jaga flash news

Sunday 18 November 2012

ஒரு குழந்தையின் ஜாதகம் எப்போது அதன் பெற்றோருக்கு பலன் தரும்?

பொதுவாக கருவில் இருக்கும் போதே (ஏறக்குறைய 100 நாட்களுக்குப் பின்னர்) குழந்தையின் ஜாதகம் பலன்தரத் துவங்கி விடும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஆனால் ஒரு சிலர், குழந்தைக்கு 3 வயது முடிந்த பின்னரே ஜாதகம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும் எனக் கூறுவது உண்டு. குழந்தை பிறந்த நேரம் சரியில்லாமல் இருந்தால், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையிலான பாசப் பிணைப்பு குறைந்துவிடும் என்பதால் அப்படிக் கூறுகின்றனர். 

ஒரு சில பெற்றோர், கரு உருவாகும் சமயத்தில் சாதாரண நிலையில் இருந்தாலும், குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து விடுவர். எனக்குத் தெரிந்த ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை வீட்டில் இருந்த காலத்தில் அவரது மனைவி கர்ப்பம் தரித்தார். 

பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக வீடு திரும்பினர். அவர்கள் முன்பு வசித்த வாடகை வீட்டிற்கு அல்ல... புதிதாக அவர்கள் கட்டிய சொந்த வீட்டிற்கு. இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒரு சில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும். ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேற்கூறியதற்கு நேர்மாறான பலன்கள் உருவாவதும் உண்டு.

பொதுவாக பெற்றோருக்கு நல்ல தசாபுக்தி, அந்தரம் இருக்கும் காலகட்டத்தில் உருவாகும் குழந்தைகள், மிகப்பெரிய யோகம் உள்ளதாகவும், அறிவாளியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கும். ஆனால், பெற்றோருக்கு ஜாதகம் சரியில்லாத நேரத்தில் உருவாகும் குழந்தைகள் நோயாளியாகவும், அதிர்ஷ்டமற்றதாகவும் இருக்கும் என நூல்கள் கூறுகின்ற

குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு பெற்றோரின் ஜாதகமே பெரும்பாலும் காரணமாகி விடுகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கவும் இதுவே காரணம்

1 comment:

  1. குழந்தைகள், வயிற்றில் உருவானவுடன், நல்ல ஊட்டச்சத்துள்ள ஆகாரங்கள், பழங்கள், அதிகம் புத்தகங்கள் வாசித்தல், இசை கேட்பது, நல்ல எண்ணங்கள், மாமிசங்கள் தவிர்த்தல், இதுபோன்ற நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொண்டால், குழந்தைகள் அறிவுள்ளவர்களாகவும், மகிழ்ச்சி உள்ளவர்களாகவும், சுறுசுறுப்பாகவும், குறைவின்றி இருப்பர். மாறாக, குரோத எண்ணத்துடனும், பிறருக்கு தீங்கு செய்யும் எண்ணம் உள்ளவர்களாகவும் இருந்தால், பிறக்கும் குழந்தைகள், நோயினுடனும், ஊனமுடனும் தான் பிறப்பர். இரண்டாவது தாயானவள், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஓய்வெடுத்து, அந்த நேரத்தில் அவர்களின் ஓய்வுக்கு இடைஞ்சல் இல்லாதபடி இருந்தாலும், ஆரோக்கியமாகவும், அறிவுள்ளதாகவும், ஊனமில்லாமலும் பிறப்பர். அந்த காலத்தில் ஒரு பழமொழி கூறுவர். விதை ஒன்று போட்டால், சுரை ஒன்றா முளைக்கும் என்பர். இது எதை உணர்த்துகிறது என்றால், நாம் எதை விதைக்கிறோமோ, அதை தான் அறுவடை செய்யமுடியும். மாறாக, சுரை முளைக்காது என்பதே பொருள். ஆகவே, குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போது, நாம் என்னென்ன செயல் செய்கிறோமோ அதுபோன்று தான், குழந்தைகளின் நலனும் இருக்கும் என்பதே, முற்றிலும் உண்மை.

    ReplyDelete