jaga flash news

Monday 31 December 2012

அசுவமேத யாகம்


 அசுவமேத யாகம் …?
ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்துவிட்டு…அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியை  கொ ண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டு விடுவார்கள். அக்குதி ரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்துவிடுவா ர்கள்.
இயற்கை உந்துதலால் ஆண் குதி ரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப் போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப்பெண்கள் முக்கியமாக ராணி குதிரையின் உறுப்பை கைக ளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குதான். இதை க் கூற சங்கோஜமாகத் (கூச்சமாக) தான் இருக்கிற து என்ன செய்ய. அசுவமேத யாக ஸ்லோகமே அப்ப டித்தானே இருக்கிறது.
“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”
எனப்போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி  ராணி வழிபட வேண்டிய முறையைத்தான் விளக்குகிறது இந் த ஸ்லோகம்.
இரவு இந்தக் கடமை முடிந்தது ம்… மறுநாள் அந்த ஆண் குதி ரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும்வரை எரித்து விடுவா ர்கள். இதுதான் அஸ் வமேத யாகம்.
மக்களைப்போலவே, ராஜ குடும்பத் தினரும் பிராமணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் “ஏ…ராஜா… இந்த யாகத்தை நல்லவிதமாக பூர்த் தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்ச னை கொடுத்தாய். அஃதோடு யா கத்தில் பங்குகொண்ட உன் ராணியை யும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்து ச்செல்ல வேண்டும்” என்றார்களா  ம்.
இதையல்லாம் பார்த்து வெகுண் டார் புத்தர். மனித தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே…? ஏன் இப்படி…? என யாகம் நடத்தும் இடத்துக்கேபோய் கேள்விகள் கேட் டார்.
பிராமணர்கள் பதில் சொன்னார்கள், “குதிரைக்கு மோட்சம் கிடைக் கும். லோகத்துக்கு ஷேமம் கிடைக்கும்” என்று. புத்தர் திரும்பக் கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்க ளே.. எல்லாம் அறிந்த பிராமண னா கிய நீங்கள் மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்கினி குண் டத்தில் யாகம் நடத்தும் உங்களை யும் தூக்கிப் போட்டால் உங்களுக் கும் மோட்சம் கிட்டுமல்லவா?. ப்ராகிருத மொழியி ல் மக்களிடமு ம் இதே கேள்வியை புத்தர் பரப்ப… திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர் கள்
நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது புத்தகத்திலிருந்து . . .
நன்றி: அருந்தமிழிலிருந்து

1 comment:

  1. ஆண்குதிரை, பெண்குதிரை, ஒரு சிறு கதை.

    The mare grazed in the meadow day & night & did no ploughing, but the horse grazed only at night & ploughed in the day. So the mare said 2 the horse:


    Why do U plough? I wouldn't go if I were U. He'd whip, but I'd kick him back."

    The next day the horse did as she said. When his master saw that he had grown stubborn, he harnessed the mare 2 the plough instead.

    ReplyDelete