jaga flash news

Sunday 14 October 2012

மாரியாத்தா கூழ் !!!!



ஆடி மாசம் பொறந்தாச்சுன்னா மூலைக்கு மூலை அம்மன் கோயில்ல கூழ் ஊத்த ஆரம்பிச்சிடுறாங்க ...மாரியாத்தா கூழ் தான் குடிக்குமா...பெப்சி எல்லாம் குடிக்காதா...? ஒரு சேஞ்ச்க்கு அதையும் கொடுங்கடா....என ச்லித்துக்கொள்பவரா நீங்க..?.நம் முன்னோர்கள் இந்த சம்பிரதயம் எதுக்கு வெச்சிருக்காங்க தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்க..இன்று நாகரீகம்,வசதி வாய்ப்பு,கம்ப்யூட்டர்,கார்,பைக் என நாம் பரபரப்பாக இருந்தாலும் 20 வருடங்களுக்
கு முன்பு .டி கம்பெனியை நம்பி நாம் இல்லை..விவசாயத்தை நம்பித்தான் இருந்தோம்....ஒண்ணு முதலாளி..அல்லது கூலி...இவர்களை சார்ந்த வணிகர்கள் இதுதான் பெரும்பான்மை...சாதாரண பாமர மக்களை அதிகம் கொண்ட,கிராமங்களை அதிகம் கொண்ட நம் இந்தியாவில் மழையை நம்பித்தான் அனைவரும் இருந்தோம்...

மழை பெய்தால்தான்..விவசாயம் செழிக்கும்..விவசாயம் செழித்தால்தான் எல்லாம் செழிக்கும்..எனவே மழை வேண்டி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தெய்வம் உருவாக்கப்பட்டது..பெண் தானே இரக்கமுள்ளவர்..தாயை விட அன்பு ஏது? எனவே பெண் தெய்வத்தை வணங்கினர்..மாரி என்றால் மழை..மழைக்கான தெய்வத்தை மாரியம்மன் என வழிபட்டனர் அதற்காக நேர்த்திக்கடன் செலுத்தினர்..நோயை விரட்டும் தெய்வமாகவும் மாரியம்மன் வழிபடப்பட்டது..ஒவ்வொரு கால சூழலிலும் ஒவ்வொரு நோய் நம்மை தாக்கும்..மழைக்காலத்தில் ஒரு சில நோய்கள்...வெய்யில் காலத்தில் சின்னம்மை,பெரியம்மை ,வெட்கை போன்றவை..இவற்றை குணமாக்கும் அருமருந்துகள் வேப்பிலை,மஞ்சள்தான்..இவை இரண்டும் அற்புத கிருமி நாசினிகள் என இப்போதான் விஞ்ஞானிகள் தலை சொறிந்து கொண்டே ஒப்புக்கொள்கிறார்கள் ஆனா நம்ம முப்பாட்டன் இதை அப்பவே தெரிஞ்சி வெச்சிருந்தான்..

இன்னிக்கு அமெரிக்காகாரன் இதை எப்படியாவது நம்ம சொத்தாக்கிடனும்னு துடிக்கிறான் ...ஆனா இந்த மரம் நம் இந்திய மண் சூழலுக்குத்தான் பழுதில்லாத அற்புத மருந்தாக விளையும்..ஆடி மாதம் தமிழ் மாதங்களில் நாலாவது மாதமாக வருகிறது..இதை நம் முன்னோர்கள் ஒரு ராசியில்லாத மாதமாகவே கருதி வந்தனர்..நோய்கள் உண்டாக்கும் மாதம் மாதங்களில் ஒன்றாகவும்,உள்ளுறுப்புகள் பாதிக்கும் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் உற்பத்தியாகும் மாதமாகவும் கருதினர்..இந்த பயத்தால் முதலுதவியாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வேண்டும் என கருதினர்..அதற்காக ஒரு மருந்தை தயாரித்தனர்..அதுதான் கூழ்..இதில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ராகியை கூழாக்கி அதில் மருந்தான வேப்பம்பூ,கலந்து கொடுத்தனர்..சும்மா கொடுத்தா நம் மக்கள் குடிப்பானா...பிகு பண்ணுவான்...அதுக்காக உண்டாக்கப்பட்டது திருவிழா...அப்பல்லாம் கூலி ஆட்கள்தானே அதிகம்..அவன் எங்கிருந்து கூழ் தயரிக்க முடியும்..? திருவிழா வெச்சா பணக்காரன் தான் நடத்த முடியும்..அவன் கிட்ட பணம் வர வைக்கவும் திருவிழா உதவும்..சும்மா கேட்டா தருவானா..சாமிக்குன்னு கேட்டா அள்ளி தருவான்..இதனால் ஏழைகளின் பசியும் அடங்கியது...ஒரே கல்லில் நம் முன்னோர் எத்தனை மாங்கா அடிச்சிருக்காங்க பாருங்க!!

No comments:

Post a Comment