jaga flash news

Tuesday 30 June 2015

திருஷ்டி பொம்மை

திருஷ்டி பொம்மை
-----------------------------------
புதிதாக வீடு கட்டுபவர்கள் ,வீட்டின் முகப்பில் பூசணிக்காயில் திருஷ்டி பொம்மை படம் வரைந்து வைத்திருப்பார்கள். தெருவில் போவோர் வருவோர் எல்லாம் புது வீட்டை பார்த்துக்கொண்டு போவார்கள். பெரும்பாலானர்வர்கள் ஒரு ஏக்க பெருமுச்சு , பொறாமை உணர்ச்சியுடன் வீட்டை பார்ப்பார்கள், அந்த பார்வை வீட்டிற்கும், வீட்டு உரிமையாளருக்கும் பாதிப்பை தரும். ஒரு வினோதமான பொருளை வீட்டின் முகப்பில் வைத்தால் எல்லோருடைய பார்வையும் வீட்டின் மீது விழாமல் அந்த வினோத பொருளின் மீது விழும். இதன் மூலம் வீடும், வீட்டின் உரிமையாளரும் தீய பார்வையிலிருந்து தப்புவர். கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி. பூசணிக்காய்க்கு தீய பார்வையிலிருந்து வரும் கெட்ட அதிர்வுகளை கவர்ந்து தனக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு.

No comments:

Post a Comment