jaga flash news

Thursday 20 June 2013

மனிதன் நான்கு வகை

மனிதன் நான்கு வகை

ஜோதிடத்திலும் மனிதன் நான்கு வகையில்
ஏதாவ்து ஒன்றில்தான் பிறப்பான். அது அவன்
காலம் முழுவதும் தொடர்ந்து அவன் காலமாவது
வரை மாறாமல் இருக்கும்

ஆமாம் ஜாதகங்கள் நான்கு வகைப்படும். நான்கு
வகையிற்குள் மட்டுமே ஏதாவ்து ஒன்றில் அடங்கி
விடும். எந்தக் கொம்பனாக இருந்தாலும் அந்த
வகையை விட்டு வெளியே வந்து வேறு வகைக்குக்
கட்சி மாறமுடியாது.

அவை என்ன என்கிறீர்களா?

சொல்கிறேன் கேளுங்கள்!

1. தர்ம ஜாதகம்
2. தன ஜாதகம்
3. காம ஜாதகம்
4. ஞான ஜாதகம்
என்பதுதான் அந்த நான்கு ஜாதிகள்!
-----------------------------------------------------
தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு,
5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(First House - Lagna - it is the house of physical strength
Character, Influence and self control over the life
Fifth House- House of Poorva Punya - Keen Intelligence
Ninth House - House of Bhagya (Gains), Father, Ancestral
Properties & Charitable Deeds)
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் பெயரும் புகழோடும்
இருப்பான்,நிறைய தர்ம காரியங்களைச் செய்வான்,
கோவில் குள்ங்களைக் கட்டுவான், பள்ளிக்கூடங்களைக்
கட்டுவான் பல சமூக சேவைகளைச் செய்வான்.
இறந்த பிறகும் அவன் பெயர் பூமியில் நிலைத்து நிற்கும்.
--------------------------------------------------------
தன ஜாதகம் என்பது Birth Chartல் 2ம் வீடு,
6ம் வீடு, 10ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Second house is the house of finance,
Sixth house is the house of servants
10th House is the house of profession / Business
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் நிறைய
சம்பாதிப்பான், பணம் சேர்ப்பான், அபரிதமான
செல்வம் சேரும் - ஆனால் அவன் அதை
enjoy பண்ண மாட்டான்.He will earn money,
accumulate the money and leave the wealth to
someone, either it may be his children, relatives
or friends who will enjoy it
--------------------------------------------------------
காம ஜாதகம் என்பது Birth Chartல் 3ம் வீடு,
7ம் வீடு, 11ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Third House is the house of courage,
Seventh house is the house of women
Eleventh house is the house of fortune)
இந்த ஜாதகன்தான் உலகில் எல்லாவற்ரையும்
அனுபவிக்கப் பிறந்தவன். அவனுடைய பண்மோ,
அல்லது அவன் தந்தை வைத்துவிட்டுப்போன
பணமோ, அல்லது மாமனாரிடம் கொள்ளையாகக்
கிடைதத் பணமோ அல்லது நண்பர்களின் பண்மோ
அல்லது கடன் வாங்கி ஏமாற்றிய பணமோ அது
எதுவாக இருந்தாலும் அலட்சியமாக செலவுசெய்து
வாழ்க்கையின் எல்லா சிற்றின்பங்கள், பேரின்பங்கள்
என்று இன்பமாக அனுபவித்துவிட்டுப் போகக்
கூடியவன் இவன்தான்
---------------------------------------------------
ஞான ஜாதகம் என்பது Birth Chartல் 4ம் வீடு,
8ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகள் பலமாக
உள்ள ஜாதகம்
(4th House is the house of Comforts-சுக ஸ்தானம்
8th House is the house of difficulties and 12th house
is the house of Losses -
 விரைய ஸ்தானம்
வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழ்ந்து,
எல்லா கஷ்டங்களையும் பட்டுப் பரிதவித்து
சொத்துக்கள், கையிலிருந்த் காசு பணத்தையெல்லாம்
பரிகொடுத்து, அல்லது ஏமாந்துவிட்டுக் கடைசியில்
ஞானியாகி அல்லது நடு வயசிலேயே ஞானியாகி
"உலகே மாயம் - வாழ்வே மாயம்" என்று தத்துவம்
பேசும் நிலைக்கு வந்துவிடக்கூடிய ஞானி இந்த ஜாதகன்
இதே ஒன்று முதல் பன்னிரெண்டு வீடுகளுக்கும்
வேறு பணிகளும் உண்டு. மொத்தம் 12 x 3 = 36
பணிகள் உள்ளன. இவ்ற்றில் ஒரு ஜாதகனுக்கு
18 மட்டுமே இருக்கும் மீதி 18 இருக்காது. அதுதான்
அமைப்பு.

No comments:

Post a Comment