jaga flash news

Sunday 28 October 2012

நெற்றிக் கண்


நெற்றிக் கண்
மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும்நட்சத்திரங்களாலும் அடிப்படையில் மாறுபடுவதால் ஒரே வித்தை (பயிற்சிபலருக்கு பலவிதமான அனுபவத்தைக் கொடுக்கும்
ஆண்கள் பாதரச அம்சம்பெண்கள் கந்தக அம்சம்பெண்களின் சக்தி மாதம் ஒரு முறை குறைந்து விடுகிறது
யோக நிலையில் மிக உயர்ந்த நிலையாகக் கருதப் படுவது நெற்றிக் கண் திறப்பது


நெற்றிக் கண்ணைத் திறக்கப் பல்வேறு உபாயங்கள் மனிதர்களால் செய்யப்பட்டு வருகின்றன.
திபெத் நாட்டில் வாழும் லாமாக்கள் நெற்றியில் ஓட்டை போட்டு குச்சியால் அடைக்கின்றனர்.
பழங்குடி மக்கள் புருவ மத்தியில் சூடு போடுகின்றனர்.
வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர்.
சாக்தர்கள் குங்குமம் இடுகின்றனர்.
பெண்கள் நெற்றி சுட்டி அணிகின்றனர்.
இஸ்லாமியர் முட்டி முட்டித் தொழுகின்றனர்.
பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்கின்றனர்.
யோகிகள் சுழுமுனை மந்திரத்தாலும்பிராணாயாமத்தாலும் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர்.
மருத்துவர்கள் கண்ணுப் புழை என்னும் மூலிகையால் திறக்கின்றனர்.
ராஜ குருக்கள் வைரக் கற்களால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
மந்திரவாதிகள் ருத்திர பஸ்பத்தால் திறக்கின்றனர்.
சைவ மடாதிபதிகள் ஒரு முக ருத்திராட்சத்தால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக் கல்லால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளி மூலம் கண்ணைத் திறக்கப் பயிற்சி செய்கின்றனர்.


நெற்றிக்கண்ணைத் திறக்க ஒரு எளிய பயிற்சி முறை:
நாட்டு மருந்துக் கடையில் சுருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் எனக் கேளுங்கள். 5 கிராமிற்குக் குறையாமல் 10 கிராமிற்கு மிகாமல் ஒரே கல்லாக வாங்கவும்கோணல் மாணலாக இருக்கும்வாங்கிய கல்லை உப்புத் தாளில் தேய்த்துக் கொள்ளவும்.
அதிலுள்ள ஒளிக்கற்றை சூட்சுமமாக வெளிப்படும்தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல் விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும்வடக்கு தவிர இதரப் பக்கம் தலை வைத்து மல்லாந்து படுக்க வேண்டும்.
இரவில் சுமார் 7 மணிக்குப் பால் சிறிது சாப்பிட்டு 10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம்அஞ்சனக் கல்லை கண்களை மூடியோ அல்லது மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும்சுருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஒளிக்கற்றைகள் நெற்றிக் கண் ஜவ்வை சிறிது சிறிதாக கிழிக்கும்ஒளி சிறிது சிறிதாக வெளிவரும்.
ஒளி நிலை கூடுதலாகி நெற்றிக்குள்  பு+ரண சந்திரன் போல் காட்சி கொடுக்கும்அருள்நிலை பெருகும். 90 நாள் பயிற்சியில் வெற்றி பெறுவீர்கள் .
சங்கரன் கோவிலில் அம்பாளுக்கு மாவிளக்குச் செய்து நெய்யு+ற்றித் தாமரை நுhல் போட்டு மல்லாந்து படுத்து நெற்றியில் வைத்து நோன்பு நோக்கின்றனர்இதுவும் ஒரு முறையாக செய்கின்றனர்.
குண்டலினி யோகப் பயிற்சிக்கு மட்டும் கால வரையறை கிடையாதுமற்ற எல்லா வித்தைகளையும் 90 நாள் தொடர்ச்சியான சாதனையால் முடித்து விடலாம்இந்த காலத்தில் முடிக்க முடியாதவர்கள் மன ஊக்கத்துடன் பயிற்சியைத் தொடரலாம்.

No comments:

Post a Comment