jaga flash news

Sunday 28 June 2015

சயன சுகம் என்றால் என்ன?


சயன சுகம் என்றால் என்ன?
மனம் ஒன்றுபட்ட தம்பதிகள் நல்ல யோனிப்பொருத்தம் உள்ள தம்பதிகள், நல்ல வசியம் உள்ள தம்பதிகள் கணவன் மனைவி இருவருடைய லக்கின வீர்ய சுக களத்திர சயன சம்போக ஸ்தானங்களின் நிலை (1,3,4,7 12,) அந்த ஸ்தானதிபதிகளுக்கும் லக்கினத்தோனுக்கும் ஆன நல்லுறவு, கணவன் ,மனைவி இருவருடைய ஜாதகத்தில் தனிதனியாக லக்கினத்தின் இயல்பு, லக்கினாதிபதியின் குணாதிசயம், இருவருடைய லக்கினத்தோனுக்கும் உடைய கிரக வசியம் , மேற்க்கூறிய அனைத்து ஸ்தானங்களையும் பார்க்ககூடிய கிரகங்களின் பார்வை இவையனைத்தையும் நீக்கமர ஆராய்ந்தால்தான் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியும்.....
ஒரு பெண்னுக்கு மேஷ லக்கினம் என்றால் ஆனுக்கு சிம்மமாக இருக்க வேண்டும்.. அதாவது இருவருடைய உடல் தத்துவங்களும் நெருப்புத்தத்துவங்கள். அடுத்து வீர்ய ஸ்தானமும் ஸ்தானாதிபதியும் அதன் இயல்புகள் ஒத்துபோக வேண்டும். இதில் பென்னை விட ஆனின் மூன்றாமிடமும் மூன்றாமிடத்து அதிபதியும் சற்று பலமாக அமைய வேண்டும். அடுத்து சுகஸ்தானம் மற்றும் அதன் ஸ்தானாதிபதிகளின் உறவு நல்லுறவாக இருக்க வேண்டும். அடுத்து களஸ்திர ஸ்தானங்கள் அதன் ஸ்தானாதிபதிகளின் நிலை வசியமுடையதாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்....
இந்த வசியம் குறைந்தாலோ இருவருடைய களஸ்திர ஸ்தானாதிபதிகளின் உறவு பகை நீச்சம் பெற்றாலோ சதிபதிகளின் மனக்கற்பு பாதிக்கப்படும்... மற்ற மூன்று ஸ்தானங்களின் நிலை நன்றாக இருந்து களஸ்திர ஸ்தானாதிபதிகளின் நல்லுறவு கெட்டிருந்தால் தம்பதிகள் உடலுறவின் போது கணவன் தனக்கு பிடித்த வேறு ஒரு பென்னையோ, மனைவி தனக்கு பிடித்த வேறு ஒரு ஆனையோ மனதில் நினைத்துக்கொண்டு சுகம் அனுபவிக்கும் நிலை வரலாம். ஒரு ஆனின் ஜாதகத்தில் களஸ்திர பாவாதிபதி தன் மனைவியின் களஸ்திர பாவாதிபதியோடு பகைபெற்று தன் மனைவியின் இளைய அல்லது மூத்த சகோதரிகளின் ஏழாம் பாவாதிபதிகளோடும் லக்னாதிபதிகளோடும் அன்யோன்ய வசியம் பெற்றால் மனைவிக்கு தெரியாமல் மச்சினியோடு ஊ...லல்லல்லாதான்..... இது மச்சினிக்கு மட்டுமல்ல.....மாமியாருக்கும் பொருந்தும் என வருத்தத்தோடு சொல்லிக்கொள்கிறேன்....
அதேபோல ஒரு பெண் தன் கனவனின் சகோதரர்களோடு தொடர்பு கொள்வதும் தன் மாமனாருடன் தொடர்பு வைத்துக்கொள்வதும் இதே கிரக ஜாலங்கலே!!! ஆனால் இதில் எல்லாவற்றிலும் தப்பித்துதான் ஒரு ஆனோ ஒரு பெண்னோ படிதாண்ட முடியும்...! இதர்க்கு கிரக வசியத்தோடு யோனிபொருத்தமும் மிக மிக மிக முக்கியம்......எந்த ஒரு ஆனோ பெண்னோ தன் துனையை பிரிந்து வேறு ஒருவரின் மீது நாட்டம் வருவதர்க்கு பொருந்தா யோனியே முதல் காரணம் என்பதே உண்மை! இதில் இன்னொரு விடயத்தை முக்கியமாக சொல்லியே ஆக வேண்டும்....யோனிபொருத்தம் இல்லை , வசிய பொருத்தம் இல்லை, லக்கினப்பொருத்தம் இல்லை ,ஆனாலும் ஒரு தம்பதிகள் எந்ததவறுக்கும் இடமளிக்காமல் வாழ முடியும் என்றால் அதர்க்கு கனவன் மனைவி இருவருடைய நாலாமிடத்து பொருத்தமும் நாலாமதிபதிகளின் நிலையும் நன்றாக இருந்தாலே சயன சுகத்தை பெரிதாக நினைக்காமல் இருவரும் ஆயுள் முழுவதும் நல்லொழுக்கமுடைய சதிபதியாக வாழ்ந்து விடுவார்கள்....இதில் யாரோ ஒருவருடைய ஜாதகத்தில் நாலாமதிபதி கெட்டிருந்தால் அந்த ஒருவர் மட்டும் மற்றொருவருக்கு துரோகம் செய்து விடுவார்....... இருவரின் நாலாமிடமும் கெட்டு இருவருக்கும் யோனி பொருத்தமும் இல்லையென்றால் இருவருக்குமே காலம் முழுவதும் கடைச்சாப்பாடுதான்!!! ””
மேலும் மற்ற எல்லா பொருத்தமும் இருந்தும் இருவருக்குமோ அல்லது இருவரில் ஒருவருக்கோ பன்னிரெண்டாமிடம் மட்டும் கெட்டிருந்தால் அவர்களின் போக இன்பத்திர்க்கு இடையூருகள் ஏற்ப்படும்...அதாவது ஏகாந்தமான சூழல் அமையாதது...அல்லது கூட்டுகுடும்பமாக எல்லோரும் ஒரே அறையில் தூங்கும் நிலைமை....குழந்தைகளை தனியறையில் தூங்கவைக்க வசதியில்லாமல் போவது....ஒரு வகையான பதற்றமான சூழ்னிலை போன்றவை பன்னிரெண்டாம் ஸ்தானமோ ஸ்தானாதிபதியோ கெடுவதால் ஏற்படும்...! அப்படிப்பட்ட தம்பதிகள், அதாவது லக்கின வீர்ய சுக களத்திர பொருத்தங்கள் நன்ராக இருந்து பன்னிரெண்டாம் இடமோ அதன் அதிபதியோ மட்டும் கெட்டிருந்தால் கிடைத்த இடத்தில் கிடைத்த நேரத்தில் இருவரும் வெற்றிக்கொடி நாட்டிவிடுவார்கள். சமயலறை ,குளியலறை ,எல்லாமே இவர்களுக்கு சமயம் கிடத்தால் சயன அறையே.......
முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால் செப்போது இளமுளையாருடன் சேரவும் சீவன் விடும் அப்போது கண்கலக்கப்படவும் வைத்தாய் அய்யனே எப்போதுனைகானவல்லேன் திருக்காளத்தி ஈஸ்வரனே “” என்று ஒரு கட்டத்தில் சயன சுகத்தை வெறுத்து ஆன்மீக நாட்டம் கொள்ளுவதர்க்கும் கிரகங்களே காரணம்....சில சமயம் மனைவியும் காரணமாவதும் உண்டு..... கைப்பிடி நாயகன் தூங்கயிலேயவன் கையெடுத்துப்புரம் தன்னில் அசயாமல் முன்வைத்த அயல்வளவில் ஒப்புடன் சென்று துயில்னீத்து பின் வந்துறங்குவாளை எப்படி நான் நம்புவேன் இறைவா “” என்று புலம்ம்புவதர்க்கு காரணமும் கிரக லீலைகளே!.... ””செப்பளவு கொங்கை சேயிலையாரை திரட்டிவந்தவள் முப்பொழுதென்னும் முகத்தோடு முகம் சேர்த்து முத்தமிட்டு அந்த கொப்புழம் தொட்டுக்காம குளத்தினில் மூழ்கி குளிப்பதைவிட அந்த அப்பனை பாடி துதிப்பதில் ஆனந்தமில்லையடாவென்று “” சிருங்காரச்சதகம் பாடி திரிவதர்க்கு காரணமும் கிரகங்களே....
ஆகவே திருமனப்பொருத்தம் பார்க்கும் அன்பர்கள் 1,3,4,7,12, ஆகிய ஐந்து ஸ்தான ஸ்தானாதிபதிகலின் பொருத்தத்தையும் கணித்து ஒரு நல்ல மகிழ்ச்சியான குடும்பம் அமைய வழிகோலுங்கள்.....தினம் கணம் யோனி ராசி ரஜ்ஜீ போன்ற முக்கிய பொருத்தங்களோடு ஆன் பெண் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம் போடும் லக்கின வீர்ய சுக களத்திர சயன கிரக நிலைகளையும் சோதித்து பொறுத்துபவனே நல்ல ஜோதிடன். திருமனத்திர்க்கு பின் ஒரு ஆனோ ஒரு பெண்னோ கலவியிண்பம் பெறமுடியாமல் துன்புற்றால் அதில் ஒரு பங்கு பாவம் ஜோதிடனையும் சேரும்

No comments:

Post a Comment