jaga flash news

Thursday 15 November 2012

ஆயிரம் காலத்துப்பயிர் திருமணம்


ஆயிரம் காலத்துப்பயிர் திருமணம் என்பார்கள். ஆனால், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப்பொருத்தவரை 30 வயதுக்குப் பிற கும், பெண்கள் என்றால் 25 வயது க்குப் பிறகுமே நடைபெறுகிறது.
பள்ளிப்பருவம் முடிந்து, மேல் நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்ல து பொறியியல் – மருத்துவம், முது நிலைப்படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறை ந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே பயிர்செய் என்ற பழ மொழி பலரு க்கு இயலாமல் போய் விடுகிறது.

அதனால், கணவன்–மனைவிக் கு இடையே வயது வித்தியாசம் என்பதும், 4 அல்லது 5 ஆண்டுக ள் என்ற நிலை மாறி சில தம்பதி களுக்கு 10 அல்லது 11 வயது வித்தியாசம் கூட ஏற்பட்டு விடுகி றது. சொந்தங் களில் திருமணம் முடிப்பவர்கள், சகோதரியின் மக ள் அல்லது அத்தை, மாமன் மக ளை திருமணம் முடிப்பது என்பது, சொந்த-பந்தமும், அவர்களின் சொத்துக்களும் வேறு வாரிசுகளுக்கு சென்று விடக் கூடாது என்ற (நல்ல) எண்ணத்தினால்தான்.
அதன் காரணமாகவே பல குடும்பங்களி ல் கணவன்–மனைவிக்கு இடையே வய து வித்தியாசம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். சரி, வயது வித்தியாசத் தால், பாலுறவுப் புணர்ச்சியில் ஏதும் பாதி ப்புகள் ஏற்படுமா? என்றால், 90 விழுக்கா டு இல்லை எனலாம்.
பொதுவாக கணவனைக்காட்டிலும், மனைவிக்கு 5 வயது குறைவா க இருந் தால், முதுமைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க ஏதுவாகும் என்பதாலேயே நம் முன்னோர் இந்த வே று பாட்டை கடைபிடித்து வந்துள்ளனர்.
பெண்களைப் பொருத்தவரை குழந்தைப் பேறு, மாதவிடாய் போன்ற இயற்கையான நிகழ்வுகளால், பொதுவாகவே அவர்கள் 45 வயதை த் தாண்டிய நிலையிலேயே பலவீனம் அடைந்தவர்களா கிறார்கள்.
ஆனால் ஆண்கள் 50 வயதா னாலும்கூட பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி இயற்கையான முதுமைக் காலத்திலேயே பல வீனத்தை உணர்வார்கள்.
அதன் காரணமாகவே இந்த வயது வித்தியாசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில், 10வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொள்தல் என்பது வெகுசாதாரணம் எனலா ம்.
26 அல்லது 27 வயதான பெண், 34 அல்லது 35 வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் எதுவாக் இருந்தாலும், 10 வயது அதிகம் உள்ளவரை திருமணம்செய்து கொள்ளஇயலாது என்று சொல்லி விட முடியாது.
அதில் உள்ள சாதக–பாதகங்களைப் பார்த்தல் அவசியமாகிறது. பாலுறவுக்கும், வயதுக்கும் எவ்வி தத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வே ண்டும். பாலுறவு என்பது மனது டன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள் ளோம்.
எந்த சூழ்நிலையில், பாலுறவுப் பு ணர்ச்சியை வைத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர , 35 வயதானவர்களால 26 வயதுடையை மனைவியுடன் பாலு றவு வைத்துக் கொள்ள இயலாது என்று சொல்லிவிட முடியா து.
எல்லாவற்றுக்கும் மேலாக, இருப்பதை க் கொண்டு சிறப்புடன் வாழும் இலக் கணத்தை க் கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கைத் துணை அமைவ தெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை அறிந்து, செயல்படுவதல் சிறப்பு.

1 comment: