jaga flash news

Thursday 13 June 2013

பஞ்சாங்கம் சொல்லும் சில பொதுவான குறிப்புக்கள் :

பஞ்சாங்கம் சொல்லும் சில பொதுவான குறிப்புக்கள் :


1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)

2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பைபில்வம்கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தைவெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3. விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.

6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோலசிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.

8. துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

10. வாடிப்போனஅழுகிப்போனபூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்துமீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம்துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

13. தாமரைநீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.

14. வாசனை இல்லாதது: முடிபுழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டதுநுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

15. சம்பக மொக்குத் தவிரவேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

17. முல்லைகிளுவைநொச்சிவில்வம்விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

18. துளசிமுகிழ் (மகிழம்) செண்பகம்தாமரைவில்வம்செங்கழுநீர்மருக்கொழுந்துமருதாணிதர்பம்அருகுநாயுரவிவிஷ்ணுக்ராந்திநெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.

19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம்மாதுளைஎலுமிச்சைபுலியம்பழம்கொய்யாவாழைநெல்லிஇலந்தைமாம்பழம்பலாப்பழம்.

20. திருவிழாக் காலத்திலும்வீதிவலம் வரும் போதும்பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும்மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

21. அபிஷேகம்ஆடை அணிவிப்பதுசந்தன அலங்காரம்நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துகுடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் 
சேர்க்கக் கூடாது.

24. கோயில்களில்பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

25. பூஜையின் துவக்கத்திலும்கணபதி பூஜையின் போதும்தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா

26. ஒன்றுமூன்றுஐந்துஒன்பதுபதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.

பொதுவான கடமைகள்

1. வாரத்துக்கு ஒரு நாளேனும்குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

2. தியானம் பழக வேண்டும்.

3. பஜனைசத்சங்கம்கதாகாலட்சேபம்சமயப் பேருரை நிகச்சிகளுக்குச் செல்ல வேண்டும்.

4. துறவிகள்ஞானிகள்மாடாதிபதிகளைத் தரிசனம் செய்ய வேண்டும்.

5. வீட்டில்நாம சங்கீர்த்தனம்சிறப்பு வழிபாடு போன்றவற்றைஅண்டை அயலார்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்த வேண்டும்.

6. வீட்டில் ஓம் படம் மாட்டி வைக்கவும்.

7. இந்து தர்ம பிரசார இயக்கங்கள் பத்திரிகைகளுக்கு ஆதரவு அளிக்கவும்.

8. புராணஇதிஹாஸதேவாரதிவ்யபிரபந்த நூல்கள் கட்டாயமாக ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டும்.

9. இந்து பண்டிகைகளைவெறும் விழாக்களாகக் கருதாமல் தெய்வங்களோடு ஒட்டுறவு கொள்ளும் தருணங்களாக மதித்துக் கொண்டாட வேண்டும்.

10. அருகிலுள்ள அனாதை இல்லம்முதியோர் இல்லம்கண் பார்வையற்றோர்செவிகேளாதோர் சேவை இல்லங்களுடன் தொடர்பு கொண்டுஇயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

11. பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றிப் பணிந்து பணிவிடை செய்தல் வேண்டும்.

12. வீட்டில்தரக்குறைவான சினிமாப் பாடல்கள் ஒலிக்க அனுமதிக்கக் கூடாது. பாலுணர்வு
வன்முறைபழிக்குப்பழிபேராசை ஆகிய தீய உணர்வுகளைப் பாராட்டும் புதினங்கள் - புத்தகங்களை வாங்கக் கூடாது.

இந்துக்களின் தினசரிக் கடமைகள்:

1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும்.

2. காலையில் எழுந்தவுடனும்நீராடிய பின்னும்உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.

3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறுகுங்குமம்சந்தனம், திருநாமம் - ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.

4. இறைவழிபாட்டுக்கு எனதனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.

5. சமய நூல்களை படித்தல் வேண்டும்.

6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும். 

உலகங்களை உற்பத்தி செய்து பரிபாலித்து வரும் பகவானுடைய அரசாங்கம்தான் மிகப்பெரிய அரசு ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ருக்களும் ஈசுவரனுடைய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆவர். வடக்கில் உள்ள தேவலோகமும் தெற்கில் உள்ள பித்ரு லோகமும் அவர்களுடைய இருப்பிடம் என்று மறைகள் கூறுகின்றன.
இந்த இறைவனது அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள் - தேவர்கடனும்  பிதுர் கடனும்.
நம்மையெல்லாம் காக்கின்ற அவ்வதிகாரிகளின் ஜீவனத்துக்கு என்ன வழி-வகை செய்துள்ளார்ஸர்வேசுவரன்?
நாம் செய்யும் தேவ யக்ஞங்களும் பித்ரு யக்ஞங்களுமே அவர்களை காப்பாற்றுகின்றன.

No comments:

Post a Comment