jaga flash news

Friday 30 November 2012

புத்தாண்டு பலன்கள்: மீனம்


மீன ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் மீனம் ராசி 2013 | Meena rasi 2013
2013 மீன ராசி
2013 மீன ராசி
புத்தாண்டு பலன்கள்:
    மீனம்:
 பூரட்டாதி(4),உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
              [சாதகமான காலம்:-- குருவின் வக்கிர சஞ்சார காலமான ஆண்டின் துவக்கம் முதல் அதாவது 1.1.2013 முதல் 30.1.2013 வரையும் குருவின் 4-மிட சஞ்சாரமான 27. 5.2013 வரையும் .
           சாதகமற்ற காலம்:--குருவின் 3-மிட சஞ்சார காலமான 31.1.2013 முதல் 26.5.2013 வரையும் ஆண்டின் இறுதியான 8.11.2013  முதல் ஆண்டின் இறுதிவரையும்.  மற்றும் சனி,ராகு மற்றும் கேது சஞ்சாரங்கள் சாதகமில்லை. ]
                           இந்த ஆண்டு தொடங்குமுன்பே, சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-மிடத்தில் சஞ்சரிக்கிறார்.  குரு பகவான் ஆண்டின் முற்பாதியில் அதாவது மே மாதம் 26-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின்  அதாவது மே மாதம் 27-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள்  ராசிக்கு 8, 2 -ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
                 ஆண்டின் துவக்கமான 1.1.2013 முதல் 30.1.2013 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்தபடி வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.  கிரக நிலவரங்கள் சாதகமான இடங்களில் காணப்பட்டு வருவதால், வருஷ ஆரம்பமே மிக மிக சிறப்பாகவும் யோகமாகவும் காணப்பட்டு வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள் ,மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைகள் தாமதங்கள் அனைத்தும் விலகிவிடும். சுப நிகழ்ச்சிகள் நடக்கறதுக்கும் வாய்ப்பு உள்ளது. தொட்டது துலங்கும். நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். இதுவரை இருந்துவந்த பணக்கஷ்டம், மனக் கஷ்டம் இரண்டுமே  நீங்கிவிடும். உங்களது உடல்நலத்தில் இருந்துவந்த தொந்தரவுகள் நிவர்த்தியாகி நல்ல ஆரோக்கியம் காணப்படும். உங்களது நீண்ட நாளைய முயற்சிகளுக்குக்க்கூட இப்போது பலன் கிடைக்கும். ஒரு புதிய முயற்சியில் இறங்கி வெற்றியடைய முடியும். வேலை இல்லாதவர்களுக்கு இப்போது உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் இப்போது புதிய தொழில் ,வியாபாரம் தொடங்கலாம். வரவேண்டிய பணம் உடனடியாக கைக்கு வரும்.
                                   இனி வக்கிர நிவர்த்தியாகும்  குரு 31.1.2013 முதல் 26.5. 2013 வரை  உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனை  சாதகமற்ற சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. குடும்பத்திற்காக  நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை நம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும்  உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக  தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நலம் குறையும் . முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள்  தங்கள்  கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள் விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சி மேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக  உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின்  கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன்  வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
                சனி, ராகு மற்றும் கேதுவின்  சஞ்சாரங்களும் சாதகமாக இல்லை . இனி  பலன்களைப் பார்க்கலாம்.  பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக் கொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன்  காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். சிலருக்கு உயிர் பற்றிய பயமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும். இதைப் படிக்கும்போது பயப்பட வேண்டாம். இதற்குரிய பலன் இது என்று சொல்லவேண்டியதாகிறது. கூறப்படும் பலன்கள் பிறந்த ஜாதகத்தின்ப் பொறுத்தும், திசா புத்திப் பலன்களைப் பொறுத்துமே அமையும். உங்களை பக்குவப்படுத்திக்கொண்டு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு சரியான பரிகார முறைகளை மேற்கொண்டால்கெட்ட நேரமானாலும்கூட வெற்றிக்கொள்ள முடியும்.
                     இந்த் சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம் உண்டாகும். . கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு  நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள்  ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.
                               புத்திரர்கள் சம்பந்தமான நற்காரியங்கள் சிறிது தாமதமாக நடந்தேறும். அஷ்டம சனி உறவினர்களிடையே பகையை வளர்க்கும். சம்பந்திகளிடையே தேவையற்ற மனத்தாங்கல்கள் வரும். திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் பல விஷயங்களில் மனக்கஷ்டம் உண்டாகலாம். கணவன் அல்லது மனைவி வகையில் அடிக்கடி பிரிவு வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கிரக நிலைகளை அனுசரித்து நடந்துகொண்டால், விதியை மதியால் வெல்லலாம். நிலம், வீடு வாங்கும் விஷயங்களை தள்ளிப்போடுவது ந்ல்லது. கடன், நோய் ஏற்படும். உங்களுக்கு சொந்தமான மூதாதையர் நிலங்கள் உறவினர்களிடம் பறிபோக உள்ளது. ஆரோக்கியக் குறை ஏற்படலாம். சனிக்கு குரு பார்வை கிடைப்பதால், பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும். புத்திரர்களுக்கான சுபச் செலவுகளை மேற்கொள்வீர்கள்.  கடன் வாங்கி கடன்காரனாகவும் ஆவீர்கள். நகையை அடகு வைத்து கஷ்டப்பட்ட நீங்கள் இப்போது மனைவி பிள்ளைகளுக்கு தேவையான நகைகளையும் ஆடை ஆபரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி, கிரண்டர் போன்றவைகளையும் வாங்குவீர்கள்.
                        ஆண்டின் பிற்பகுதியில் மே மாதம்  27-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்துகொண்டு, உங்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறார்.  சாதாரணமாகப் பார்த்தோமானால், 4-மிடத்தில் குரு நற்பலன்களை வழங்குவதில்லை. ஆனால் , தற்போது இந்த சஞ்சாரத்தில் ஏனைய கிரக சஞ்சாரங்களாலும், குரு பார்வையினாலும் இந்த சஞ்சாரத்தில் உங்களுக்கு நற்பலன்களை வழங்கப் போகிறார். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் நன்மை உண்டு. அலைச்சல்கள் குறையும். நல்ல உடை மற்றும் அணிகலன்களை அணிந்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும், புத்தி சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும். மனோபலம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள்  கிடைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதுடன், புதிதாக ஆபரணங்களும் வாங்குவீர்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். தவறிப்போன் குலதெய்வ வழிபாடு இப்போது நடைபெறும். சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுவார்கள். கோவில் தர்மகர்த்தா பதவி கிடைக்கும். பெரியோர் ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். மூத்த சகோதரர் தேவையான உதவிகள் செய்வார்கள். இந்த சமயத்தில் இளைய சகோதரர்களும் உதவியாக இருப்பார்கள். இளைய சகோதரர்கள் மேன்மையடைவார்கள். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது திறமை, இப்போது வெளி உலகுக்குத் தெரிய வரும். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள்கூட உங்களுக்கு சாதகமாக முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.  அலுவலகத்தில் உங்களுக்கு வேலைப்பளு குறையும். கூட வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலர் நூதன பொருள்களை விற்பதன்மூலம் எதிபர்பாராத லாபம் அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கும் இது அதிர்ஷ்டமான காலம். இந்த நற்பலன்கள் குருவின் 4-ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நிகழ்ந்து 7.11.2013 வரையில் முடிவடையும்.
                  குரு  நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல்  ஆண்டின் இறுதிவரை , வக்கிரத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள்  ஏற்படும்.  கல்வியில்  சில தடைகள் உண்டாகலாம்.  மருத்துவச் செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள்  அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தொலைதூரங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.  குருவின் வக்கிர பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முக்கிய விஷயங்களை தள்ளிப் போட்டீர்களால் பிரச்சினைகள் குறையும்.
 பரிகாரம்:
ஆண்டு  முற்பகுதியில் குரு  3-ம் இடத்தில் சஞ்சரிப்பது ந்ல்லதல்ல. .தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். சனி அஷ்டமசனியாக வலம் வருவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின்  8-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை  தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். கேதுவ்ன் 2-ம் இடம் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகர் கோவிலுக்குச் சென்று சேவை செய்யவும். கோவிலை சுத்தம் செய்து வணங்கவும் . கொள்ளு தானம் செய்யவும்.
     இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் அமைந்த சாதகமான குரு சஞ்சாரம் உங்களைக் காப்பாற்றும்.
               வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!.

No comments:

Post a Comment