jaga flash news

Saturday 23 January 2016

முருகன் தலைமைச் சித்தர்

தமிழ் கடவுள் முருகன் தலைமைச் சித்தர்
ஒரு வேதாந்த ரகசியமே ...........
---------------------------------------------
------------------
சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை
பற்றிய வித்தியாசமான ஆய்வு ...... வாசித்து
பாருங்கள் .... வியந்து போவீர்கள் .......
ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க்
கடவுள் என்ற சிறப்பு உண்டு.
வயதாகும் நிலையை அதாவது Aging Process
-ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக
நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத
உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற
பெருமையும் இவருக்கு உண்டு.
’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை
வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்;
காலனையும் வெல்லலாம்; கடவுளையும்
காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை
வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற
சிறப்புப் பெயரும் உண்டு.
மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது;
சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல்
தன்னை வேறொரு பரிமாணத்திற்கு
மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க
வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை
அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான்
முருகன் பிறவான்;இறவான்...’ என்று அருணகிரி
நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், அவ்வையார்,
அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார உள்ளிட்ட
பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை
பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய
மகான்கள். உலகில் முருகனை அறியாத
தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள்
எந்த நாட்டிலும் இல்லை.
முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல,
மனிதனாக இருந்தவர் மகானாக மாறி
இருக்கிறார்.
"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால்
அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு
மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ்
பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என
முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர்
பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய
நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும்
அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு
என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .
அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம்
சுழுமுனை என்றால் என்ன என்பதினை
தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு
கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக்
காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள
ஒரு மைய நரம்பு. நமது உடலில்
இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள்
எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம்,
கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம்,
கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச்
சொல்லலாம் இவை உடலின் இடது
புறமாகவும் வலது புறமாகவும் ஒரு
மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து
உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது
ஆகும்.
இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது
உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக
இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள்
எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது
உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து
பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால்
இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை
என்பதாகும். இந்த சுழுமுனை
புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து
பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்
பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும்
அர்ஸ் எனவும் ழைப்பர்.மருத்துவர்களின்
லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால்
இது எளிதாக புரியும்.
முருகன் கையிலுள்ள வேலும் இந்த
சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு
நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள
தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும்
சுழுமுனை கோடாகவும் உள்ளது.
மருத்துவர்களின் லோகோவில் இடது
புறமாகவும் வலது புறமாகவும்
சுழுமுனையைப் பின்னிப் பினைந்து
செல்பவை நமது அவயங்கள். வலது புறம்
இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது
இடகலை.
இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள்
சொல்லுகிறார்.
"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள
அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை
அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல
இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி
சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழு
முனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான்.
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன்
உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான்.
இதையே கந்த குரு கவசத்தில் இப்படி
சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்
"உள்ளொளியாய் இருந்து உன்னில்
அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக்
காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து
கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு
வரவில்லையே என திட்ட வேண்டாம்.
ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே
முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்
வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி
தெய்வானை.
ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.
ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை
தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால்
இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய
ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று
கடவுள் ஒருவரே
அவர் எவராலும் பெறப்படவும் இல்லை
அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.
எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு
மனைவியர் இரண்டு என்பது
இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு
வேதாந்த ரகசியமே தவிர
வேறொன்றும் இல்லை.
முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை
சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன்
ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி
கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையன
சத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்கு
கடவுள் முருகன் என்றார் . எமது உடலில்
இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு
இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த
சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால்
உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான்
படைப்பு உருவாகும் . ஒரு மொழிக்கு ஓசை
கொடுப்பதை என்றால் உலக அறிவான
தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே
ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித
ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே
என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும்
அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையக
அதன் அர்த்தம் கருத்து தெரியத வெறும்
ஓசையகவே உணர்வோம். எனவே
ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை
பிள்ளையார் என்று அழைத்தார் அகத்தியர் &
இராவணன் போன்ற மகாண்கள். சிவன்
அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த
அதந்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து
இருக்கும் சிவனை சிவசத்தியன
சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல்
தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க
பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர்
கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது
முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல்
இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal
இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு
இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது
இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள் .
இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில்
இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும்
சொல்கிளார்கள் சிவன் மனித உடலில்
தலையில் உருவாக்கி இருப்பது தான்
செவ்வேல் இதை முருகனுக்கு சூரனை அழிக்க
சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியமை
இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல்
மனித மூளையில் உள்ள செவ்வேலை
பயன்படுத்தி அறியமை என்ற சூரனை வதம்
செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு

No comments:

Post a Comment