jaga flash news

Monday 1 October 2012

திருமணப்பொருத்தம் பார்க்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை.

திருமணப்பொருத்தம் பார்க்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை.
1)அதிகப்படியான பொருத்தங்கள் இருக்க வேண்டும்.
  
2)
முக்கிய பொருத்தங்கள் என்று கூறப்படும் தினம், கணம், யோணி, ராசி, ரச்சு ஆகிய ஐந்தில் 3 பொருத்தத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
 
3)திசா சந்திப்பு கண்டிப்பாக இருக்க கூடாது. மேலும் திருமணமாகி 5 வருடத்திற்குள் திசா சந்திப்பு வரக்கூடாது.
  
4)குழந்தை தோசத்தை தனித்தனியாக ஆராய்ந்து முடிவு செய்யப்பட வேண்டும்.
  
5)ஆணிற்கு நடக்கும் தசை பெண்ணிற்கும், பெண்ணிற்கு நடக்கும் தசை ஆணிற்கும் முழுதும் எதிர்மறை இல்லாமல் ஓரளவு யோகமாயிருக்க வேண்டும்.
  
6)குணமறிந்து பொருத்தப்பட வேண்டும். (உதாரணத்திற்கு பெண் / ஆணிற்கு அதிகம் கோபம் எனில் ஆண் / பெண் ஜாதகத்தில் சாதுவான குணம் இருத்தல் நலம்.)
  
7)மேலும் யோகங்கள் , சாபங்கள், அதிர்ஷ்டங்கள் போன்றவற்றை ஆராய்ந்து பொருத்தப்பட வேண்டும்.
  
8)கல்யாண முகூர்த்தம் குறிக்கப்படும்போது பொதுவான சுப முகூர்த்தம் என்றில்லாமல் ஆண், பெண் இருவருடைய ஜாதக ரீதியாக அவர்களுக்கு மிக யோகமான நாளில், யோகமான நேரத்தில் குறிக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம்.

1 comment:

  1. திசா சந்திப்பு என்பது என்ன? திருமணத்திற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருவருக்கும் ஒரே திசை நடக்குமானால், திருமணம் செய்யலாமா? வேறு ஏதேனும் பரிகாரம் உண்டா?

    ReplyDelete