jaga flash news

Saturday 20 October 2012

ஆதார் அட்டையே அனைத்துக்குமான அடையாள அட்டை


டெல்லி: வங்கிக் கணக்கு தொடங்க, இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க அடையாள சான்றிதல்களை அள்ளிக் கொட்ட வேண்டியதில்லை.. அடுக்கவும் வேண்டியதும் இல்லை.. உங்கள் விரல் நுனியில் எல்லாம் என்ற நிலைமை உருவாகிறது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த அடையாள அட்டை அதாவது ஆதார் அடையாள அட்டை வழங்கும்போது பயோமெட்ரிக் முறையாக உங்களது கைரேகையும் பதிவு செய்யப்படும். இது கணிணிமயப்படுத்தப்படுவிடும்.உங்கள் கைரேகையை வைத்தே உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிந்து கொள்ள முடியும். ஆதர் அடையாள அட்டையை அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றாக அறிவிக்கவும் இருக்கிறது ரிசர்வ் வங்கி.
செல்போன் உள்ளிட்டவை வாங்கும்போதும் இந்த ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தலாம்!
ஆதார் அட்டையைப் பெற uidai.gov.in என்ற இணைய தளத்தில் சென்று பார்வையிடலாம்! விரைவில் அப்டேட் மையங்கள் வங்கிகள் உட்பட பல இடங்களில் ஆதார் அட்டைக்காகவே திறக்கப்பட இருக்கிறது

No comments:

Post a Comment