jaga flash news

Tuesday 25 August 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய 3 மூலிகை சாறு/ஜூஸ்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய 3 மூலிகை சாறு/ஜூஸ்

1. அருகம்புல் சாறு

தேவையானவை: 
அருகம் புல்- ஒரு சிறியகட்டு, தோல் சீவிய இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு  டீஸ்பூன்.
 
செய்முறை: 
அருகம்புல்லை நன்கு கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு  சேர்த்து கலந்து பருகலாம்.
 
2. பாகற்காய் சாறு

தேவையானவை: 
பாகற்காய் - ஒன்று, தோல் சீவிய இஞ்சித் துருவல், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்.
 
செய்முறை: 
பாகற்காயை கழுவி நறுக்கி விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து பருகலாம்.
 
3. நெல்லிச்சாறு

தேவையானவை: 

நெல்லிக்காய் -5, கறிவேப்பிலை - கைப்பிடியளவு, உப்பு - சிறிதளவு.
 
செய்முறை: 

நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் கறி வேப்பிலை சேர்த்து அரைத்து வடிக்கட்டி உப்பு சேர்த்து கலந்து பருகலாம்.

நன்மைகள்:

1.உடல் கழிவுகள் நீங்கும்
2.சர்க்கரை அளவை குறைக்கும்
3.ரத்த அழுத்தம் வராது
4.உடல் சுறு சுருப்பாக இருக்கும்
5.உடல் உஷ்ணம் குறையும்
6.உடல் எடை மற்றும் கொழுப்புகள் குறையும்
7.கண் எரிச்சல் சரியாகும்
8.வயிற்று புண் / வயிறு எரிச்சல் குணமாகும்

No comments:

Post a Comment