்திருக்கும் வரப்பிரசாதம்தான் அஸ்வகந்தா மூலிகை. இதற்கு அமுக்கிரா கிழங்கு என்ற பெயரும் உண்டு.   
இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகை உண்டு.  அதில் சீமை அமுக்கிரா கிழங்கே ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.  அதனால் அதற்கு மூலிகை வயாகரா என்ற பெயரே உண்டு. 
 
மேலும், அதற்கு இந்திய ஜின்செங் என்ற பெயரும் உண்டு. அந்த சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்துவை பெருக்கும்.  
ஆண்மையை பெருக்குவது மட்டுமில்லாமல், அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். மூளையின் அழற்சி, வயோதிகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும். நமது உடலில் உள்ள Free radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை அஸ்வகந்தா சரிசெய்யும். 
    
அஸ்வகந்தாவின் முழுச் செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.   
அஸ்வகந்தாவின் நன்மைகள்  
உங்கள்  உடல் வலிமையை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  
உங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும்.
 
உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.  
உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்.  
உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்.  
உங்களது இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)  
சித்த மருத்துவ கடைகளில் அஸ்வகந்தா லேகியம் எளிதாக கிடைக்கும். பவுடராகவும் கிடைக்கும். பயன்படுத்துங்கள். குதிரை சக்தி பெற்று, படுக்கையறையில் புகுந்து விளையாடுங்கள்

அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் இருக்கும் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை சரி செய்து உங்களின் மன அழுத்தத்தை போக்குகிறது. நீங்கள் மிக சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பவராக இருந்தால் இந்த மூலிகை பயனுள்ளதாக இருக்கும்.

பல ஆராய்ச்சிகளில் அஸ்வகந்தா நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுவதாக தெரிவித்துள்ளன. இது நியாபக சக்தியை அதிகரிப்பதாகவும், படிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தை போக்கவும் இது உதவுகிறது.

அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் கேன்சரை எதிர்த்து செயல்படும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. நுரையீரல், மார்பகம், தோல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் திறன் இதற்கு உள்ளது.

அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி வரும் சில உடல் உபாதைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அஸ்வகந்தா மூலிகையில் அமுக்கிரா கிழங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகைகள் உண்டு. இதில் சீமை அமுக்கிரா ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மூலிகை வயாகரா எனவும் அழைக்கப்படுகிறது.

அஸ்வகந்தா மூளையின் வேகத்தை அதிகரிக்கும். மூளை அழற்சி போன்றவற்றை போக்கும். உடல் மற்றும் மனதில் ஏற்படும் சில பிரச்சனைகளை அஸ்வகந்தா சரி செய்யும். இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை பெருக்கி நீங்கள் உடலுறவில் வேகமாக செயல்பட உதவும்.

அஸ்வகந்தா கசப்பு தன்மை உடையது தான் என்றாலும், இது கை, கால் நடுக்கம், வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு, குடல் பிரச்சனைகள், பசியின்மை ஆகியவற்றை சரி செய்யும் திறன் கொண்டது.

No comments:

Post a Comment