jaga flash news

Sunday 1 December 2013

காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா?

காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா? 

என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?’’ என்று கேட்காதீர்கள். எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர். இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது. மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.

தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க!

1 comment:

  1. கண், காது, மூக்கு, செவி, இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று, தலையோடு (சிரசு) தொடர்பு உள்ளவை. இதில் எந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டாலும், முதலில், கண் தான் பாதிக்கப்படுகிறது. அதன்பிறகே தலைக்கு செல்கிறது. அத்தனையும், வயர்களால் (நரம்புகளால்) பிணைக்கப்பட்ட, பவர் பேங்க்தான் தலை. அத்தனை நரம்புகளும், தலையில் போய் ஒன்றாக ஜாயிண்ட் பண்ணிக் கொள்ளும். இந்த உறுப்புகள் பாதிப்படையும்போது, சிறிது சிறிதாக, தலைக்குச் செல்லும் நரம்பு பாதிப்படைகிறது. அப்போதுதான் தலையில், பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். ஒருவனுக்கு முகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டால், முதலில் காதுவழியாக இரத்தம் வடிந்தோடும். அப்போது அவனின் ஆயுள் முடிகிறது என அறிந்து கொள்ளலாம். கண்ணிற்கு செல்லும் நரம்புகள் வழியாக இரத்தம் செல்லாமல், தடைபட்டு விடுகிறது. ஆகவே, மூளை செயல்படுவதில்லை. இவ்வாறு, கண், காது, முக்கு, தலை நம் அங்கத்தில் முக்கியமான உறுப்பாகும். ஆகவே தான், கண்ணை இமைபோல் காக்கவேண்டும், என சொல்லுவார்கள்.

    ReplyDelete