jaga flash news

Wednesday 19 December 2012

புனர்பூ தோஷம்


 புனர்பூ தோஷம்


 புனர்பூ தோஷத்தைப்பற்றி பார்க்கலாம். திருமண நிகழ்ச்சியில் இன்றைய காலத்தில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்துவது இந்த புனர்பூ தோஷம்.
புனர்பூ என்றால் என்ன ?
நீங்கள் பார்த்து இருக்கலாம் இருவீட்டிலும் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருப்பார்கள் நடத்திக்கொண்டு இருக்கும் போது திடிர் என்று திருமண பேச்சு முறிந்து விடும். சில பேருக்கு நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்திருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் நிச்சயதார்த்துடன் முடிந்துவிடும். சில பேருக்கு இந்த விசயத்தில் பெரிய பிரச்சினையை உருவாகி கோர்ட் கேஷ் என்று அழைந்துக்கொண்டுருப்பார்கள். இது எல்லாம் புனர்பூ தோஷத்தால் உருவாகிறது.
சனியும் சந்திரனும் சேர்ந்து செய்கிற வேலை புனர்பூ தோஷம் உருவாகிறது. சனியும் சந்திரனும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அல்லது சனியின் பார்வையில் சந்திரன் இருப்பது அல்லது இருவரும் ஒரு அதிபதி நட்சத்திரத்தில் பயணிப்பது இதனால் புனர்பூ தோஷம் உருவாகிறது.
இதனால் பல பிரச்சினையை சந்திக்கிறார்கள் கடந்த வாரம் ஒரு வாடிக்கையாளரின் பையனுக்கு திருமண ஏற்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்தார்கள் கடைசியில் இரண்டு லட்சம் அபராதம் கட்டிவிட்டு பிரச்சினையை முடித்து இருக்கிறார்கள்.
எதனால் இந்த தோஷம் ஏற்படுகிறது?
என்ன வழக்கம் போல பூர்ம ஜென்மத்தில் பிரச்சினையால் வந்தது என்று சொல்லவேண்டியது  நமது வேலை.
செல்போன் வந்த பிறகு இந்த தோஷம் நல்ல வேலை செய்கிறது நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இருவரும் செல் நெம்பரை பரிமாறிக்கொண்டு பேசிக்கொள்வது. இந்த காலத்தில் இது சகசம் என்றாலும் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை சண்டையாக மாற்றுவது இந்த புனர்பு தோஷத்தின் வேலை. இருவரும் சண்டையிட்டுக்கொண்டு நிச்சயதார்த்தவுடன் நின்றுவிடுகிறது.
பரிகாரம்
சோதிடத்தை பார்த்தாலே நாம் பரிகாரத்தை சொல்லிவிடவேண்டியது நமது கடமையாக இருப்பதால் நமது கடமையை சொல்லிவிடுவோம். குலதெய்வ வழிபாடு நல்லது செய்யும் அல்லது ராமேஸ்வரம் சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மை செய்யும்.
நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் செல்போனில் பேசும் போது கொஞ்சம் பொறுமையாக பேசவும் வாழ்க்கையில் நிறைய பேசவேண்டியிருப்பதால் திருமணத்திற்க்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து குறைவாக பேசவும்.இதில் கூட பிரச்சினை எழுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது பேசவே மாட்டேகிறார் என்னை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் அதனால் திருமணம் வேண்டாம் என்று சொல்வார்கள் அதனால் பேசுங்கள் பேசும்போது தவறியும் உண்மையை பேசிவிடாதீர்கள். உண்மையை பேசினால் எப்படி மாப்பு இப்படி திறந்த புத்தகமாக இருக்கிறீர்கள் என்று உங்களை விட்டுச்செல்ல உங்கள் வருங்கால துணைவர் முடிவு செய்வார். இந்த தோஷத்தை முடிந்தளவு தவிர்ப்பதற்க்கு இந்த வழி ஒன்று தான் உங்களுக்கு வழி செய்யும்.

No comments:

Post a Comment