jaga flash news

Sunday 16 December 2012

which is ultimate truth?


 எது உயர்ந்த உண்மை என்று சொல்லபடுகிறது ? - which is ultimate truth?


2.16 : உண்மையற்றது இருக்காது. உண்மையானது இல்லாமல் போகாது இந்த கருத்தை மகான்கள் உணர்ந்து இருகிறார்கள்.

2.17 : எதனால் இந்த உலகம் அனைத்தும் வியாப்பிக்கபட்டுள்ளதோ அது அழிவற்றது.என்பதை அறிந்துகொள். மாறாக அந்த ஒன்றை யாராலும் அழிக்க முடியாது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் , அர்ஜுனனிடம் உரையாடி கொண்டு இருக்கும் போது , அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உண்மையை கூறினார் .

அதாவது இந்த உலகம் எதனால் வியப்பிக்க பட்டு இருக்கிறதோ அது அழியாது என்று கூறினார். அது என்ன ?

அது தான் " ஆத்மா "

உதாரணமாக ஒரு வாகனத்தை எடுத்து கொள்வோம் . வாகனம் நான்கு சக்கரங்களை கொண்டு ஓடும். அந்த சக்கரத்தில் காற்று அடைக்க பட்டு இருக்கும்.

வண்டி ஓடி கொண்டே இருக்கும் . அதாவது வாகனத்தில் உள்ள சக்கரத்தில் உள்ளே காற்று இருக்கும் வரை வாகனம் ஓடி கொண்டே இருக்கும். 

அந்த வாகனத்தின் சக்கரத்தின் டியுப் பஞ்சர் ஆகி விட்டால் அந்த வாகனம் ஓடாது.

அதே போல் தான் ஜீவன்களும் ( மனிதர்களும் ).
மனித உடல் தான் வாகனம் . மனித உடலின் உள்ளே உள்ள இதயத்தில் இருக்கும் ஆத்மா தான் வாகனத்தின் சக்கரத்தின் டியுப் உள்ள காற்று.

டியுப் பஞ்சர் ஆகிவிட்டால் காற்று வெளியேறி , வெளியே உள்ள காற்றுடன் கலந்து விடும்.

அதே போல் மனித உடல் பழுதடைந்து விட்டால் ஆத்மா வெளியேறி விடும்.

மனித உடல் பழுதடைந்தால் அது செயல்களை இழந்த நிலையை அடையும். அந்த நிலையை மரணம் என்று அழைகின்றார்கள்.

மரணம் உடலுக்கு மட்டுமே தவிர ஆத்மா வெளியே இருக்கும். ஆத்மா வெளியேறும் போது அந்த உடலுடன் இருந்த போது செய்த அணைத்து கர்மத்தின் பாவ புண்ணியத்தையும் சுமந்து செல்லும்.

மேலும் ஐந்து புலன்களின் வாசனைகளையும் சுமந்து செல்லும்.

அதாவது ஒரு தெருவில் பூ விற்பவர் பூக்களை சுமந்து வந்து விற்பனை செய்வார். அவர் அந்த தெருவை விட்டு வெளியே சென்ற பிறகு கூட அந்த தெரிவில் பூவின் வாசனை இருக்கும், ஆனால் பூ இல்லை.

அதே போல மனித உடல் இறந்தாலும் அந்த உடலுடன் செய்யபட்ட அணைத்து கர்மத்தின் வாசனையும் ஆத்மா சுமந்து செல்லும்.

அடுத்த உடலை எடுத்து அதே பண்புகளுடன் மீண்டும் கர்மத்தை தொடரும்.

அதனால் தான் கெட்ட எண்ணம் கொண்டவன் அடுத்த பிறவியில் கெட்டவர்கள் மத்தியில் பிறந்து மீண்டும் கெட்ட கர்மங்களை செய்வான்.

நல்ல எண்ணம் உடையவர்கள் அடுத்த பிறவியில் நல்லவர்கள் மத்தியில் பிறந்து நல்ல கர்மங்களை செய்வார்கள்.

ஆனால் இறைவனை அடையவேண்டும் என்ற எண்ணத்துடன் அணைத்து கர்மங்களையும் செய்து கொண்டு ஆனால் அந்த செயலில் பற்று வைக்காமல் இருப்பவர்கள் . மீண்டும் அடுத்த பிறவியிலும் நல்ல பக்தி மான் மத்தியில் பிறந்து இறைவனை அடையும் பணியை தொடர்வார்கள்

1 comment: