jaga flash news

Tuesday 30 June 2015

புத்திர பாக்கியம் தரும் அரச மரம்

புத்திர பாக்கியம் தரும் அரச மரம்

அரச மரத்தை வழிபடும் வழக்கம் இந்துக்களிடையே பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே அரச மர வழிபாடு இருந்ததாக கருதப்படுகிறது. அரச மரத்தின் கீழ் அமர்ந்துதான் புத்தர் ஞானமடைந்ததாக கூறப்படுகிறது. எனவே அரச மரத்தை போதிமரம் எனவும் குறிப்பிடுவர். இந்துக்களும்,பௌத்த மதத்தினரும் அரச மரத்தை புனிதமாக கருதுகின்றனர்.
மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார். அரசமரத்தடியில் விஷ்னு பகவான் பிறந்ததாகவும், அசுரர்களிடம் தேவர்கள் தோற்றுப்போன நேரத்தில் விஷ்னு பகவான் அரசமரத்திற்குள் ஒழிந்திருந்ததாகவும்,கிருஷ்ணர் அரச மரத்தடியில் இறந்ததாகவும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச மரத்தை வெட்டுவது பிரம்மஹத்தி தோசத்திற்கு சமமானது என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. ஹோமங்களில் அரசமர குச்சிகளை சமிதாக பயன்படுத்துவர். ஹோமாதி காரியங்களைத்தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அரசமரத்தை வெட்டக்கூடாது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தை குழந்தையாக பாவிக்க வேண்டும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.
ஜோதிடத்தில் குரு கிரகத்தை புத்திர காரகன் என குறிப்பிடுவர். பூசம் நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் குருவாகும். பூசம் நட்சத்திரத்திற்குரிய விருட்சம்(மரம்) அரசமரமாகும். அதாவது அரச மரத்தில் குரு கிரகத்தின் ஆற்றல் அதிகபட்சமாக உள்ளது. எனவே அரச மரத்தை பெண்கள் சுற்றிவந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல, அது உண்மையே. அரசமரத்தை சுற்றுவதால் பெண்களின் கருப்பை சம்பந்தமான கோளாருகள் நீங்குவதாக கூறப்படுகிறது.
நாம் சுவாசிக்கும் காற்றுக்கு பிராண வாயு என்று பெயர். பிராண வாயுவை அதிக பட்சமாக வெளியிடும் மரம் அரசமரமே. பிராண வாயு இல்லாமல் யாரும் உயிரோடு இருக்க முடியாது. நாடி ஜோதிடத்தில் குரு கிரகத்தை ஜீவக்காரகன் என குறிப்பிடுவர். ஜீவன் என்றால் உயிர் என்று பொருள். அரசமரத்தை சுற்றும்போது பிராண வாயு அதிக அளவில் கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆயுள் அதிகரிக்கும்.
ஜோதிடத்தில் குரு கிரகத்தை புண்ணியக்காரகன் என குறிப்பிடுவர். குரு கிரகம் உச்சமடையும் அரச மரத்தை நட்டு வளர்த்து வந்தால் பல தலைமுறைகளுக்குஅந்த புண்ணியம் போய்சேரும். அரசமரத்தை வெட்டுபவன் தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் இழப்பான், அவன் சந்ததிகள் அழிந்து போகும்.
சூரிய சக்தியை அதிக அளவில் சேமித்து வைக்கும் மரம் அரசமரமாகும். சூரியனின் ஆற்றலும், குரு கிரகத்தின் ஆற்றலும் ஒன்றிணைவதால் தான் உலகத்தில் உயினங்கள் தோன்றுவதாக அறிவியலார் குறிப்பிடுகின்றனர். குரு,சூரிய சேர்க்கையை சிரஞ்சீவி யோகமென நாடி ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. குரு ஆற்றலும்,சூரிய ஆற்றலும் ஒருங்கே நிரம்பி வழியும் மரம் அரசமரம்,எனவே அது ஒரு ஜீவ விருட்சமாகும். அந்த ஜீவ விருட்சத்தை சுற்றுவதால் உடலில் ஜீவ ஆற்றல் அதிகரிக்கும். உடலில் ஜீவ ஆற்றல் அதிகமாக இருந்தால் மனம் தெளிவடையும். எண்ணியவை எல்லாம் எளிதில் நிறைவேறும். அரச மரத்தடியில் அமர்ந்து அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதில் கைகூடும்.

No comments:

Post a Comment