jaga flash news

Wednesday, 12 August 2026

முன்ஜென்ம நிறைவேறாத ஆசைகள் நமக்கு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது

முன்ஜென்ம நிறைவேறாத ஆசைகள் நமக்கு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது

முன்ஜென்மத்தில் நமக்கு நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்லது அதை அடையவதற்காக தான் இந்த பிறவியை எடுத்துள்ளோம் என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என உளவியல் ரீதியாக சொல்லப்படுகிறது. அந்த அறிகுறிகள் இதோ...

1. காரணமே இல்லாமல் சில விஷயங்கள், சில மனிதர்கள் என ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது தீவிர ஈர்ப்பு ஏற்படுவது. உதாரணமாக இசை பின்னணியே இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் இசையின் மீது அலாதியான பிரியம் ஏற்படுவது. பூஜைகள் செய்வது, வேதங்கள் கற்பது, கலைகள் அல்லது உடைகள் மீது ஈர்ப்பு ஏற்படுவது. சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

2. எந்த விதமான கடின உழைப்பும், முயற்சியும் இல்லாமல் ஒரு விஷயத்தை எளிதாக கற்றுக் கொள்வது. இது ஏற்கனவே பல காலமாக செய்து பழக்கப்பட்ட விஷயம் போன்ற உணர்வு ஏற்படுவது. இது முன் ஜென்மத்தில் அரைகுறையாக நின்ற முயற்சியின் வெளிப்பாடாக இருக்கலாம்.



3. இதுவரை நேரில் பார்க்காத இடங்கள், மனிதர்கள் அல்லது காலகட்டங்கள் கனவில் மீண்டும் மீண்டும் வருவது. இது முன் ஜென்மத்தில் அடைய முயற்சி செய்து, கை நழுவி போன விஷயத்தை அடைய உங்களை தூண்டுவதாக இருக்கலாம்.



4. வாழ்க்கையில் அனைத்தும் இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஏக்கம், ஏதோ ஒன்று ஒன்று விடுபட்டதை போன்ற உணர்வு இருந்து கொண்டே இருப்பது. என்ன காரணம் என்றே தெரியாமல் ஏதோ ஒரு விஷயத்தை இன்னும் அடையாமல் இருக்கிறோமே , அதை செய்ய வேண்டுமே என்ற உணர்வு மனதிற்குள் இருந்து கொண்டே இருப்பது.



5. நீர், இருள், நெருப்பு அல்லது சில மனிதர்கள் என குறிப்பிட்ட சில விஷயங்களை பார்க்கும் போது மனதிற்குள் நம்மையும் அறியாமல் ஏற்படும்


No comments:

Post a Comment