jaga flash news

Sunday 18 November 2012

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் !


*இயற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தால் நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்லல் வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும்.
*உதாரணத்துக்கு எத்தனையோ விஷயங்கள பட்டியல் போட முடியும். இந்தக் கோதுமை இருக்கே கோதுமைல் அதுல உள்ள சக்தி, நிறைய நோய்களுக்கு தீர்வா இருக்குங்கறது தெரியுமோ?
*கோதுமையை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.
*இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு.
*இதைச் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தால் குடிக்கறத நிறுத்திடணும். வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பு ஏத்துக்கும்.
*பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பல் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.
*மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.
*தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

1 comment:

  1. அய்யா வெ.சாமி அவர்களே, கோதுமையில் அல்வா கிண்டிப் பாருங்கள், மிகவும் சுவையாக இருக்கும். கோதுமை திரித்த மாவில் அல்வா செய்வதைவிட கோதுமையை ஊறவைத்து ஆட்டி, பால் எடுத்து, சர்க்கரை பாகு காய்த்து, பாலை ஊற்றி கிளறிக்கொண்டே, அடியில் ஒட்டாதவாறு நெய் ஊற்றி, கிளறி, ஏலக்காய் பொடிசெய்து போட்டு, முந்திரிப்பருப்பு நீளவாக்கில் உடைத்துப்போட்டு (எஸன்ஸ் + கலர்பொடி விருப்பமுள்ளோர் சேர்க்கலாம்) அடிபிடிக்காமல் நெய் ஊற்றி கிளறிக்கொண்டே, அல்வாபதம் வரவும் இறக்கி சாப்பிட்டுப் பாருங்கள். சுவையின் மதிப்பு அதிகமாக இருக்கும். மற்றபடி தேங்காய்எண்ணெய் சேர்ப்பதெல்லாம் தேவையில்லை. நெய்யிலே கிளருங்கள். அது தான் ஒரிஜினல் அல்வா. செய்து பாருங்கள் தங்கள் வீட்டில்.

    ReplyDelete