வாஸ்து தகவல்கள்
அடுக்குமாடி வீடுகள் வாழ்வில்
அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுமா?
அடுக்குமாடி வீடுகள் (Apartment) வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுமா?
இன்றைய அவசர உலகில் மனிதன் பணத்தை விரயம் செய்யலாம். ஆனால், நேரத்தை விரயம் செய்யக்கூடாது. அதுவும் வேலைக்கு செல்லும்போது நேர விரயம் அதிகம் எற்படுகிறது. இதனால் மனிதன் அலுவலகம் அல்லது தொழிற்சாலைக்கு மிக அருகில் அமையும் அடுக்குமாடி கலாச்சாரத்திற்கு அடிமயா விடுகிறான்.
ஒரு சிலர் அவர்களது பொருளாதாரத்தை கருதி தனி வீடு கிடைக்காமல் இதுபோன்ற அடுக்குமாடி வீட்டை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த வீடு அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி விடுகிறது. இது எதற்காக ஏற்படுகிறது என்று கூட அவர்களால் கணிக்க முடியாது. பொதுவாகவே, அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து அமைவது என்பது மிகவும் கடினம்.
இருப்பினும் அடுக்குமாடி வீடுகளில் பார்க்க வேண்டிய சில அடிப்படை வாஸ்து விதிகளை இப்போது பார்ப்போம்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் வருவது சிறப்பு.
தலைவாசல் உச்சத்தில் வருவது சிறப்பு.
தாய்சுவரின் எந்த மூலையும் வெட்டுப்படாமல் வருவது சிறப்பு.
மிக முக்கியமாக வடக்கும், கிழக்கும் ஜன்னல் அமைப்பு இல்லாதவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
கழிவறை வடிகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்கக்கூடாது.
சமையலறை மற்றும் பூஜையறை வடிகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக வரக்கூடாது.
மிக முக்கியமாக தென்மேற்கில் அவசியம் மாஸ்டர் பெட்ரூம் வருவது சிறப்பு.
மொத்த இடத்திற்கு தவறாக தெருக்குத்து இல்லாமல் இருப்பது நல்லது.
இன்றைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதில் மேற்கண்டவைகளை கவனத்தில் கொண்டும் வாஸ்து நிபுணரின் ஆலோசனையின்படி நல்ல வீட்டை தேர்ந்தெடுப்பது நல்வாழ்க்கையை வாழ வழி கிடைக்கும்.
No comments:
Post a Comment