jaga flash news

Saturday 23 January 2016

புருவ முடி திருத்துதல் (THREADING)

புருவ முடி திருத்துதல் (THREADING)
செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்!
இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள்
அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள்
ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.
இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல்
என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே
அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர்
பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப்
பதிவு!!!!
புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)
(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக்
குறைத்துக் கொள்கிறார்கள்.
புருவமுடிகள்
என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு
நெருங்கி வரும் பொழுது புருவமுடிகள்
தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல்
பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ
முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.
இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது
( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச்
சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி
வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம்
(அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி
வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி
பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க
வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி
வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம்,
சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற
கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில்,
பாதிப்புக்கள் நேர்கின்றன.
இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர
்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய
வாய்ப்பேயில்லை.
இதனால் பெண்களின் பிராண சக்தி
குறைகின்றது. விளைவு குறைவான பிராண
சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி
குன்றிய குழந்தைகளையும் பெற்று,
ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே
வித்திட்டு விடுகின்றனர்.
இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும்
நோய்களுக்கும் காரணம் ஆகின்றன.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின்
காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது
கூடாது.மேலும் உடலின் முக்கிய
சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில்
ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை
வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி
வைத்துக் கொள்வது போல ஆகும்.
இறைவன் உறையும் இடம் இதுவே!!!! இதை
உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்க
ு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான
விளக் கெண்ணையை கண் புருவங்களில்
தீட்டுவ தானாலும், கண்ணில்இட்டு
வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து,
நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள்,
நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால்
இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல்
ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .

No comments:

Post a Comment