jaga flash news

Sunday 14 February 2016

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்!

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்!
இறை வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு! ....

பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்!
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக்.இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் 
சிறப்பு மிக்க "நிஷ்களங்கேஷ்வர்" சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு 
கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள 
சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த 
ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய 
புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி 
மரத்தின் உச்சியைத் தொடும்.
பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை 
வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் 
சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.
வெளிநாடு மற்றும் உள்நாடு விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக கம்பீரமாக கடலினுள் நிற்கும் 
காலங்கள் கடந்த நம் பொக்கிஷம்! 

No comments:

Post a Comment