சம்பளம் கரையாமல் இருக்க பரிகாரம்
சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இனிப்பு, பால் அல்லது மல்லிகைப்பூ போன்ற மங்களகரமான பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்குங்கள்.
இது செல்வம் கையில் நிலைத்து, வருமானம் வீண் செலவாகாமல் இருக்க உதவும் என்று நம்யப்படுகிறது.
சம்பளம் கிடைத்த உடனே தேவையற்ற செலவுகள், மது அருந்துதல், அசைவ விருந்து வைப்பது போன்றவற்றை முதல் செலவாக செய்யாமல் இருப்பது நல்லது.
வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டியிருந்தாலும், அதற்கு முன் சிறிதளவு இனிப்பு அல்லது பால் வாங்கிய பிறகு பெட்ரோல் போடுவது சிறந்ததாக கூறப்படுகிறது.
இதனுடன், சம்பளத்தில் ஒரு பகுதியை உடனே சேமிப்பிற்காக ஒதுக்கி வைத்தால், மாத இறுதி வரை பணம் நிலைத்து, நிதி நெருக்கடி குறையும் என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment