jaga flash news

Saturday 6 February 2016

ஆதிசங்கரர் " பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா "

உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர்.....
இவர் அருளிய. " பிரஸ்னோத்ர
ரத்ன மாலிகா " என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.,..
/ எது இதமானது?
* தர்மம்.
/ நஞ்சு எது?
* பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
/ மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?
* பற்றுதல்.
/ கள்வர்கள் யார்?
* புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
/ எதிரி யார்?
* சோம்பல்.
/ எல்லோரும் பயப்படுவது எதற்கு?
* இறப்புக்கு.
/ குருடனை விட குருடன் யார்?
* ஆசைகள் உள்ளவன்.
/ சூரன் யார்?
* கெட்ட வழியில் மனம் செல்லாமல்,
அதை அடக்குபவன்.
/ மதிப்புக்கு மூலம் எது ?
* எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
/ எது துக்கம்?
* மன நிறைவு இல்லாமல் இருப்பது.
/ உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?
* குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
/ தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?
* இளமை,
செல்வம்,
ஆயுள் ஆகியன.
/ சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?
* நல்லவர்கள்.
/ எது சுகமானது?
* அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
/ எது இன்பம் தரும்?
* நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
/ எது மரணத்துக்கு இணையானது?
* அசட்டுத்தனம்.
/ விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம்?
* காலமறிந்து
செய்யும் உதவி.
/ இறக்கும் வரை உறுத்துவது எது?
* ரகசியமாகச் செய்த பாவம்.
/ எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?
* துஷ்டர்கள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள். சோகத்திலேயே சுழல்பவர்கள்.
நன்றி கெட்டவர்கள் ஆகியோர்!
/ சாது என்பவர் யார்?
* ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
/ உலகத்தை யாரால் வெல்ல முடியும்?
* சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
/ யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
* எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
/ செவிடன் யார்?
* நல்லதைக் கேட்காதவன்.
/ ஊமை யார்?
* சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
/ நண்பன் யார்?
* பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
/ யாரை விபத்துகள் அணுகாது?
* மூத்தோர் சொல்
கேட்டு நடப்பவனையும், அடக்க முள்ளவனையும்.....
படித்து ரசித்து பகிர்ந்தேன் ..

No comments:

Post a Comment