jaga flash news

Monday, 3 August 2026

விதி(லக்னம்), மதி(சந்திரன்), கதி(சூரியன் இருக்கும் இட பலன்)



ஆயில்யம், பூரட்டாதி, அனுஷம், அஸ்வினி

இந்த நான்கும் சூரியனின் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்களில் ஒருவருக்கு விதி(லக்னம்), மதி(சந்திரன்), கதி(சூரியன்) அமைந்திருந்தாலோ அல்லது இந்த நட்சத்திரங்களின் தசை நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ, சூரியன் தொடர்பான பல சிக்கல்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும். தந்தை, மாமனார் மற்றும் சூரியன் சம்பந்தப்பட்ட நபர்களால் உதவிகள் கிடைக்காது.

அதாவது, இவர்களுக்கு தந்தையின் முழு அருள் அல்லது ஆதரவு கிடைக்காமல் இருக்கும்.

கர்ணன் கதையைப் பார்த்தால், அவர் சூரியனின் மகன். ஆனால், சூரியன் நேரடியாக அவருக்கு உதவி செய்யும் நிலையில் இருந்ததில்லை. சூரியனே தந்தை என்ற உண்மை கூட அவருக்குத் தெரியாமல் இருந்தது.

உண்மையில், அவர் ஒரு சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்தவர். அரச பரம்பரையில் பிறந்தவராக இருந்தும், குந்தி அவரை ஆற்றில் விட்டதால், அவர் தேரோட்டியின் மகனாக வளர்க்கப்பட்டார். அதனால் வாழககை முழுவதும் அவமானங்களையே சந்தித்தார்.

அவ்வளவு திறமையுடையவராக இருந்தும், சூரிய சாபத்தின் காரணமாக வாழ்க்கையில் பல இழப்புகளையும் துன்பங்களையும் அனுபவித்தார்.



அதனால்தான் கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் கர்ணனின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், குபேரனின் வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

கர்ணனும், குபேரனும் இருவருமே தலைமை, மரியாதை போன்றவற்றிற்காக போராடியவர்கள்.

கர்ணன் வாழ்க்கை முழுவதும் கடுஞ்சொல், இகழ்ச்சி, அவமானம் ஆகியவற்றையே எதிர்கொணடார். அதுபோல, இந்த நட்சத்திரச் சேர்க்கை உள்ளவர்களும் வாழ்க்கையில் பல அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம்.


அதனால் இந்த நட்சத்திரத்தில் விதி மதி கதி உள்ளவர்கள் அவமானத்தை வைராக்கியமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கெல்லாம் ஒரு தன்மான உணர்வு (ஈகோ) இருக்கும். சூரியன் என்பவர் தன்னம்பிக்கை, கம்பீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அடையாளம். எனவே, சுயமரியாதை குறைவதை இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது.

பணம், பொருள், உறவுகள் என எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், கவரவத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு மரியாதையும் கண்ணியமும் மிகவும் முக்கியம்.

அதனால், நாம் அதிகமாக சூரிய பகவானை வழிபட வேண்டும்.

சூரியன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அவர்களை திட்டக்கூடாது.

எந்தக் காரணத்திற்காகவும் அவர்களுடைய மனதைப் புண்படுத்தக் கூடாது.

கர்ணன் மற்றும் குபேரன் கதை கொண்ட திரைப்படங்களை பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment