jaga flash news

Monday, 30 December 2024

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்-


 திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்- 

 அருள்மிகு திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் ஆகும். நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

புராண சிறப்பு:

முற்காலத்தில் வடதிசைக்கு அதிபதியாகிய குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தார் அவர் மிகச் சிறந்த சிவன் பக்தர். ஒரு நாள் சிவபெருமானை நேரடியாக தரிசிக்க கைலாயத்தை அடைந்தார். அப்பொழுது சிவபெருமானுடன் தனித்திருந்த பார்வதிதேவி மிகுந்த அழகுடன் காண விளங்கினார்.

Sri Vaithamanidhi Perumal, Temple, Tirukolur
தனத்திற்கு அதிபதியாகிய குபேரன் தேவதேவியரின் தனிமையை உணராது தரிசிக்க சென்ற போது அதிரூபமாகிய இவள் யார் என்று கௌரியை உற்று நோக்குகின்றார். இதை கண்ட உமையவள் கோபம் கொண்டு ‘நீர் கெட்ட எண்ணத்துடன் என்னை பார்த்தீர் எனவே உமது ரூபம் விகாரமடையக்கடவது, நவநிதிகளும் உம்மை விட்டகலும், ஒரு கண்ணையும் இழப்பீர்' என சபித்துவிடுகிறார். குபேரன் மிகவும் மனவருத்தமடைந்து சிவபெருமானை துதித்தி நடந்த விஷயத்தை தெரிவிக்கிறார். சிவபெருமானும் திருமாலை சரணடையுமாறு கூறுகிறார்.


குபேரன் தன் சங்க நிதி பதும நிதி உட்பட நவநிதிகளை இழந்து ஆதரிப்பார் யாருமின்றி பூலோகம் வந்தடைந்து பொருநையாற்றின் தென்கரையில் புனித நீராடி பகவானை குறித்து கடும் தவம் செய்தார். குபேரனின் தவத்திற்கு இரங்கிய பகவான் தாமோதரன் நதி தீர்த்தத்தில் நீராடச் செய்து சாபம் நீக்கி அருள் புரிந்தார்.

வைத்தமாநிதி என்ற திருநமத்துடன் நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை காப்பாற்றி அருளினார். குபேரனும் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று தன் இருப்பிடம் வந்தடைந்தார்.

இலக்கியச் சிறப்பு:

பன்னிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

தனிச்சிறப்பு:

நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் செல்வநிலையில் சிறப்படையவும் இழந்த செல்வங்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு.

ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.

Sri Vaithamanidhi Perumal, Temple, Tirukolur
அமைவிடம்:

திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூம்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.


இறைவன் : அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள்
இறைவியர் : அருள்மிகு குமுதவல்லி
அருள்மிகு: கோளூர்வல்லி
தீர்த்தம் : குபேர தீர்த்தம்
தலவிருட்சம் : புளிய மரம்
ஆகமம் : வைகாநச ஆகமம்
விமானம் ஸ்ரீகர விமானம்

சிறப்பு செய்தி:

குபேரன் தான் இழந்த செல்வத்தை பரமனைப் போற்றி மீண்டும் பெற்ற நாளாக தல வரலாற்றில் கூறப்படுவதாது, மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி அன்று என்பதாகும். இந்த நாள் வரும் திங்கள் கிழமை 02-03-2015 ஆகும். செல்வ வளம் பெற விரும்புபவர்களும் தாங்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற விரும்புபவர்களும் அன்றைய தினம் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபடுவது சிறப்பு.


16 comments:

  1. Very nice அய்யா வெ.சாமி அவர்களே.

    ReplyDelete
  2. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். 2025- ஆம் வருட தமிழ் புத்தாண்டு ஆசீர்வாதம் வேண்டி தங்கள் பதம் பணிகிறேன். ஆசீர்வதியுங்கள்.

    ReplyDelete
  3. Mon. 14, Apr. 2025 at 12.35 Pm .

    *சோதிடவியல் :*

    சோதிடவியலில் இன்று இராசிபற்றி சுருக்கமாக காணலாம்.... 1

    *இராசிகள் :*


    சோதிடவியலில் கோள்கள், நாட்களுக்கு அடுத்தாற்போல் முக்கியத்துவம் வாய்ந்தவை இராசிகளாகும்.

    வான மண்டலம் 360 பாகைகள் கொண்ட ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது.

    இதனை 12- இராசிகளாகப் பிரிக்க ஒவ்வொரு இராசியும் 30- பாகைகள் கொண்டதாக ஆகிறது.

    இந்த பன்னிரண்டு இராசிகளின் பெயர்கள் .....

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு , மகரம், கும்பம் மற்றும் மீனம்.

    இவற்றை எளிதாக கூறும்படி மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது ... கட்டமாக இதை எப்படி எழுதுவது என காணலாம்...!

    -------------------------------------------
    330° - 360° | 0°-30 | 30°-60° | ம°-90° |
    மீனம் | மேஷம் | ரிஷபம் | மீதுனம் |
    ----------------------------------------
    300° -330° | இராசி | 90° - 120° |
    கும்பம் | மண்டலம் | கடகம் |
    ----------- | | |
    270°-300° | | 120°-150° |
    மகரம் | | சிம்மம் |
    ------------------------------------------ 240°-270 | 210° -240° | 180°-210° |150°-180°|
    தனுசு | விருச்சிகம் |துலாம் | கன்னி |

    -------------------------------------------

    இவையே ராசி மண்டலம் அமைக்கும் முறை ஆகும்.

    மீண்டும் சந்திக்கலாம் !
    Jansikannan438@gmail.com .

    ReplyDelete
  4. Mon. 21, Apr. 2025 at 12.49 pm..

    *கொடிக்கவி :*

    *விக்கிரமசிங்கபுரம் பயிற்சி செல்வோர்க்கான பதிவு !*


    *கொடிக்கவி நூல் 14- சாத்திரங்களின் சித்தாந்த அட்டகத்தில் மிகச் சிறிய நூல் .

    ஆசிரியர் : உமாபதி சிவம் (1313)

    *தலைமை அந்தணராகிய உமாபதியார் தில்லையில் பல்லக்கில் செல்ல .....

    *மறைஞான சம்பந்தர் *பட்ட கட்டையில் போகுது பார் பகற்குருடு* என்று கூற ......

    *உண்மை ஞானம் பெற்றவராய் உமா பதியார் அவர் பின் சென்றார்.

    *தறி நெய்வோர் செய்த உப்பில்லா கஞ்சியை உண்ட மறைஞான சம்பந்தரின் கையில் ஒழுகிய எஞ்சியதை உண்டார்.

    *உமாபதியாரை தில்லைவாழ் அந்தணர் புறம் தள்ளினர்.

    *எனவே, கொற்றவன் குடியில் தங்கினார்.

    *தில்லை திருவிழாவின் போது, அந்தணர் கொடி ஏற்றியும் கொடி ஏறவில்லை.

    *உமாபதி வந்தால் கொடி ஏறும் - அசரீரி.

    *அந்தணர் மன்னிப்புக் கோரி உமாபதி சிவத்தை அழைத்து வந்தனர்.

    *உமாபதி சிவம் தில்லையில் கொடிமரம் முன்பு, *கட்டளைக் கலித்துறையில் 1 - பாடலும், 3 - வெண்பாவும் பாட கொடி ஏறியது.*

    *இந்த 4- பாடல்களும் கொடிக்கவி* எனப் போற்றப்பட்டது.

    பாடலை அடுத்த பதிவில் காணலாம்.

    திருச்சிற்றம்பலம்
    Jansikannan438@gmail.com

    ReplyDelete
  5. Mon. 21, Apr. 2025 at 11.36 pm.

    *ஆலயம் :*

    *அறிந்து கொள்வோமே !*

    கடவுள் திருவடியில் ஆன்மா இலயிக்கும்.

    கோவில் கடவுள் தங்குமிடம்.

    ஆலயம் மூலமே இறைவன் அருளை பொழிகின்றான்.

    கோவில் மனித வடிவம். (ஷேத்திரம் சரீர பிரஸ்தானம். )

    பாதம் = கோபுரம்
    கொப்பூள் = பலிபீடம்
    மார்பு = மகாமண்டபம்
    சிரம் = . கர்ப்ப கிரகம்
    வலது செவி = தட்சிணாமூர்த்தி
    கழுத்தில் = நந்தி
    மூக்கு = ஸ்நபன மண்டபம்
    தலையுச்சி = விமானம்
    முழங்கால் = ஆஸ்தான மண்டபம்
    தொடை = நிருத்த மண்டபம்
    கழுத்து = அர்த்த மண்டபம்
    மார்பில் = நடராஜர்
    இடது செவி = சண்டிகேஸ்வரர்
    வாய் = ஸ்நபன மண்டப வாசல்
    புருவமத்தி = இலங்கம்.

    கோபுரம் :* இது ஸ்தூல லிங்கம். இறைவனது விராடஸ்வரூபமே கோபுரம்.

    கும்பம் :* ஷோட சாந்தம்.

    *கோபுர தரிசனம்* இறைவனது பாத தரிசனம்.

    *பிரகாரங்கள் :*

    3 - பிரகாரம் = அன்ன, பிராண மனோமய கோசங்களை உணர்த்தும்

    5 - பிரகாரம் = அன்ன, பிராண, மனோமய, விஞ்ஞான , ஆனந்த மய கோசங்களை உணர்த்தும்.

    7 - பிரகாரம் = அன்ன, பிராண, மனோமய , விஞ்ஞான, ஆனந்த மய கோசம், ஸ்தூல, சூட்சுமங்களை விளக்கும்.

    பல முறை பிரகாரத்தை சுற்றி வலம் வருதல் கோசங்களை கடந்து இறைவன் விளங்குதலை குறிக்கும்.

    *விமானம் :*

    விமானம் - 3 - வகைப்படும்

    பீட் ம் முதல் அனைத்தும் சதுரம் - நாகரம் (ஆண் விமானம்).

    கண்டம் முதல் வட்ட வடிவம் - வேசரம் (அலி விமானம்).

    கண்டம் முதல் எண்கோண வடிவம் - திராவிடம் (பெண் விமானம்) .

    விமானமும் - ஸ்தூல லிங்கம் ஆகும்.
    இதன் கீழ்ப்புறம் - முருகன்.
    மேற்புறம் - விஷ்ணு.
    தென்புறம் - தெட்சிணாமூர்த்தி.
    வடபுறம் - பிரமன் உருவமும் இருக்கும்.

    மீண்டும் சந்திக்கலாம் !

    திருச்சிற்றம்பலம்
    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Wed 21, May, 2025 at 9.05 Pm .

    *மாண்டூக்ய உபநிஷத் :*

    மந்திரம் (ஸ்லோகம்) - 2

    "ஸர்வம் ஹ்யேதத் ப்ரஹ்ம | அயமாத்மா ப்ரஹ்ம | ஸோSயமாத்மா சதுஷ்பாத் |"

    *பொருள் :*

    ஏதத் - இந்த

    ஸர்வம் - அனைத்தும்

    ப்ரஹ்ம ஹி (ப்ரஹ்ம ) - இறைவனே

    அயம் - இந்த

    ஆத்மா - ஆன்மா

    ஸ - அந்த

    சதுஷ்பாத் - 4 - பாகங்கள்,


    *விளக்கம் :*

    நாம் காணும் இவை அனைத்தும் இறைவனே (ப்ரஹ்மமே ).

    "இந்த உடலில் உள்ள ஆத்துமாவும் (ஆன்மா, ஜீவன்) இறைவனே.

    அத்தகைய இறைவன் 4 - பகுதிகளை உடையது


    *கருத்து :*

    பொருளும் சொல்லும் ஒன்றே , இந்த எல்லாமும் ஓங்காரமே என முதல் மந்திரம் "ஓமிதி ஏதத் அக்ஷரம் இதம் ஸர்வம் என கூறப்பட்டது.

    பின்னர், பொருளை முதன்மையாக வைத்து " ஸர்வம் ஸ்யேதத் ப்ரஹ்ம" என்று இவ்வாறு ஒரே கருத்தை இருவகையில் தெளிவாக அழுத்திக் கூறப்பட்டுள்ளது.


    2 - வது மந்திரமான இம் மந்த்ரத்தில். எல்லாமுமாக விளங்கும் இறைவன் (ப்ரஹமம்) எங்கோ இருக்கும் உண்மைப் பொருளன்று ; அது ப்ரத்யக்ஷமாக நம் உடலுக்குள்ளே இருக்கும் "ஆத்மாவே" (ஆன்மா) என்பதைச் சுட்டிக்காட்ட "அயமாத்மா ப்ரஹ்ம" என்ற தொடர் வந்தது.

    இறைவனை (ப்ரஹ்மத்தை) எளிய முறையில் அறிவதன் பொருட்டு அதற்கு 4 - பாதங்கள் ( பகுதிகள்) உள்ளன.

    இதில் 1 - 3 பாதங்கள் , 4 - ஆம் நிலையை அடைய வழிகாட்டும் *காரணப் பெயர்கள்.

    4- ஆம் பாதம், *அடையப்படும் நிலையை குறிக்கும்* காரணப் பெயர்.

    *குறிப்பு :*

    1 - வது மந்திரம் அனைத்தும் ஒங்காரமே என்கிறது.

    2 - வது மந்திரம் அனைத்தும் இறைவனே (ப்ரஹ்மம்) என்கிறது.

    Jansikannan438@gmail.com

    ReplyDelete
  8. Fri . 23, May , 2025 at 7.15 am

    *திருவாசகத்தில் "மும்மலம்" :*

    சைவ சித்தாந்தத்தில், ஆணவம், கன்மம், மாயை என்னும் 3 - பொருள்களும் மும்மலம் எனப்படுகின்றன. இவற்றைத் *தளை* என்கிறோம்.

    தளை என்பது *கட்டு.* உயிரின் வியாபகத்தைக் கட்டுப்படுத்தி உயிரைப் பிறப்பு - இறப்புக்கு உட்படுத்துவதால் இவை *தளை* எனப்படுகின்றன.

    தளைக்கு ... மலம், பாசம் என்னும் சொற்கள் சைவ சித்தாந்தக் குறியீடுகள் ஆகும்.

    சரி.... இப்போ திருவாசகத்துக்குள் வருவோம்...!

    திருவாசகத்தில், மலம், பாசம் என்னும் சொற்கள் பல இடங்களில் வருகின்றன.

    *"மும்மை மலம் அறுவித்து" (தில்லையில் அருளிய 51. அச்சோப் பதிகத்தில் - 658.*

    *"பசு பாசம் அறுத்தானை" தில்லையில் அருளிய கண்ட பத்து - 478*
    என்னும் தொடர்களிலிருந்து இவ்வுண்மையை அறியலாம்.

    *தில்லையில் அருளிய கீர்த்தித் திருவகவலில் - 111 - 112 -ல்*

    *"மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
    தூய மேனி சுடர்விடு சோதி"* என்று
    மணிவாசகர் அருளியுள்ளார்.

    *மும்மலம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களைக் குறிக்கும் என்பது யாவரும் அறிந்ததே.

    இந்த *மூலம்* என்ற சொல்லுக்கு * *காரணம்* என்றொரு பொருள் உண்டு.
    எனவே, மும்மலங்களும் காரியப்படுவதற்கு முன்பே, காரண நிலையில் உள்ளன என்பது பெறப்படுகிறது . ஆக, இதுவே *மூலம் ஆகிய மும்மலம் என்னும் தொடருக்குப் பொருளாகும்.*

    மும்மலங்களும் "மூலம்" என்பதால், இவை வேறு எதிலிருந்தும் தோன்றவில்லை என்பதும், அநாதியே உள்ளன என்பதும் புலனாகின்றன.

    *மூவர் தேவாரங்களிலும் *"மலம்"* என்னும் சைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல்லாட்சி வருகிறது.

    ஆயினும் ...... *திருவாசகத்தில் மட்டுமே, *"மும்மலம்"* என்னும் சொல்லாட்சி உள்ளது.

    மூவர் தேவாரங்களில் எண்ணிக்கை சுட்டாமல் வரும் *மலம்* என்ற சொல்,
    *திருவாசகத்தில் மட்டுமே "மும்மலம்"
    என்று சுட்டி காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*

    *மும்மலம்* என்னும் சொல்லாட்சி திருவாசகத்தில் பல இடங்களில் கையாளப்படுவதைக் காணலாம்.

    ஒரு சில எடுத்துக்காட்டுக்களை இங்கு பார்ப்போம் .....!

    அழுக்கு அடையா நெஞ்சு உருக "
    *மும்மலங்கள்* பாயும் கழுக்கடை காண்.*
    (தில்லையில் அருளிய திருத்தசாங்கம் - 364 )


    உள்ள *மலம் மூன்றும்* மாய உகு பெருந்தேன் .

    *உள்ள மலம் மூன்றும்* என்றதனால், மூன்று மலங்களும் என்றும் உள்ள அநாதிப் பொருள்கள் என்பது பெறப்பட்டது. (திருப்பெருந்துறையில் அருளிய 48. பண்டாய நான் மறை - 629).


    *மும்மை மலம்* அறுவித்து முதலாய முதல்வன் தான்
    (தில்லையில் அருளிய 51. அச்சோப் பதிகம் - 658).


    * மும்மை* என்னும் சொல் .... உம்மை, இம்மை , அம்மை என்னும் மூன்று நிலைகளிலும் மூன்று மலங்களும் உள்ளன என்று பொருள்.

    இங்கு .......

    *"உம்மை" என்பது, உயிர்கள் பிறவிக்கு வரும் முன்பு உள்ள நிலையைக் குறிக்கும்.*

    *"இம்மை" என்பது, உயிர்கள் பிறப்புட் பட்டுள்ள நிலையைக் குறிக்கும்.*

    *"அம்மை" என்பது உயிர்கள் வீடு பேறு பெற்றுப் பிறப்புக்குட்படாத நிலையைக் குறிக்கும்.

    உயிர்களானது பிறப்புக்கு வருவதற்கு முன்பும், பிறப்புக்கு உட்படாத போதும் மும்மலங்களும் காரண நிலையில் உள்ளன .

    உயிர்கள் பிறப்புட்படும் போது அவை மூன்றும் காரிய நிலையில் இருக்கின்றது.

    *அதாவது, "மும்மை" என்பது | முக்காலத்தும் மூன்று மலங்களும் உளதாம் தன்மை உடையன என்பதைக் குறிக்கின்றது.*

    Jansikannan438@gmail.com .

    ReplyDelete
  9. Mon. 2, Jun, 2025 at 8.20 pm.

    *சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு என்று கூறுகிற வெண்பா மேலும் அதனை அச்சிட்ட ஆசிரியர் :*

    *உந்தி களிறு உயர் போதம் சித்தியார்*

    *பிந்திருபா உண்மை பிரகாசம் − வந்தஅருள்*

    *பண்புவினா போற்றி கொடி பாசமிலா*

    *நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்பம் உற்று*

    *1866−ல் மதுரை நாயகம் பிள்ளை என்பவர் சித்தாந்த சாத்திர மூலங்களை முதன் முதலில் அச்சிட்டார்.*

    இவர் *தமது சிவஞானபோத மூலப்பதிப்பின் முகவுரையில் நூல் வரலாறு, நூல் சிறப்பு, நூல் கருத்து, நூல் பாடல் தொகை, சூரணித் தொகை* என்பனவற்றைக் கூறி பின், *சைவசாத்திரம் 14−கினையும் உணர்த்தும் வெண்பா என்ற தலைப்பில்* ஒரு வெண்பா தந்துள்ளார். அதுவே, மேற்கண்ட பாடலான *உந்தி களிறு உயர் போதம் சித்தியார் என்ற வெண்பா.*

    *திருஉந்தியார் முதல் சங்கற்ப நிராகரணம் வரையுள்ள பதினான்கு நூல்கள் ஆகும்.

    *மீண்டும் சந்திக்கலாம் !* திருச்சிற்றம்பலம்
    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  10. Sat. 7, Jun. 2025 at 8.27 am.

    *ஆழ்வார்கள் :*

    1) பொய்கையாழ்வார் − அம்சம் − பஞ்சசன்யம் − பாசுரங்கள் − 100 இயற்றிய நூல்கள் − முதல் திருவந்தாதி.

    2) பூதத்தாழ்வார் − அம்சம் − கதை − பாசுரங்கள் − 100 − இயற்றிய நூல்கள் − 2−ஆம் திருவந்தாதி.

    3) பேயாழ்வார் "− அம்சம் − நந்தகம் (வாள்) − பாசுரங்கள் − 100 இயற்றிய நூல்கள் − 3−ஆம் திருவந்தாதி.

    4) திருமழிசையாழ்வார் − அம்சம் − சக்கரம் − பாசுரங்கள் − 216 − இயற்றிய நூல்கள் − திருச்சந்தவிருத்தம் − 120; நான்முகன் திருவந்தாதி − 96.

    5) மதுரகவியாழ்வார் − அம்சம் − வைநதேயர் − பாசுரங்கள் − 216 − இயற்றிய நூல்கள் − கண்ணின் நுண் சிறுத்தாம்பு.

    6) நம்மாழ்வார் − அம்சம் − நாம்சம் − பாசுரங்கள் − 1296 − இயற்றிய நூல்கள் − திருவாய்மொழி.

    7) குலசேகரர் − அம்சம் − கெளஸ்துபம் − பாசுரங்கள் − 105 − இயற்றிய நூல்கள் − பெருமாள் திருவாய்மொழி.

    8) பெரியாழ்வார் − அம்சம் − கருடன் − பாசுரங்கள் − 473 − இயற்றிய நூல்கள் − திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.

    9) ஆண்டாள் − அம்சம் − பூமி − பாசுரங்கள் − 173 − இயற்றிய நூல்கள் − திருப்பாவை −30; திருமொழி − 140.

    10) தொண்டரடி பொடியாழ்வார் − அம்சம் − வைஜயந்தி என்ற வனமாலை − பாசுரங்கள் − 55 − இயற்றிய நூல்கள் − திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமறை திருமலை, திருப்புகழ்ச்சி.

    11) திருப்பாணர் − அம்சம் − வத்சம் − பாசுரங்கள் − 10 − இயற்றிய நூல்கள் − அமலான் ஆதிபிரான்.

    12) திருமங்கை − அம்சம் − சாரங்கம் (வில்) − பாசுரங்கள் − 1361 − இயற்றிய நூல்கள் − ஆறு அங்கங்கள்.

    Jansikannan438@gmail.com

    ReplyDelete
  11. Sun. 8, Jun., 2025 at 5.47 pm.

    *அப்பர் தேவாரம் − 5−ஆம் திருமுறை :

    *பொது தனிக்குறுந்தொகை :*

    *9− என்ற எண்ணுடன் எத்தகைய எண்ணைப் பெருக்கி பன் மடங்கு ஆக்கினாலும், அதன் மொத்தக் கூட்டுத் தொகையானது 9−என ஆகும்.


    பாடல் : அப்பர் தேவாரம் − 5−ஆம் திருமுறையில்... *ஒன்பது ஒன்பதி யானை* எனத் தொடங்கும் பாடல்.

    பொது − தனிக்குருந்தொகை − இது ஒரு அற்புதத் திருப்பதிகம். 1−முதல் 10 வரையில் எண்ணல் அலங்காரமாக அருளிச் செய்யப்பட்டது.

    *அதில் 9−வது பாடலை பாருங்களேன்..!*


    9 × 1 = 9 கூட்டுத் தொகை = 9
    9 × 2 = 18 " = 9
    9 × 3 = 27 " = 9
    9 × 4 = 36 " = 9
    9 × 5 = 45 " = 9
    9 × 6 = 54 " = 9
    9 × 7 = 63 " = 9
    9 × 8 = 72 " = 9
    9 × 9 = 81 " = 9

    *இது 9−என்ற எண்ணின் தனித் தன்மையைப் புகலும்.*

    கூட்டுத் தொகையில் அவ்வெண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் அதன் கூட்டுத் தொகையில் ஒன்பது என்ற எண் கலவாது தனித் தன்மையைக் காட்டும்.

    9 + 1 = 10 கூட்டுத்தொகை = 1
    9 + 2 = 11 கூட்டுத்தொகை = 2
    9 + 3 = 12 கூட்டுத் தொகை = 3
    9 + 4 = 13 கூட்டுத்தொகை = 4
    9 + 5 = 14 கூட்டுத்தொகை = 5
    9 + 6 = 15 கூட்டுத்தொகை = 6
    9 + 7 = 16 கூட்டுத்தொகை = 7


    என்பன போன்று வருவித்துக் கொள்க.

    *இத் தன்மையில், சிவபெருமான் தனித்து விளங்கும் பாங்கானது.. 9−என்னும் எண்ணுக்கு உவமையாக உரைத்தருளிய தன்மையில் *ஒன்பது ஒத்து நின்று என்னுள் ஒடுங்குமே* என உரைத்தருளப் பெற்றது.

    இத்திருப்பாட்டின் கூட்டுத்தொகை −9. (8+8+2 = 18 = 9 ) ஆதல் காண்க.

    *மீண்டும் சந்திக்கலாம்..!*
    Jansikannan438@gmail.co

    ReplyDelete
  12. Mon. 23, June, 2025 at 7.49 am.

    *வைணவத்தின் சிறப்புகள் :*

    *ஒன்றை உள்ளபடி உணர்வதற்கு காரணம் எதுவோ அதன் பெயர் − பிராமணம்.(பிரமாணம்)

    * பிராமணத்தின் வகைகள் : 1. பிரத்தியட்சம், அனுமானம், சப்தம் என மூன்று.

    * திருமாலை தெய்வமாகக் கொண்ட மதம் − வைணவ மதம்.

    * வைணவத்தின் வகைகள் : 1. வடகலை 2. தென்கலை.

    * வடகலை : வேத சாத்திரங்களும், தென்கலை : நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர்.

    * ஊறு, ஓசை, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய குணங்களையும், அதற்கு அடிப்படையான இந்திரியங்களையும் பற்றி அறிய உதவும் சாதனம் − பிரத்தியட்சம்.

    * ஓரிடத்தில் காணப்படும் இருபொருட்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும் நிலை கண்டு வேறோரிடத்தில் காணப்படாத ஒன்றை கண்டதென ஊகிப்பது − அனுமானம்.

    * இந்திரியங்களாலும் அனுமானத்தாலும் உள்ளபடி உணர முடியாத உயரிய பொருளை உணருவதற்கான காரணமும், அட்சரங்களின் கூட்டமும் − சப்தம்.

    * சப்த பிராமணங்களுள் சிறந்ததாக கருதப்படுவது − சுருதி.(சுருதி என்றால் வேதம்).

    * சுருதியின் வகைகள் − 4. (ரிக், யஜூர், சாம, அதர்வணம்.

    * ஸ்மிருதிகளை இயற்றியவர் − மனு முதலான மஹான்கள்.

    *விஷ்ணுபூராணத்தை இயற்றியவர் − பராசுரர்.

    * ஶ்ரீபாகவதபுராணத்தை இயற்றியவர் − வியாஸர்.

    * வேதங்களின் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்கும் நூல்கள் − உபபிரமாணங்கள். (இகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் )

    * வேதத்தின் இருபெரும் பிரிவுகள் − கர்ம காண்டம், பிரம்ம காண்டம்.

    * கர்ம காண்டம் என்பது − பரம புருஷனின் முக மலர்ச்சிக்காக செய்யும் வேள்வி, தானம், தவம் முதலியவற்றையும் அவற்றைச் செய்யும் முறைகளைப் பற்றியும் கூறும் வேதப் பகுதி.

    * பிரம்ம காண்டம் என்பது − பரமபுருஷனின் திருமேனி, குணங்கள், அவனை அடைய உதவும் உபாயங்கள் ஆகியவற்றை விளக்குவது.

    * கர்ம காண்டத்தின் வழிநூல்கள் − மனு ஸ்மிருதி.

    * பிரம்ம காண்டத்திற்கான வழிநூல்கள் − இதிகோசங்கள், விஷ்ணு புராணம்.

    * ஸ்மிருதிகள் − ஆசாரங்களைப் பற்றி விளக்குகிறது.

    * இதிகாசம், புராணங்கள் − பரமபுருஷன், பக்தி, வீடுபேறு முதலியவற்றை விளக்குகிறது.

    * புராணங்கள் அனைத்தையும் முதலில் படைத்தவன் − பிரமன்.

    * பிரமனின் குணங்கள் − 3. அவை : சத்துவம், ராசசம், தாமசம்.

    * பிரமனானவன் "தாமச குணம்" மேலிட்டிருந்த போது படைத்தவை − அக்கினி, சிவ புராணங்கள்.

    * பிரமனானவன் "ராசச குணம்" மேலிட்டிருந்த போது படைத்தவை − பிரம புராணம்.

    * பிரமனானவன் சத்துவ குணம் மேலிட்டிருந்த போது படைத்தவை − நாராயண புராணம்.

    * நாராயணனின் திருவவதாரமாக கருதப்படுபவர் − வியாஸர்.

    * இதிகாசங்களுள் சிறந்தது − இராமாயணம்.

    * ஒரு பொருளுக்குரிய தன்மையை அதில் அறியாது, வேறு பொருளின் தன்மையை அறிதல் (அதாவது முத்துச்சிப்பி போல் ) − அந்யாதாஜ்ஞாநமாம்.

    * வெள்ளியின் தன்மையை அறிதல் − அந்யதாஜ்ஞாநமாம்.

    * ஒரு பொருளை வேறொரு பொருளாக அறிதல் − விபரீதாஸ்ஞாநமாம்.

    * ஒரு பொருளை துணைப் புருஷனாக அறிதல் − விபரீதஜ்ஞாநமாம்.

    * வியாஸர் செய்த சாஸ்திரங்களில் சிறந்தது − பிரம்ம சூத்திரங்கள்.

    * வியாசர் − பராசரரின் மகன்.

    * பஞ்சராத்திரம் என்னும் சிறந்த சாத்திரத்தைப் படைத்தவர் − நாராயணர்.

    மீண்டும் சந்திக்கலாமா....!
    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  13. Wed. 25. June, 2025 at 8.45 pm.

    *விவேகானந்தர்*

    *விவேகானந்தர் பற்றி சிறிது அறிந்து கொள்வோமா...?*

    * இயற்பெயர் − நரேந்திரநாத் தத்தா.

    * ஆரம்பத்தில் பிரம்மசமாஜ உறுப்பினர்.

    * இராமகிருஷ்ண இயக்கத்தை இவர் தொடங்கிய ஆண்டு − 1896.

    * "உண்மைக்காக எதுவும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை துறக்காதே" இது விவேகானந்தரின் − பொன் மொழிகள்.

    * ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர் களுக்கும் செய்யும் பணியே கடவுளுக்குச் செய்யும் மிகப் பெரிய பங்காகும். இது விவேகானந்தரின் − கொள்கை.

    * அமெரிக்காவில் சிக்காகோ உலக சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு − 1893.

    * இம் மாநாட்டில் விவேகானந்தர் − *இவ்வுலகச் சகோதர சகோதரிகளே* என உரையைத் தொடங்கினார்.

    *சுவாமி விவேகானந்தரால் இராமகிருஷ்ண மடம் ஏற்படுத்தப்பட்ட இடம் − பாராநகரில் ஒரு மடமும் (1887) , கொல்கத்தா அருகே உள்ள பேலூரில் ஒரு மடமும் ( 1899) நிறுவப்பட்டது.*

    *"மனித இனத்திற்கு சேவை செய்வதே" இராம கிருஷ்ண மடத்தின் − கொள்கை.*

    * நிஷ்காம கர்மம் − பற்றற்ற செயல் அல்லது பிரதிபலன் பாராது செயலாற்றுதல்.

    * பிரஹ்ம பிரபஞ்சங்களுக்கு உள்ள தொடர்பு − உலகாத்மபாவம்

    * இந்து சமயப்படி மனிதனின் ஆசிரமகர்மா என்பது − பிரம்மசர்யம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகியன.

    *உபநிஷத்" என்பதன் பொருள் − ஈடுபாட்டுடன் நெருங்கி அமர்தல்.*

    * இன உணர்வு மற்றும் உணர்பு என்பது − தருமி ஞானம் அல்லது தர்மபூத ஞானம்.

    * மனிதன் விடுதலை பெற *பகவத் கீதை தெரிவிக்கும் 3− வழி முறைகள் − ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கங்கள்.*

    * மனித மதிப்பீடுகளின் வரிசை − காமம், தருமம், அருத்தம், மோட்சம்.

    * வாழ்க்கையின் எதிர்மறை அல்லது இருண்ட பகுதி மீது கவனம் செலுத்துவது − சோர்வு வாதம்.

    * தென்திசை கயிலை எனப்படுவது − *திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோண மலை.

    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  14. Thu., 26, June, 2025 at 5.52 pm.

    *INTERNET :*

    *Internet services :*

    Internet services are various types of online functionalities & resources provided over the internet that enable users to perform a range of tasks & access different types of information. These services include.

    *Email :*
    A system for sending, receiving & storing electronic messages.

    *Web Browsing :*
    Accessing & viewing web pages & websites using a web browser.

    *File sharing :*
    Transferring files between users or divice over the Internet.

    *Streaming :*
    Real-time delivery of multimedia content, such as video & audio without requiring a full downliad.

    *Social Media :*
    Platforms for creating, sharing & interacting with content & other users. (& - and).

    *Online Shopping :*
    Buying & selling products & services through e-commerce websites.

    *Cloud Storage :*
    Online storage solutions that allow users to save & access files from anywhere with an Internet connection.

    *VoIP (Voice over Internet Protocol):*
    Voice over Internet Protocol services that enable voice communication over the Internet.

    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  15. Fri. 27, June, 2025 at 7.13 am.

    *நாராயணன் :*

    *பஞ்சசன்யம் என்ற சங்கை முழக்கி உலகை படைக்கிறார்.

    *சுதர்சன சக்கரம் − அழித்தல் தொழில்.

    *அபயகரம் − காத்தலைக் குறிக்கும.

    *கதாயுதம் − உலக சுக துக்கங்களை தடுக்கும் தன்மை.

    *நந்தகம் எனும் வாள் − அஞ்ஞானம் அழிக்க.

    *சாரங்கம் என்ற வில் − அடியார்க்கு நேரும் தீலினையை தடுக்க.

    *கெளஸ்துப மணி − அந்தராத்மாவை உணர்த்துகிறது.

    *வத்சம் என்ற மரு − பிராதனத்தை உணர்த்தும்.

    *பாலாழியில் படுத்திருப்பது − தூய உள்ளத்திலே அமர்தலைக் குறிக்கும்.

    *ஆதிசேஷனின் மேல் சயனம் − உலக முடிவில் (அனந்தன் − முடிவில்லாதவன்) சேஷனாகிய தமோகுணம் கொண்டு உலக அழிவை குறிக்கும்.

    *தாங்காமல் தாங்கி சுகம் பெறும் நிலை − விஷ்ணுவின் சயனம்.

    *லட்சுமியை அருகில் வைத்து யோகம் நிஷ்டை கொண்டது − ஐம்புலன் அடக்கத்தை குறிக்கும்.

    *தசாவதாரங்கள் எடுக்க காரணம் − நல்லோரை ரட்சித்து துஷ்டர்களை அழிக்க.

    *மச்சவதாரம் (மீன்) − ஜயக்கிரீவன் வேதத்தை கடலில் ஒளித்ததால்.

    *கூர்ம (ஆமை) அவதாரம் − மந்திர மலையை மத்தாக , வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு, பாற்கடலை கடையும்போது, மந்திர மலை சாய , ஆமை அவதாரம் எடுத்து அதனை நிலை நிறுத்தினார்.

    *வராக அவதாரம் (பன்றி) − ஹிரண்யாசூரன் (ஹிரண்யா௯ஷன்) பூமியை சுருட்டி கடலில் ஒளித்ததால் அதை மீட்க.

    *நரசிங்கவதாரம் − ஹிரண்யகசிபுவின் அகங்காரத்தால் மகன் "பிரகலாதன்" கடவுள் எங்குமிருப்பார் என கூற, தூணை அசுரன் உதைக்க அதிலிருந்து "நரசிம்மர்" வெளிப்பட்டு அவனை கொன்றார்.

    *வாமன (குள்ளன்) அவதாரம் − மகாபலி அசுரன் தேவர்களுக்கு துன்பம் தர வாமன அவதாரமெடுத்து அவன் தலையில் கால் வைத்து பூமியில் அழுத்தினார்.

    *பரசுராம அவதாரம் − தந்தையை கொன்ற கார்த்தவீரியனைக் கொன்றார்.;

    *தசரத ராம அவதாரம் : குருவாக்கிய பரிபாலனம் − கொடிய செயல்களை செய்த தடாகை அரக்கியை குரு விஸ்வாமித்திரர் சொன்னதால் கொன்றார்.

    *தந்தை வாக்கிய பரிபாலனம் − தசரதன் கைகேயிடம் கொடுத்த வரத்தை நிறைவேற்ற வனவாசம் செய்தார்.

    *சகோதர அன்பு − வனவாசம் செல்வது கண்டு பரதன், இராமனை நாடாள அழைக்க மறுத்து தேற்றியனுப்புவதிலும், குகன், சுக்ரீவன், விபீஷணன் ஆகியோரிடமும் சகோதர அன்பைக் காட்டினான்.

    *ஏகபத்தினி விரதம் − சூர்ப்பனகை வலுவில் வந்து மணம்புரிய வேண்டியதை மறுத்தது.

    *வாலி வதம் − சுக்ரீவன் மனைவியை, வாலி தனதாக்கிக் கொண்டதால் , சுக்ரீவன் இராமனை அணுகியதால் , வாலியை கொன்றார்.

    *பலராம அவதாரம் − இவர் ஆதிசேஷனின் அம்சம். கண்ணனுக்கு முன் பிறந்தவர். கண்ணனின் லீலையில் உடனிருந்தவர்.

    *கிருஷ்ணாவதாரம் − வாசுதேவர் − தேவகிக்கு மகனாக பிறப்பு − ஆயர்பாடி நந்தகோபன்-யசோதா புத்திரனாக வளர்ப்பு.

    *கோகுல நந்தன் − கோகுலத்தில் 16 வயது வரை வளர்ந்தான்.

    *பூதனை பாலுடன் விஷமும் ஊட்ட அவளைக் கொன்றான்.

    *வெண்ணெய் திருடியது − பால் போன்ற சுத்தமும், வெண்ணெய் − மிருதுவான அடியார்க்கு அருளுவான்.

    *கோபியர் சேலைகளை கவர்ந்தது − மான அபிமானங்களை கைவிட்டு இறைவனை அடைவோர்க்கு முக்தி அருளப்படுவதைக் குறிக்கிறது.

    *குழலூதி மயக்கியது − ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதைக் குறிக்கிறது.

    *துவாரகா நந்தன் − துவாரகைக்கு அரசனானதும், சிசுபாலன், கம்சன் ஆகியோரை அழித்தது. துரியோதனனிடம் பாண்டவர்க்காக தூது சென்றது.

    *பார்த்தசாரதி − அர்ஜூனனுக்கு தேரோட்டியாகி கீதையை உபதேசித்தது.

    *கல்கியவதாரம் − கலியின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட எடுக்க இருப்பது.

    மீண்டும் சந்திக்கலாம் ..!
    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  16. Sat. 28, June, 2025 at 7.12 am.

    *Internet :*

    *Today Internet Connection Concepts :*

    Internet connection is the essential link that enables devices to communicate & (and) access information accross the global network known as the internet.

    It plays a pivotal role in modern society, shaping how individuals, businesses & government interact, share data & consume content.

    *Type of Internet Connections :*

    *Broadband Connectios :*
    High-speed & always -on, broadband connections include DSL (Digital Subscriber Line ) cable & fiber optics.

    These offer faster data transfer rates compared to traditional dial-up connections.

    *Wireless Connections :*

    Wi-Fi, mobile data (3G, 4G, 5G) & satellite connections provide flexibility by eliminating the need for physical cables . Wireless technology is widely used for mobile devices & in homes & businesses.

    *Dial-up Connections :*
    An older, slower method that uses telephone lines to establish a connection. It has become less common due to the prevalence of faster broadband options.

    Next Meet...!
    Jansikannan438@gmail.com.

    ReplyDelete