jaga flash news

Wednesday 13 January 2016

முக்கிய இந்து திருநாட்கள்

முக்கிய இந்து திருநாட்கள்
தைப்பொங்கல் - தை 1 (ஜனவரி 15, 2016)
மாட்டுப் பொங்கல் - தை 2 (ஜனவரி 16, 2016)
காணும் பொங்கல் - தை 3 (ஜனவரி 17, 2016)
தைப்பூசம் - தை 10 (ஜனவரி 24, 2016)
மாசி மகம் - மாசி 10 (பிப்ரவரி 22, 2016)
மகா சிவராத்திரி - மாசி 24 (மார்ச் 7, 2016)
பங்குனி உத்திரம் - பங்குனி 10 (மார்ச் 23, 2016)
யுகாதி பண்டிகை - பங்குனி 26 (ஏப்ரல் 8, 2016)
தமிழ்ப் புத்தாண்டு - சித்திரை 1 (ஏப்ரல் 14, 2016)
ஸ்ரீ ராம நவமி - சித்திரை 2 (ஏப்ரல் 15, 2016)
சித்திரா பௌர்ணமி - சித்திரை 9 (ஏப்ரல் 22, 2016)
அட்சய திரிதியை - சித்திரை 26 (மே 9, 2016)
வைகாசி விசாகம் - வைகாசி 8 (மே 21, 2016)
ஆடி ஆரம்பம் - ஆடி 1 (ஜூலை 16, 2016)
குரு பௌர்ணமி - ஆடி 4 (ஜூலை 19, 2016)
ஆடிப் பெருக்கு/ஆடி அமாவாசை - ஆடி 18 (ஆகஸ்டு 2, 2016)
ஆடிப் பூரம் - ஆடி 21 (ஆகஸ்டு 5, 2016)
வரலட்சுமி விரதம் - ஆடி 28 (ஆகஸ்டு 12, 2016)
ஆடி முடிவு - ஆடி 32 (ஆகஸ்டு 16, 2016)
ஆவணி அவிட்டம் - ஆவணி 2 (ஆகஸ்டு 18, 2016)
மஹா சங்கடஹர சதுர்த்தி - ஆவணி 5 (ஆகஸ்டு 21, 2016)
கோகுலாஷ்டமி/ கிருஷ்ண ஜன்மாஷ்டமி - ஆவணி 9 (ஆகஸ்டு 25, 2016)
விநாயகர் சதுர்த்தி - ஆவணி 20 (செப்டம்பர் 5, 2016)
ஓனம் பண்டிகை - ஆவணி 29 (செப்டம்பர் 14, 2016)
புரட்டாசி ஆரம்பம் - புரட்டாசி 1 (செப்டம்பர் 17, 2016)
மஹாளய அமாவாசை - புரட்டாசி 14 (செப்டம்பர் 30, 2016)
நவராத்திரி ஆரம்பம் - புரட்டாசி 15 (அக்டோபர் 1, 2016)
ஆயுத பூஜை/சரஸ்வதி பூஜை - புரட்டாசி 24 (அக்டோபர் 10, 2016)
விஜயதசமி - புரட்டாசி 25 (அக்டோபர் 11, 2016)
புரட்டாசி முடிவு - புரட்டாசி 30 (அக்டோபர் 16, 2016)
தீபாவளி திருநாள் - ஐப்பசி 13 (அக்டோபர் 29, 2016)
சூரசம்ஹாரம் - ஐப்பசி 20 (நவம்பர் 5, 2016)
திருக்கார்த்திகை - கார்த்திகை 27 (டிசம்பர் 12, 2016)
மார்கழி ஆரம்பம் - மார்கழி 1 (டிசம்பர் 16, 2016)

1 comment:

  1. அய்யா வெ.சாமி அவர்களே! 2019ஆம் வருடத்திய மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடினேன். பொன்னாக்குடி சிவபெருமான் சந்நிதானத்தில் மூலஸ்தானத்தில் அமர்ந்து, விடிய விடிய தேவாரம்,& 12 திருமுறை பாடினேன். அதில் 7மட்டும் சிவபெருமானைப் பற்றிய பாடல்கள் இருந்தன. அநேக வருடங்களுக்குள் இருந்த என் ஏக்கத்தைப் போக்கிக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். நாலு கால பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு முடிந்தது. எல்லா பிரசாதமும் வழங்கப்பட்டதாக சொன்னார்கள். நான் அதில் கலந்து கொள்ளவில்லை. அதிகாலை தயிர்சாதத்தோடு விரதத்தை முடித்தேன். முழு உற்சாகமாக இருந்தன. சிவபெருமானை உறங்கச் செய்த நிகழ்ச்சி மிக அற்புதம். சண்டிகேஸ்வரரைப்பற்றி, அய்யா முகநூலில் படித்தது எவ்வளவு உபயோகமாக இருந்தது. அவரைப்பற்றி தெரியாதவர்களிடம் கூறினேன். ஒரு அம்மா எனக்கு தெரியாது என்று, சண்டிகேஸ்வரரை கை தட்டி வணங்குங்கள் வாங்கள் என்றார்கள், அப்போது சண்டிகேஸ்வரரைப் பற்றிய கதையைக் கூறினேன். அனைவருக்கும் ஆச்சரியம். கதையை மிகவும் ரசித்துவிட்டு, அதன்படி கைதட்டாமல் வணங்கினார்கள். எனக்கு நான் தங்கள் முகநூலில் படித்து தெரிந்து கொண்டதில் ஒரு ஆத்ம திருப்தி. காரணம், கற்க கசடற கற்பவை கற்றபின் − நிற்க அதற்கு தக. என்ற திருக்குறளின் பெருமையை அன்று அறிந்து கொண்டேன். வணக்கம் ஐயா.

    ReplyDelete