jaga flash news

Friday 16 November 2012

ஏலக்காய்


ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடி க் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக்குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்க ள்: எலெட்டாரியா (Elettari a), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந் த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய் கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனா ல் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ள வை.
மேலும் வாசனைப்பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய்அசைவ உணவுகளுக்கு கூடுத ல் சுவை சேர்க்கக்கூடியது.
ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவி யாகும் எண்ணெய்களான போர்னியோ ல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரி யோ பில்லென், கார்வோன், யூகேலிப் டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற் றின் கார ணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…
ஏலக்காயில் உள்ள‍ மருத்துவக்குணங்கள்
@ குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கி ல் மூன்றுவேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.@ ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழ ந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந் து ஏலக்காய்களை நெருப்பில் போ ட்டு, அந்தப் புகையை குழந்தைக ள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.
@ மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால்இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிக மாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமை யான நறுமணத் தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடி ப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுப விப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
@ நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுத ல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச் சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதி கமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.
@ வெயிலில் அதிகம் அலைந்தால் தலை சுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான் கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட் டு, கஷாயமாக க்காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமு ம் மாயமாய் மறைந் துவிடும்.
* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண் ணீரில் நன்கு காய் ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இக்கஷாயத் தைக்குடித்தாலே போதும்.
*வாய்வுத் தொல்லையால் அவ திப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அப் பொடியில் 1/2 டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொ ள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வு த் தொல்லை உடனே நீங்கிவிடும்.
* ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க் க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப் பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
* நெல்லிக்காய்ச்சாறில் ஒருசிட்டிகை ஏலக்காய்த் தூளைச்சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேக வெட்டை நோய்க்கு இது அருமருந்தாகு ம். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்ப டும் எரிச்சலும் குணமாகும்.
* ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந் து சாப்பிட் டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக் கும். ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கல ந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதி கரிக்கும்.
* பாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழ ந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த் தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடுகள்:
மிகையான உற்பத்தியை இந்தியத் துணைக்கண்டம் அண்மைவரைதக்க வைத்திருந்தாலும், ஏலக்கா ய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை குவாத்தமாலா (Guatemala)விடம் இழந்துள்ளது. இந்தியா வில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர் நாடகாவிலும் மீதம் தமிழ்நாட்டிலும் உற்பத் தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் நாடு கள்,
குவாத்தமாலா, தன்சானியா, இல ங்கை, எல்சல்வடோர், வியட்நாம், லாவோசு, கம்போடியா, பப்புவா நியூகினியா, தாய்லாந்து, ஹொண் டுராஸ், நேபாளம், பூட்டான்

1 comment: